மிகவும் அருமையான பதிவு மிலா
.அதீ,மஞ்சரிக்கு குட்டி தேவதை பொறந்திருக்கு
.
சங்கரன் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் கம்பெனி ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்து கொண்டாடிட்டார்
.
சூழ்நிலை காரணமாக தாலி கட்டியதால் ஆனந்துக்கு தன்னை பிடிக்குமா இல்லையான்னு அனிக்கு சந்தேகம்
.அனிய காப்பாத்தறதுக்காக யோசிக்காம தாலி கட்டுனதுலேயே ஆனந்துக்கு அனிய பிடிக்கும்னு புரியலையா
.
குழந்தையை பார்த்ததும் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என ஆனந்த் ஆசைப்பட,தன்னை போல இருப்பாளோ என அனி பயப்படுவதும்,எப்படி இருந்தாலும் நம்ம குழந்தை என ஆனந்த்,அனியை சமாதானம் செய்வது அருமை
.
அக்ஷரா,ஸ்டீவிடம் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி ஒரு வருடமாக பதில் சொல்லாதவனை அவளை தேடி வரும்படி செய்வதுடன்,தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக வெறுப்பேற்றுவது, வேஷ்டி கட்ட சொல்வது என அவனை வச்சு செய்யறா
.
ஸ்டீவ் இப்போது அதீ கம்பெனியில் பாட்னரா சூப்பர்
.அதீ குடும்பத்துடன்,மஞ்சரி குடும்பத்தாரும் சேர்ந்து ஸ்டீவ் கல்யாண வேலைகளை செய்ய,ஊர் கோவிலில் ஸ்டீவ்,அக்ஷரா திருமணம் சிறப்பாக நடந்தது
.
ஒவ்வொருவருக்கும் இதயத்தில் காதல் பூத்ததை பற்றி சொன்ன விதம் அருமை
.மஞ்சரி தான் பட்ட துன்பங்கள் கடந்து அதீ,குட்டி தேவதையுடன் மகிழ்ச்சியான வாழ்வு
.
அர்ஜூன் வரும் போது வாகைக்கு பரிசு கொண்டு வர்றதா சொன்னான்
.அவன் வருவதுக்குள்
கதைய முடிச்சுட்டீங்க
.கிருஷ்ணாவுக்கு ஜோடி இல்லையா
.எபிலாக் இருக்கா மிலா
. அருமையான கதை.வாழ்த்துக்கள் மிலா
.