ஹாய் பிரண்ட்ஸ்...இந்த கதை நிறைய பேர் படிச்சிருப்பீங்க.நம்ம பிரண்ட்ஸ் சிலர் கேட்டுக்கிட்டதால இங்க பதிவிடறேன்.முடிஞ்ச கதைன்னாலும் ஒவ்வொரு எபியா தினமும் போடறேன். துளி மையல் கொண்டேன் கதை திங்களிலிருந்து தொடராலாம்னு பார்க்கறேன்.இடையில கொஞ்சம் உடம்பு சரியில்லாம போச்சு.கிளைமேட் இங்க ரொம்ப மோசமா இருக்கு.சூரியனே கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது...ம்ம்ம்...என் கதை பெரிய கதையா போகும்..ஸோ இந்த கதைக்கு போகலாம்.. ரொம்ப நார்மலான கதை. சிம்பிளா இருக்கும்.ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம் என்பதையும் சொல்லிக்கொண்டு..
உலகம் ஒன்று தான்.ஆனால் அதில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்...அவர்கள் வாழும் சூழ்நிலையில் தான் எவ்வளவு மாறுபாடுகள்!
அடுத்த நொடி என்ன நடக்குமென்பது தெரியாமல் எத்தனை எத்தனையோ கனவுகளுடனும்,எதிர்கால திட்டங்களுடனும் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறமென்றால்,அன்றாட வாழ்க்கையில் கனவுகளோ,எதிர்பார்ப்போ அன்றி..ஏன் இப்படியெல்லாம் கூட வாழலாம் என்ற நினைப்புகள் கூட இல்லாமல் வாழும் ஜனங்கள் தான் இங்கு அதிகமே.
பிளாட்பாரம் நடைபாதைகளில் வாழும் மக்களுக்கும் சில ஆசைகள் உண்டு.அவை நிறைவேறுவதும் உண்டு.நிறைவேறாமல் போவதும் உண்டு.நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு.ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக்கிடப்பவர்களும் உண்டு..அவர்களில் சிலர் தான் இவர்கள்!!!
“அம்சு..அடியே அம்சு”கத்திக்கொண்டிருக்கும் பெண்ணின் குரலின் டெசிபல் கூடிக்கொண்டே போக,ஓடைக்கு பக்கத்தில் இருந்த சிறு குடிசை போன்ற அமைப்பில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்சவேணி.
“என்ன மசமசன்னு நிக்கறவ..இந்தா,இந்த துணிய கொண்டு போய் காயப்போடு”என்றவர் அவளின் அம்மா நீலவேணி.
“ஏம்மா,உனக்கு எத்தன வாட்டி தான் சொல்றது..இப்படி பாவாடைய கட்டிக்கிட்டு ஓடைல குளிக்காதன்னு! சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? ரோட்டோராம் எத்தன மனுஷ மக்க வந்து போயிட்டு இருக்காக..உனக்கு வெட்கமாவே இல்லையாம்மா...”-இறுதியில் தாயின் வெட்கத்தை பற்றி அறியும் உண்மையான ஆவலுடன் கேட்டு வைத்தாள்.
அதற்கு பரிசாக,பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து அவள் மேல் நீலவேணி வீச,சுதாரித்து நகர்ந்தவள்,”ஜஸ்ட் மிஸ்ஸு ”எனவும்,தீப்பார்வை பார்த்தவர்,
“ஒழுங்கா உள்ள போடி.பெருசா சொல்ல வந்துட்டா! ஒளிஞ்சு மறைஞ்சு குளிச்சு நீராடி ஆட்டம் போட உங்கப்பன் என்ன அடுக்குமாடி வீடா கட்டி வச்சிருக்கான்..இருக்க இடத்துக்கு தகுந்த மாதிரி வாழ்ந்துட்டு போகாம வேக்கானம் பேச வந்துட்டா”என்றபடி பாவாடையை பிழிந்துவிட்டு தோள் மேல் துண்டை போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் வந்து உடைமாற்ற தொடங்கியவர்,தன் பெண்ணின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ..
