Shakthimagizhvathani
Member
உள்ளம் கொள்ளை போகுதடா
சிவாவின் இல்லம்
தனக்கு பிடித்த ஷக்தியின் நகலை தன் குடும்பத்தாருக்கு ஷிவா காண்பித்த நேரம்
பரமேஸ்வரி: டேய் ஷிவா இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா டா , பேர் என்ன போட்டுருக்கு
ஷிவா : ஷக்தி மா
பரமேஸ்வரி : பாரேன் பேர் பொருத்தம் கூட என்ன அம்சமா இருக்கு
வைத்தியநாதன் : பொண்ணு CA படிச்சிருக்கு தனியா firm வெச்சிருக்குனு போட்டுருக்கு அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு
பரமேஸ்வரி : இதுல யோசிக்க என்னங்க இருக்கு படிப்பு கம்மினெல்லாம் பாக்காதீங்க , இந்த பொண்ண பாத்தா சின்ன வயசுல என்ன பாக்கற மாதிரியே இல்ல
அனைவரும் பே என்று முழிக்கும் நேரம் தெளிந்த வைத்தியநாதன்
வைத்தியநாதன்: அது எப்புடி பொண்ணு கம்மி படிப்பு னு சொல்லற நீ மழைக்கு கூட பள்ளிக்கூடம் போகாதவ
பரமேஸ்வரி : அது என்னங்க அப்படி சொல்லிடீங்க நம்ம ஷிவா மூணு எழுத்து படிப்பு EEE படிச்சிருக்கான் இந்த புள்ள ரெண்டு எழுத்து தான் பிடிச்சிருக்கு CA
வைத்தியநாதன் : உன் அறிவுல ஆணிய அடிக்க , இந்த புள்ள படிப்பு நம்ம பையன படிப்புக்கு எந்த வகையிலும் கொறஞ்சது இல்ல மா அது மட்டும் இல்லாம இந்த வயசுலே சொந்த கால்ல நிக்குது .
பரமேஸ்வரி : அப்போ வேலைக்கு போகுதுங்களா
வைத்தியநாதன்: அந்த புள்ள வேலைக்கு போனா உனக்கு என்ன பிரச்சன
பரமேஸ்வரி : பிரச்சன என்ன மருமக வந்ததுக்கு அப்புறம் அவ வீட்டை பாதிப்பா நான் நாலு இடம் சுத்தி பாக்கலாம் னு பாத்தன் வேலைக்கு போகுதுன்னா அது சரி பட்டு வரதுங்களே
வைத்தியநாதன் : ஷிவாக்கு இந்த பொண்ண புடிச்சி போச்சுன்னா என்ன பண்ணுவ
பரமேஸ்வரி : ஷிவா கண்ணா அம்மாக்கு புடிச்ச பொண்ண தான நீ கட்டிப்பன்னு சொன்ன
ஷிவா : இப்பவும் அதா தான் மா சொல்லறேன் . இவங்க தினமும் வேலைக்கு போகமாட்டாங்க வீட்ல இருந்துதான் வேலை பாப்பாங்க நீ எப்போ வேணும்னாலும் வெளிய போகலாம் நீயும் எத்தனை நாள் தான் வீட்டுலையே இருப்ப. அதனால எங்க அம்மா மாதிரி அழகா இருக்குற இந்த பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மா
வாயடைத்து நின்றார் பரமேஸ்வரி
வைத்தியநாதன் : டேய் நல்லவனே ரொம்ப அழகா உங்க அம்மாவை சமாளிச்சிட்ட டா, நீ கல்யாண வாழ்க்கை கு தயாராகிட்ட.
பரமேஸ்வரி : என்ன வசந்த் ஷர்மி நீங்க ஒன்னும் சொல்லமாடறீங்க.
வசந்த் : அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணுன்னு போட்டுருக்கு ரொம்ப செல்லமா வளதிருப்பாங்க , நம்ம குடும்பமோ கொஞ்சம் பெருசு அதான் ஒத்து வருமான்னு யோசிக்கிறான் மா.
ஷிவாவின் மனசாட்சி டேய் எத்தனை பேர் டா கெளம்பிருக்கீங்க ஏன் கல்யாணத்த நிறுத்த டேய் வசந்த் எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ உன்ன பாத்துக்கறேன்.
வைத்தியநாதன் :வசந்த் அப்படி பொதுவா நாம யாரப்பதியும் ஏடை போட கூடாது . ஏன் நீ கூட தான் அண்ணன் தங்கச்சியோட பொறந்தவன் நீ எதுக்காவது விட்டு குடுத்திருக்கியா இல்ல ஷர்மி தான் விட்டுகுடுத்திருக்கலா ஷிவா தான் எல்லாருக்காகவும் விட்டு குடுப்பான் .அவன் இதுவரைக்கும் வாய தொறந்து எனக்கு இது வேணும்னு எதுவுமே கேட்டதில்ல . இது அவன் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான முடிவு இதுல அவன் விருப்பம் தான் எனக்கு முக்கியம் . ஷிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா.
ஷிவா : நீங்க என்ன கேட்கவாறீங்க எனக்கு புரியுது பா ஒரு வேலை அவங்களுக்கு என்ன புடிக்கலான எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல பா . ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கணும் னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . ஆனா எனக்கு வரும் மனைவியின் எதிர்பார்ப்பை முடிந்த மட்டும் பூர்த்தி செய்ய நான் ஆசை படரன் அது ஷக்தி யா இருந்தாலும் சரி இல்ல வேற யாரா இருந்தாலும் சரி . என்னை நம்பி அவங்க வாழ்க்கையில என்ன இணைக்கிறாங்க அதுக்கு கூடுமான அளவு அவங்கள நான் நல்ல பாத்துபேன் பா.
பெருமை பொங்க மேட்ரிமோனி இல் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அழைத்த வைத்தியநாதன் அந்த பக்கம் எடுத்த ஷண்முகத்திடம் தங்கள் விவரங்களை கூறி உங்கள் குடும்பத்திற்கு பிடித்திருந்தால் பெண் பார்க்க எப்பொழுது வரவேண்டும் என்று கலந்து ஆலோசித்து கூறுமாறு சொல்லி அழைப்பை துண்டித்திருந்தார்.
வைத்தியநாதன் கூறி இருந்த விவரங்களை ஷண்முகம் லக்ஷ்மி இடமும் ஆனந்தி இடமும் அபிப்ராயம் கேட்க ஆனந்தி ஷிவா வின் விவரங்களை மேட்ரிமோனி இருந்து தருவித்து ஷண்முகம் லக்ஷ்மி இடம் காண்பித்தாள் . பார்ப்பதற்கு ஆறடிக்கு அதிகமான உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்த ஷிவா வை மிகவும் பிடித்துவிட்டது. ஷிவாவின் நகலை காண்பிக்க ஷக்தி யை அணுகிய ஆனந்தியிடம் வேண்டாம் என்று மறுத்துவிட்ட ஷக்தியை நினைத்து பெற்றோர்களுக்கு கவலையாய் இருந்தது. வைத்தியநாதனின் எண்ணுக்கு அழைத்த ஷண்முகம் வரும் ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளாக இருப்பதால் அன்றயே பெண் பார்க்க வருமாறு கூறி இருந்தார்.
அடுத்து பெண் பார்க்கும் படலத்தில் பார்க்கலாம்.
தொடரும்