அருமையான பதிவு மகேஸ்வரி.ஒரு வழியா தட்டு தடுமாறி சுமதி பயந்துட்டே உண்மைய சொல்ல,என்னை பார்த்த அன்னைக்கே உன் அண்ணன் சொல்லிட்டான் என சொல்லி அதிர்ச்சியை கொடுக்கறான்.
அனாதையாக இருந்த என்னை தேடி வந்த உறவு,ரெண்டு பேரும் என்னை விட்டு போக கூடாதுன்னு
தாலி கட்டினேன் என சொல்லும் தீனா,விதவையாக இருந்தாலும் ஏத்துட்டு இருப்பேன் என சொல்ல,
தனக்கென உண்மையான உறவுக்காக ஏங்கியவள்,சந்தோஷமாக தீனாவை ஏற்றுக்கொண்டாள்
தாடி,மீசையோட பார்த்தா நல்லா இல்லை உவ்வாக்கா.தேவி சொன்னதும் முடி வெட்ட கிளம்பிட்டானா.ரசாத்தி அம்மாவை இனி இட்லி கடை போட வேண்டாம் என சொன்னதோடு அம்மாவாக இங்கேயே இருக்கனும் என சுமதி இங்கேயே தங்க வச்சுட்டா.
குடும்பம் நடத்தற வீட்ல உட்கார்ந்து குடிக்கறதே தப்பு,இதுல அதிகாரம் வேற பண்றானுங்க.அடப்பாவிங்களா...சின்னபொண்ணு என பார்க்காம அடிச்சதும் இல்லாம,சுமதிட்ட அசிங்கமா பேசறாங்க என்ன ஜென்மங்களோ.சுமதியை வீட்டை விட்டு தள்ளப்போவதை பார்த்த தீனா என்ன செய்யப்போறான்.