“அம்சு..நானும் உன்ன மாதிரித்தேன் வயசுப்புள்ளைல இருந்தேன்.லேசா இடுப்பு சேலை விலகினாக் கூட மனசு பதறிப்போயிடும்.ஆனா அதுக்காக எத்தன நாளைக்கு உடம்ப மறைச்சு சோறு துண்ண முடியும்.இங்க வயித்த காட்டுனா தான்.வயிறு நெம்பும்”என்று அமைதியாக ஆரம்பித்தவர்,இறுதியில் காட்டமாக சொல்லிவிட..மகளின் முகமோ கலங்கிப்போனது.
அதில் மனம் நொந்தவராய்,மகளை தாஜா செய்ய நினைக்கும் வேளையில்,“நீலு..நீலுக்குட்டி....எங்கடா இருக்க...”என்ற குரல் கேட்கவும், தலையில் அடித்துக்கொண்ட நீலவேணி,
“எத்தனையோ ஆம்பளைங்கள சமாளிச்சு வந்துட்டேன்டி அம்சு.ஆனா உங்கப்பன ஒண்ணும் பண்ண முடியல.எத்தன அடிச்சாலும்,வெக்கமே இல்லாம வந்துடறான்..நானும் பொம்பளைப்பிள்ள இருக்கியேன்னு தான், இத்தன நாளா அந்த ஆள விட்டு வைச்சிருக்கேன்.இல்லைன்னா அந்த ஆள் படுத்தற பாட்டுக்கு ராவோடு ராவா கொண்ணு புதைச்சிருப்பேன்”பேசியபடியே சேலையை உதறி கட்டியவர்,
“இந்தா வாரன்-யா..சும்மா ‘நய்நய்’-னு உசுரை எடுக்கறியே”என்றவர் தன் மணி பர்சிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து..
“இந்தாய்யா.இந்த அளவுக்கு தான் இன்னைக்கு குடிக்கணும்.மேல காசு கேட்டு வந்துடாத! ஷோ வேற குறைஞ்சுக்கிட்டே வருது.அந்த மேனேஜர் என்னன்னா..உன்னால முடியலைன்னா உம்பொண்ண அனுப்பி வைன்னு வித்தாரம் பேசறான்.அவன் கழுத்த திருகிப் போடணும்னு வெறிய, எப்படியோ நேத்து அடக்கிட்டு வந்துட்டேன்..நீ எங்க போனாலும்..சரியா இன்னைக்கு ராவைக்கு ஷோக்கு வந்துடணும்..இல்லைன்னா நாளைக்கு வூட்டுக்குள்ள விடமாட்டேன் பார்த்துக்க”விடாது பேசியபடி அளவாய் இருந்த அந்த சமையலறைக்குள் சென்று பாத்திரத்தை உருட்ட..என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுக்கியபடி அம்மாவையும்,அப்பாவையும் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்சவேணி.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே தன்னுடைய தகப்பன் சொக்கன் இப்படித்தான் என்று தெரிந்ததால் அவளுக்கு பெரிதாக கவலையெல்லாம் இல்லை.ஒருவேளை சொக்கன் குடித்துவிட்டு அவரது நண்பன் முனியனை போல் மனைவி மகளை அடித்து கொடுமை படுத்தியிருந்தால் கவலைப்பட்டிருப்பாளோ என்னவோ? சொக்கனோ தானுண்டு,தன் வேலையுண்டு என்று இருப்பதினால் அப்பா என்ற வகையில் அவரை இவளுக்கும் பிடிக்கத்தான் செய்கிறது.
குடிக்கிறார் என்பதற்காக வெறுப்பை காட்டிவிட முடியுமா? முகம் திருப்பத்தான் முடியுமா? இங்கே தன்னை சுற்றியுள்ள குடும்பங்களில் இல்லத்தலைவிகள் கூட உடல் நோவுக்காக மாலை வேளைகளில் மறைவிடங்களை கூட நாடாமல் வெட்ட வெளியிலையே கும்பலாக அமர்ந்து ராவாக சரக்கை ஊற்றி குடிப்பதை பார்த்து வருபவளாயிற்றே..
