ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser
ப்ரதீபனின் உதவியோடு இலங்கைக்கு அழைத்து வீட்டாரோடு பேசி இருந்தாள் கயல்விழி. ஐந்து வருடங்களாக தொடர்ப்பில் இல்லாமல் இருந்த மகள் திடீரென போன் பண்ணவும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவர்கள் வசைபாடவும் மறக்கவில்லை.
எல்லா உண்மையையும் சொல்லாது பிரதீபன் சொன்னது போல் ரிஷிக்கு ஆக்சிடன்ட் ஆனதாகவும், திலகாவை பற்றியும், அவளின் நிலையை பற்றியும் எடுத்துக் கூற மங்கம்மா அழுது கரைய அவளை புரிந்துக் கொண்டு சீதாதான் பேசினாள்.
தனவேந்தனின் அலைபேசிக்கு வீடியோ கால் செய்து அனைவரையும் கண்டுமகிழ்ந்தவள் ஸ்ரீராமை அறிமுகப்படுத்தி வைக்க எந்தநாளும் ஸ்ரீராமுக்கு வீடியோ அழைப்பு இயலிடமிருந்து வந்தது. "சித்தி சித்தி" என்று செல்லம் கொஞ்சி ஸ்ரீராம் பேச அங்கே தனவேந்தன் தான் முறைத்துக் கொண்டு நின்றான்.
இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் வயதும் சரி ஆனால் யாழிசை என்னவானாள் என்று அறியாமல் யாரும் அதை பற்றி பேசாதிருக்க, யாழிசையை பற்றியாவது தன்னோடு பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுதெல்லாம் ஸ்ரீராமோடு ஒன்றிவிட கடுப்பில் கரைந்தான் அவன். அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இயல் இல்லை.
"அக்கா உன் பேரு கயல். என் பேரு இயல் நல்லா இருக்கில்ல" சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தவள் "ஊருக்கு வரமாட்டியா?" சோகமான குரலில் கேக்க
"கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு வரேன்" கயல்விழி சத்தியம் செய்யாத குறையாக சொல்ல அதன் பின் தான் அவளை விட்டாள்.
கமரை பற்றி விசாரிக்க அவளுக்கு கல்யாணம் ஆகி ஆண், ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகள் இருப்பதாகவும் நல்லா இருப்பதாகவும். கூடவே ஜகத் இராணுவத்தில் சேர்ந்து விட்டான் என்று இயல் தகவல் கொடுத்தாள்.
அன்று நடந்த சம்பவத்தை மறக்காமல் தங்கை இன்றும் இரகசியமாக ஜகத் பற்றி சொன்னதை நினைக்கையில் கயல்விழிக்கு சிரிப்பாகவும் இருந்தது.
வாரத்துக்கு ஒரு தடவை திவ்யாவுக்கு அழைத்து பேசிவிடுபவள் அங்கு நடப்பவற்றையும், போடிக்கை பற்றியும், தோட்டத்தை பற்றியும் விசாரித்து என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்வாள். இடையில் திவ்யாவுக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்க சொல்லி கயலுக்கு அழைத்தும் விடுவாள்.
ப்ரதீபனின் உதவியோடு இலங்கைக்கு அழைத்து வீட்டாரோடு பேசி இருந்தாள் கயல்விழி. ஐந்து வருடங்களாக தொடர்ப்பில் இல்லாமல் இருந்த மகள் திடீரென போன் பண்ணவும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தவர்கள் வசைபாடவும் மறக்கவில்லை.
எல்லா உண்மையையும் சொல்லாது பிரதீபன் சொன்னது போல் ரிஷிக்கு ஆக்சிடன்ட் ஆனதாகவும், திலகாவை பற்றியும், அவளின் நிலையை பற்றியும் எடுத்துக் கூற மங்கம்மா அழுது கரைய அவளை புரிந்துக் கொண்டு சீதாதான் பேசினாள்.
தனவேந்தனின் அலைபேசிக்கு வீடியோ கால் செய்து அனைவரையும் கண்டுமகிழ்ந்தவள் ஸ்ரீராமை அறிமுகப்படுத்தி வைக்க எந்தநாளும் ஸ்ரீராமுக்கு வீடியோ அழைப்பு இயலிடமிருந்து வந்தது. "சித்தி சித்தி" என்று செல்லம் கொஞ்சி ஸ்ரீராம் பேச அங்கே தனவேந்தன் தான் முறைத்துக் கொண்டு நின்றான்.
இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் வயதும் சரி ஆனால் யாழிசை என்னவானாள் என்று அறியாமல் யாரும் அதை பற்றி பேசாதிருக்க, யாழிசையை பற்றியாவது தன்னோடு பேசிக் கொண்டிருந்தவள் இப்பொழுதெல்லாம் ஸ்ரீராமோடு ஒன்றிவிட கடுப்பில் கரைந்தான் அவன். அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இயல் இல்லை.
"அக்கா உன் பேரு கயல். என் பேரு இயல் நல்லா இருக்கில்ல" சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தவள் "ஊருக்கு வரமாட்டியா?" சோகமான குரலில் கேக்க
"கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு வரேன்" கயல்விழி சத்தியம் செய்யாத குறையாக சொல்ல அதன் பின் தான் அவளை விட்டாள்.
கமரை பற்றி விசாரிக்க அவளுக்கு கல்யாணம் ஆகி ஆண், ஒன்று பெண் ஒன்று என்று இரு குழந்தைகள் இருப்பதாகவும் நல்லா இருப்பதாகவும். கூடவே ஜகத் இராணுவத்தில் சேர்ந்து விட்டான் என்று இயல் தகவல் கொடுத்தாள்.
அன்று நடந்த சம்பவத்தை மறக்காமல் தங்கை இன்றும் இரகசியமாக ஜகத் பற்றி சொன்னதை நினைக்கையில் கயல்விழிக்கு சிரிப்பாகவும் இருந்தது.
வாரத்துக்கு ஒரு தடவை திவ்யாவுக்கு அழைத்து பேசிவிடுபவள் அங்கு நடப்பவற்றையும், போடிக்கை பற்றியும், தோட்டத்தை பற்றியும் விசாரித்து என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்வாள். இடையில் திவ்யாவுக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்க சொல்லி கயலுக்கு அழைத்தும் விடுவாள்.