surthi
Well-Known Member
அவனை முறைத்து கொண்டே தன் போனை எடுத்து அதில் ஒரு காணொளியை ஓட விட்டான்
இவர்கள் மூவரும் காணொளியை காண ரிஷி மட்டும் ஆனால் அந்த நாள் ஞாபகத்திற்கு சென்றான்
எல்லோரும் ஹிமாலயாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது வெளிநாட்டவர்கள் தனியாக ஒரு பகுதிக்குச் செல்ல ரிஷியும் ராமும். தனியாக நின்றனர்
திடீரென்று ஒரு குரல்
“உன் தந்தை செய்த அதே தவறை செய்யும் மூடனே!....”
என்றது
அக்குரல் வந்த திசையை நோக்கி ரிஷி திரும்பினான்
ராமோ எதையோ தன் போனில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தான் அதனால் இவன் மட்டும் திரும்பி பார்த்தான் அங்கு ஒரு சிவதவசி உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு சூலத்தில் உடுக்கையோடு அவனை நோக்கி வந்தார்
வந்தவர் அவனை நோக்கி கூறியது
“நீ விரும்பியது ஒருத்தி
நீ தேடுவது ஒருத்தி
விதியின் ஆட்டத்தால்
வேறு ஒருத்தி நீ
தேடும் முகம்
கொண்டு இருக்க
உன்னைக் காக்க
உயிர் துறந்தாள் ஒருத்தி
உயிர் துறந்தவள்
நிம்மதியின்றி அலைய
உயிரோடு இருப்பவள்
உன்னை மறந்து
உன் உயிரை சுமந்து
அலைய நீ இருக்கிறாய்
கண்ணை மூடி உன்
தந்தையை அழித்த
சதி என்னும் எமன்
உன்னையும் அழிக்க
உன்னை தொடர்கிறது
சதியாகவும் மதியாகவும்
உன்னை வெல்ல அதை
தடுக்க தன்னையே
கவசமாக மாற்றிக்
கொண்டாள் ஒருவள்
உன் குலத்தையும்
உன் காதலையும் காப்பாற்ற
போராடி கொண்டிருக்கிறாள்
அவள் உன்னோடு
ஜென்ம ஜென்மமாக
தொடரும் உன்னதமான
உறவிற்காக போராடுகிறாள்
காரணம் முற்பிறவியில்
நீ ஒருத்தியின் நட்பிற்காக
போராட மற்றொருத்தி
உன் காதலுக்காக
போராடினாள் இப்பிறவியில்
உன் நட்பாக இருந்தவள்
உன் எல்லாவற்றுக்காகவும்
போராடுகிறாள் இனியாவது
விழித்துக் கொள்!
விழித்துக் கொள்!
விழித்துக் கொள் மூடனே!
இனியும் நீ கண்ணிருந்தும்
குருடனாய் இருந்தாய் ஆனால்
உன் குலத்திற்கு
வரமான நட்பை தீரா
சாபமாக மாற்றியதற்கும்
உன் குலத்தின் அழிவிற்கும்
நீயே காரணமாக
கடவாய் மூடனே! இது எம் அப்பன் ஈசனின் வாக்கு!........”