அதனாலையே சொக்கன் அவளுக்கு சொக்கத்தங்கமே என்ற போதிலும் சொக்கன் ஒன்றுக்குமே லாயக்கில்லாத பிறவி என்பதை அவளே ஒத்துக்கொள்ளத்தான் செய்வாள்.
மெதுவாக அவளுக்கென்று ஒதுக்கியிருந்த ஒரே ஒரு ஆள் மட்டுமே படுக்கக்கூடிய அவளது அறைக்கு...இல்லையில்லை அவளது இடத்திற்கு சென்று கதவை...ம்ஹூம்..சேலைத்திரையை விளக்கி உள்ளே சென்றவள் அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள்.
ஆளை அசரடிக்க வைக்கும் அழகெல்லாம் இல்லை. மாநிறம் தான்.அளவான கூந்தல் தான்.சராசரி உயரம் தான்..உயரத்திற்கேற்ற உடல்வாகு தான்.பத்தொன்பது வயது நிரம்பிய பருவச்சிட்டு என்பதால் அவளை ரூட் விட ஆட்கள் ஏராளமாய் இருக்கிறார்கள் தான்.இப்படி எத்தனையோ ‘தான்’ போட்டுக்கொண்டே போகலாம்.மொத்தத்தில் உங்களைப் போலவோ,இல்லையேல் உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணை போலவோ தான் இருப்பாள்.
படிப்போ பிளஸ் டூவை தாண்டவில்லை.நீலவேணிக்கு மகளை பெரிய டாக்டராகவும் கலெக்டராகவும் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை தான்.ஆனால் அவளோ படிப்பில் சுமாராகத்தான் இருந்தாள்.எல்லோருமே முதல் ரேன்க் மாணவர்களாகி விட முடியாதில்லையா.அதில் நீலவேணிக்கு வருத்தம் தான் என்றாலும்..’விதையொன்று விதைத்தால்,அந்த பயிரை தானே அறுவடை செய்ய முடியும்’ என்று பழமொழி சொல்லி..மகளும் தன்னைப்போல தான் என்று தேற்றிக்கொள்வார்..சொக்கனுக்கு மகள் என்ன படிக்கிறாள் என்பதிலெல்லாம் ஆர்வமில்லை.
அதிலும் இவர்களது பிழைப்பு ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதால் அம்சவேணி பெரும்பாலும் அவளுடைய பாட்டி வீட்டில் தான் இருப்பாள்.இப்போது கூட தீபாவளி விடுமுறைக்காக..அவள் வேலை செய்யும் மில்லில் லீவு விட்டிருப்பதால் இங்கே வந்திருக்கிறாள்.மற்றபடி அவளது வாசம் பாட்டி வீடு தான்.
மகளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ள நீலவேணி விரும்பாததே, அவள் பாட்டி வீட்டில் தங்குவதற்கான முக்கிய காரணம்.தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அவரது வாழ்க்கையே சர்க்கஸ் கூடாரம் என்றாகிவிட்டது.
அவ்வப்போது சில ஆட்களால் ஏற்படும் பிரச்னையை தவிர,வயிற்றுக்கு உணவிடும் இந்த தொழிலை மிகுந்த பணிவோடு தான் செய்து வருகிறார்.ஆனால் மகள் அவரைப்போல தைரியசாலி இல்லை. நான் இப்படித்தான் என்று அடித்துப்பேச தெரியாதவள் என்றே மகளை பற்றி எண்ணியிருந்ததால்,அவளை இன்னும் குழந்தையாகவே பாவித்து வந்தவர்,இப்போது மகளுக்கு திருமணத்திற்காக நல்ல மணமகனை தேடிக்கொண்டிருக்கிறார்.
