அருமையான பதிவு லதா பைஜூ
.விக்ரம்,இளாவிடம் யாரும் இல்லாத எனக்கு எல்லா உறவுகளும் உன் மூலமா கிடைச்ச சந்தோஷப்படுவேன் என சொல்பவன்,உனக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருப்பதாக சொன்னது போல,காத்திருந்து திருமணமும் செய்துட்டான்
விக்ரம் அவன் விரும்பியபடி சப் இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தாச்சு
.விக்ரம் பிறந்தநாள்
கொண்டாட்டத்தை இளா சிறப்பா செய்ததோடு,அவனோடு சேர்ந்து வாழத் தொடங்கிட்டா
வீணாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது மகிழ்ச்சி
.சத்யா செஞ்ச துரோகத்தினால் தான் யார்
என தெரியாமல் நடந்ததை மறந்திருக்கும் வினோதினிக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கலாம்
.
கதை தொடங்கும் போது விக்ரம் காலேஜில் அடிதடி என இருப்பவன்,இளாவின் மனதில் ரௌடியாக
தெரிய
,சத்யா நல்லவனாக,இளா மேல் பிரியமாக இருக்க,அத்தானை உயிராக நினைப்பவள் என கதைசெல்ல,இளா,சத்யா திருமணம் நிச்சயமானதும் நடப்பது எதிர்பாராத திருப்பங்கள்
ஊருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து மனைவி,மகள் என இருக்கும் சத்யா
,உண்மை தெரிந்ததால் வினோதினி குழந்தையை கொல்ல முயல்வது
,அடிபட்டவர்களை காப்பாற்றும் விக்ரம் அவர்கள் யார் என தெரிந்து திருமணத்தை நிறுத்துவானா என விறுவிறுப்பான பதிவு
.
சொத்துக்காக சத்யா வேஷம் போட்டதை தெரிந்து கொண்ட இளமாறனை,தன்னை வளர்த்தவர் என நினைக்காமல் மனசாட்சி இல்லாமல் கொல்வது,இளமாறன் நிலை கண்கலங்க வைக்குது
.
சத்யாவின் சுயரூபத்தை இளாவிடம் நிரூபிக்க போராடும் விக்ரம்,உண்மை தெரிந்து குடும்பத்தாரின் அதிர்ச்சி
.விக்ரம் காதலை புரிந்து கொண்ட இளா,விக்ரமை மணந்து கொள்வது அருமை..
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.அழகான கவிதைகளுடன்.நிறைவான முடிவு
படிக்காதவர்களுக்காக கதையை ரீரன் செய்ததற்கு நன்றி லதா பைஜூ
.