banumathi jayaraman
Well-Known Member
flashback பானுமா இல்லனா ரிஷி வந்துட்டான்னு சந்தோசப் பட்டு ஏமாந்து கட்டயால என் மண்டைய பொளந்துடுவாங்க.
i vl check tnq u
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser {flashback}
"அக்கா ஜகத் அண்ணா உனக்கு லெட்டர் கொடுத்தாரா?"
தங்கை கேட்ட கேள்வியில் விதிர் விதைத்து போனாள் யாழிசை
"இப்போ எதுக்கு இவ இதை கேக்குறா?" மனம் அடிக்க "எதுக்கு இப்போ வீண் பேச்சு" தங்கையை அதட்ட இயலும் விடுவதாய் இல்லை.
"கமர் அக்காவ பொண்ணு பக்க வந்திருக்கும் போது இந்த ஜகத் அண்ணா இல்ல... நல்....லா குடிச்சிட்டு போய் அவரு கமர் அக்காவ லவ் பண்ணுறதாகவும் உன் கிட்ட கடிதம் கொடுத்து விட்டதாகவும் சொல்லி ரகள பண்ணிட்டாரு. ராஷித் அண்ணா ஜகத்தை போட்டு அடிக்க, அவங்க அப்பா மாப்புள வீட்டார் முன்னாடி கமர் அக்காவ பெல்ட்டாளையே விளாசிட்டாரு"
"ஐயோ....... கோவில்ல சாமி கும்பிட்டு வெளிய வரும் போது அந்த லூசு கைல கடிதத்தை திணிச்சுட்டு போய்ட்டான். பாவம் கமர் அவளுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது"
யாழிசையின்
பேச்சில் குறுக்கிட்டு தோழிக்காக மனம் வருந்தலானாள் யாழிசை.
"அந்த லெட்டரை அவரு உனக்கு கொடுத்ததாக நீ நினைச்சி இருப்பான்னு உன்ன வேற கண்ட படி பேசிட்டான் கா... ஆமா அந்த லெட்டர் என்ன ஆச்சு?" இயல் ஆர்வமாக கேக்க
தன் கணவன் தான் அதை பிடுங்கி எடுத்தான். இன்று வரை அந்த ஜகத்தை சம்பந்த படுத்தி பேசி கிட்டு இருக்கான் என்று சொல்ல முடியாமல் தொண்டையடைக்க மௌனமானாள்.
ஜகத்தின் பெயர் சொன்னதும் ரிஷியின் புலன்கள் விழித்துக் கொள்ள இயல் சொன்ன தகவலில் தன்னையே நொந்து கொண்டான்.
"பாவம் டி கமர் பொண்ணு பாக்க வந்தவங்க என்ன நினைச்சி இருப்பாங்களோ" மேலும் வருந்த
"வந்த மாப்புள அவங்க அப்பாவை அடிக்க விடாம ஜகத் கிட்ட விசாரிக்காம கமர் அக்காவையே கேள்வி கேட்டு இருக்குறாரு"
"ஐயோ..."
"இருக்கா சொல்லி முடிச்ச பிறகு கத்து" கடுப்பானவள் கதை சொல்ல "அவங்க பயந்து அழுது கிட்டே இத பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லி இருக்காங்க, அவரும் இந்த பொண்ண தான் கட்டுவேன்னு உறுதியா சொல்லிட்டாரு. அவரு அம்மாவும் நல்லவங்களா இருப்பாங்க போல ஆறுதலா பேசிட்டு போய் இருக்காங்க, சூப்பர் சினிமா பாத்தா மாதிரி ஊரெல்லாம் இதே பேச்சு தான்" சந்தோசமா இயல் முடிக்க,
தங்கை சொன்ன விதத்தில் நிம்மதியாக சிரித்தாள் குழலி.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரிஷிக்குத்தான் என்ன பேசுவதென்றே புரியவில்லை. எங்கே யாழ் யாரையாவது விரும்பி இருப்பாளோ! அவனுடைய பணத்தையும், வசதியையும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணாலோ! என்றிருந்த