நிறைய வரன்கள் வந்து கொண்டேயிருக்கிறது.ஆனால் நீலவேணிக்கு தான் பிடித்தமில்லை.அவரது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.அவரால் கொடுக்க முடிந்த சீர் செனத்திக்கு ஏற்ப வந்த வரன்களில் பத்தில் எட்டு பேர் குடிகார கனவான்கள் தாம்.மீதி இரண்டில் குடும்பம் சரியில்லாமல் இருந்தது...
1
உலகம் ஒன்று தான்.ஆனால் அதில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்...அவர்கள் வாழும் சூழ்நிலையில் தான் எவ்வளவு மாறுபாடுகள்!
அடுத்த நொடி என்ன நடக்குமென்பது தெரியாமல் எத்தனை எத்தனையோ கனவுகளுடனும்,எதிர்கால திட்டங்களுடனும் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் ஒரு புறமென்றால்,அன்றாட வாழ்க்கையில் கனவுகளோ,எதிர்பார்ப்போ அன்றி..ஏன் இப்படியெல்லாம் கூட வாழலாம் என்ற நினைப்புகள் கூட இல்லாமல் வாழும் ஜனங்கள் தான் இங்கு அதிகமே.
பிளாட்பாரம் நடைபாதைகளில் வாழும் மக்களுக்கும் சில ஆசைகள் உண்டு.அவை நிறைவேறுவதும் உண்டு.நிறைவேறாமல் போவதும் உண்டு.நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு.ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக்கிடப்பவர்களும் உண்டு..அவர்களில் சிலர் தான் இவர்கள்!!!
“அம்சு..அடியே அம்சு”கத்திக்கொண்டிருக்கும் பெண்ணின் குரலின் டெசிபல் கூடிக்கொண்டே போக,ஓடைக்கு பக்கத்தில் இருந்த சிறு குடிசை போன்ற அமைப்பில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்சவேணி.
“என்ன மசமசன்னு நிக்கறவ..இந்தா,இந்த துணிய கொண்டு போய் காயப்போடு”என்றவர் அவளின் அம்மா நீலவேணி.
“ஏம்மா,உனக்கு எத்தன வாட்டி தான் சொல்றது..இப்படி பாவாடைய கட்டிக்கிட்டு ஓடைல குளிக்காதன்னு! சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா? ரோட்டோராம் எத்தன மனுஷ மக்க வந்து போயிட்டு இருக்காக..உனக்கு வெட்கமாவே இல்லையாம்மா...”-இறுதியில் தாயின் வெட்கத்தை பற்றி அறியும் உண்மையான ஆவலுடன் கேட்டு வைத்தாள்.
அதற்கு பரிசாக,பக்கத்தில் இருந்த சொம்பை எடுத்து அவள் மேல் நீலவேணி வீச,சுதாரித்து நகர்ந்தவள்,”ஜஸ்ட் மிஸ்ஸு ”எனவும்,தீப்பார்வை பார்த்தவர்,
“ஒழுங்கா உள்ள போடி.பெருசா சொல்ல வந்துட்டா! ஒளிஞ்சு மறைஞ்சு குளிச்சு நீராடி ஆட்டம் போட உங்கப்பன் என்ன அடுக்குமாடி வீடா கட்டி வச்சிருக்கான்..இருக்க இடத்துக்கு தகுந்த மாதிரி வாழ்ந்துட்டு போகாம வேக்கானம் பேச வந்துட்டா”என்றபடி பாவாடையை பிழிந்துவிட்டு தோள் மேல் துண்டை போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் வந்து உடைமாற்ற தொடங்கியவர்,தன் பெண்ணின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ..
“அம்சு..நானும் உன்ன மாதிரித்தேன் வயசுப்புள்ளைல இருந்தேன்.லேசா இடுப்பு சேலை விலகினாக் கூட மனசு பதறிப்போயிடும்.ஆனா அதுக்காக எத்தன நாளைக்கு உடம்ப மறைச்சு சோறு துண்ண முடியும்.இங்க வயித்த காட்டுனா தான்.வயிறு நெம்பும்”என்று அமைதியாக ஆரம்பித்தவர்,இறுதியில் காட்டமாக சொல்லிவிட..மகளின் முகமோ கலங்கிப்போனது.
அதில் மனம் நொந்தவராய்,மகளை தாஜா செய்ய நினைக்கும் வேளையில்,“நீலு..நீலுக்குட்டி....எங்கடா இருக்க...”என்ற குரல் கேட்கவும், தலையில் அடித்துக்கொண்ட நீலவேணி,
“எத்தனையோ ஆம்பளைங்கள சமாளிச்சு வந்துட்டேன்டி அம்சு.ஆனா உங்கப்பன ஒண்ணும் பண்ண முடியல.எத்தன அடிச்சாலும்,வெக்கமே இல்லாம வந்துடறான்..நானும் பொம்பளைப்பிள்ள இருக்கியேன்னு தான், இத்தன நாளா அந்த ஆள விட்டு வைச்சிருக்கேன்.இல்லைன்னா அந்த ஆள் படுத்தற பாட்டுக்கு ராவோடு ராவா கொண்ணு புதைச்சிருப்பேன்”பேசியபடியே சேலையை உதறி கட்டியவர்,
“இந்தா வாரன்-யா..சும்மா ‘நய்நய்’-னு உசுரை எடுக்கறியே”என்றவர் தன் மணி பர்சிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து..
“இந்தாய்யா.இந்த அளவுக்கு தான் இன்னைக்கு குடிக்கணும்.மேல காசு கேட்டு வந்துடாத! ஷோ வேற குறைஞ்சுக்கிட்டே வருது.அந்த மேனேஜர் என்னன்னா..உன்னால முடியலைன்னா உம்பொண்ண அனுப்பி வைன்னு வித்தாரம் பேசறான்.அவன் கழுத்த திருகிப் போடணும்னு வெறிய, எப்படியோ நேத்து அடக்கிட்டு வந்துட்டேன்..நீ எங்க போனாலும்..சரியா இன்னைக்கு ராவைக்கு ஷோக்கு வந்துடணும்..இல்லைன்னா நாளைக்கு வூட்டுக்குள்ள விடமாட்டேன் பார்த்துக்க”விடாது பேசியபடி அளவாய் இருந்த அந்த சமையலறைக்குள் சென்று பாத்திரத்தை உருட்ட..என்ன செய்வது என்றே தெரியாமல் விழி பிதுக்கியபடி அம்மாவையும்,அப்பாவையும் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்சவேணி.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே தன்னுடைய தகப்பன் சொக்கன் இப்படித்தான் என்று தெரிந்ததால் அவளுக்கு பெரிதாக கவலையெல்லாம் இல்லை.ஒருவேளை சொக்கன் குடித்துவிட்டு அவரது நண்பன் முனியனை போல் மனைவி மகளை அடித்து கொடுமை படுத்தியிருந்தால் கவலைப்பட்டிருப்பாளோ என்னவோ? சொக்கனோ தானுண்டு,தன் வேலையுண்டு என்று இருப்பதினால் அப்பா என்ற வகையில் அவரை இவளுக்கும் பிடிக்கத்தான் செய்கிறது.
குடிக்கிறார் என்பதற்காக வெறுப்பை காட்டிவிட முடியுமா? முகம் திருப்பத்தான் முடியுமா? இங்கே தன்னை சுற்றியுள்ள குடும்பங்களில் இல்லத்தலைவிகள் கூட உடல் நோவுக்காக மாலை வேளைகளில் மறைவிடங்களை கூட நாடாமல் வெட்ட வெளியிலையே கும்பலாக அமர்ந்து ராவாக சரக்கை ஊற்றி குடிப்பதை பார்த்து வருபவளாயிற்றே..
அதனாலையே சொக்கன் அவளுக்கு சொக்கத்தங்கமே என்ற போதிலும் சொக்கன் ஒன்றுக்குமே லாயக்கில்லாத பிறவி என்பதை அவளே ஒத்துக்கொள்ளத்தான் செய்வாள்.
மெதுவாக அவளுக்கென்று ஒதுக்கியிருந்த ஒரே ஒரு ஆள் மட்டுமே படுக்கக்கூடிய அவளது அறைக்கு...இல்லையில்லை அவளது இடத்திற்கு சென்று கதவை...ம்ஹூம்..சேலைத்திரையை விளக்கி உள்ளே சென்றவள் அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள்.
ஆளை அசரடிக்க வைக்கும் அழகெல்லாம் இல்லை. மாநிறம் தான்.அளவான கூந்தல் தான்.சராசரி உயரம் தான்..உயரத்திற்கேற்ற உடல்வாகு தான்.பத்தொன்பது வயது நிரம்பிய பருவச்சிட்டு என்பதால் அவளை ரூட் விட ஆட்கள் ஏராளமாய் இருக்கிறார்கள் தான்.இப்படி எத்தனையோ ‘தான்’ போட்டுக்கொண்டே போகலாம்.மொத்தத்தில் உங்களைப் போலவோ,இல்லையேல் உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணை போலவோ தான் இருப்பாள்.
படிப்போ பிளஸ் டூவை தாண்டவில்லை.நீலவேணிக்கு மகளை பெரிய டாக்டராகவும் கலெக்டராகவும் பார்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை தான்.ஆனால் அவளோ படிப்பில் சுமாராகத்தான் இருந்தாள்.எல்லோருமே முதல் ரேன்க் மாணவர்களாகி விட முடியாதில்லையா.அதில் நீலவேணிக்கு வருத்தம் தான் என்றாலும்..’விதையொன்று விதைத்தால்,அந்த பயிரை தானே அறுவடை செய்ய முடியும்’ என்று பழமொழி சொல்லி..மகளும் தன்னைப்போல தான் என்று தேற்றிக்கொள்வார்..சொக்கனுக்கு மகள் என்ன படிக்கிறாள் என்பதிலெல்லாம் ஆர்வமில்லை.
அதிலும் இவர்களது பிழைப்பு ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதால் அம்சவேணி பெரும்பாலும் அவளுடைய பாட்டி வீட்டில் தான் இருப்பாள்.இப்போது கூட தீபாவளி விடுமுறைக்காக..அவள் வேலை செய்யும் மில்லில் லீவு விட்டிருப்பதால் இங்கே வந்திருக்கிறாள்.மற்றபடி அவளது வாசம் பாட்டி வீடு தான்.
மகளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ள நீலவேணி விரும்பாததே, அவள் பாட்டி வீட்டில் தங்குவதற்கான முக்கிய காரணம்.தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ அவரது வாழ்க்கையே சர்க்கஸ் கூடாரம் என்றாகிவிட்டது.
அவ்வப்போது சில ஆட்களால் ஏற்படும் பிரச்னையை தவிர,வயிற்றுக்கு உணவிடும் இந்த தொழிலை மிகுந்த பணிவோடு தான் செய்து வருகிறார்.ஆனால் மகள் அவரைப்போல தைரியசாலி இல்லை. நான் இப்படித்தான் என்று அடித்துப்பேச தெரியாதவள் என்றே மகளை பற்றி எண்ணியிருந்ததால்,அவளை இன்னும் குழந்தையாகவே பாவித்து வந்தவர்,இப்போது மகளுக்கு திருமணத்திற்காக நல்ல மணமகனை தேடிக்கொண்டிருக்கிறார்.
நிறைய வரன்கள் வந்து கொண்டேயிருக்கிறது.ஆனால் நீலவேணிக்கு தான் பிடித்தமில்லை.அவரது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.அவரால் கொடுக்க முடிந்த சீர் செனத்திக்கு ஏற்ப வந்த வரன்களில் பத்தில் எட்டு பேர் குடிகார கனவான்கள் தாம்.மீதி இரண்டில் குடும்பம் சரியில்லாமல் இருந்தது...