இதை கண்டும் கேட்டும் சித்தும் க்ரிஷ்வந்தும் ஒன்றும் புரியாமல் முழித்தனர்
அவர் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் இப்போது நீங்கள் முழிப்பதை போல்தான் நானும் ராமும் முழித்துக் கொண்டிருந்தோம் ராம் தான் முதலில் சுதாரித்து என்னை அழைத்து வந்தான் அன்று மட்டும் ராம் இல்லையென்றால் நான் என்ன செய்து இருப்பேன் என்றே தெரியாது ஆனால் அவர் சொன்ன வரிகள் மட்டும் எப்படி என் மனதில் அச்சு பிசகாமல் பதிந்தது அது எவ்வாறு இது நாள் வரை ஞாயபகம் இருக்கிறது என்பது எனக்கே புரியாத புதிர் தான்
அப்போது தான் க்ரிஷின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த ரிஷி க்ரிஷை அழைத்தான்
க்ரிஷ்
க்ரிஷ்
க்ரிஷ்……………
ஆங்
கிழிஞ்சுது போ-ராம்
ரிஷி ராமை முறைத்தான்
ராம் வாயை தன் கையால் மூடிக்கொண்டான்
என்னாச்சு க்ரிஷ் உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் கவனம் இங்கு இல்லையே ஏன் – ரிஷி
அண்ணா அது வந்து அது வந்து.,….- க்ரிஷ்
அதான் வந்துட்டல சீக்கரம் விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு கிளம்பு – ராம்
இப்போது மூவரும் அவனை முறைத்தனர் சித் ஒரு படி மேலே சென்று. டேபிளில் இருந்த பிளஸ் திரியை எடுத்து கொண்டு ராமை நெருங்கிச் சென்றான் இதை கண்ட ராம் பின் வாங்கி கொண்டே பேச்சு பேச்சா இருக்கனும் நோ வேப்பன்ஸ் என்றான்
இனி நீ சும்மா குறுக்க பேசின இத வாயில கைல காலுல கட்டி இங்கேயே ஒருவாரம் சாப்பாடு தண்ணி இல்லாம இருனு விட்டுட்டு போய்டுவோம் என்று மிரட்டினான்
ராம் இதை கேட்டு அமைதியாகி விட்டான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவன் எகிறி கொண்டு சண்டையிட சென்றவன் ரிஷியின் ராம் என்ற ஒற்றை சொல்லில் அடங்கி அமைதியானான்
பின் ரிஷி க்ரிஷ் பக்கம் திரும்பினான்
தான் பதில் சொல்ல வேண்டியதை உணர்ந்த க்ரிஷ்
அண்ணா நானும் இவர பாத்தேன்– க்ரிஷ்
என்ன இந்த சிவன் அடியார நீ பார்த்தைய எப்போ எப்படி. என்ன சொன்னார் -ராம்(ஆம் ராமிற்கு இதில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை உண்டு)
ஆமாம் ராம் ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன்பு- க்ரிஷ்
நான் ஒரு ஆப்ரேஷனுக்காக மதுரை போய்ருந்தேன் அப்போ என்னோட கோலீக் மதுரைக்கு வந்தது தான் வந்தோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு ஊருக்குத் திரும்பலாமே என்றார் நானும் சரி யென்று அவர்களுடன் இணைந்து சென்றேன்
அங்கு இவர் தீடிரென்று என் முன் வந்து ரிஷி அண்ணாவிடம் கூறியது போல் என்னிடமும் ஒன்றை கூறினார் எனக்கு அது இன்னமும் நினைவு இருக்கிறது அதை வைத்து தான் நான் அனுவை கண்டுபிடித்தேன் அது
“முக்கடல் சங்கமிக்கும் இடமாம்
எம் தாய் கன்னியாய் அவதரித்தவள்
வீற்றிருக்கும் இடமாம் அங்கு செல்
நீ தேடுவது கிடைக்கும் காலம் கடக்கும்
முன் செல் நீ தேடுவது பல உயிர்களைக்
காக்க வல்லது செல் சீக்கிரம் செல்!!!!!!!!!!!!!!!”
அவர் சொன்னது இதுதான் அண்ணா
இவர்கள் மூவரும் காணொளியை காண ரிஷி மட்டும் ஆனால் அந்த நாள் ஞாபகத்திற்கு சென்றான்
எல்லோரும் ஹிமாலயாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது வெளிநாட்டவர்கள் தனியாக ஒரு பகுதிக்குச் செல்ல ரிஷியும் ராமும். தனியாக நின்றனர்
திடீரென்று ஒரு குரல்
“உன் தந்தை செய்த அதே தவறை செய்யும் மூடனே!....”
என்றது
அக்குரல் வந்த திசையை நோக்கி ரிஷி திரும்பினான்
ராமோ எதையோ தன் போனில் காணொளி எடுத்துக் கொண்டிருந்தான் அதனால் இவன் மட்டும் திரும்பி பார்த்தான் அங்கு ஒரு சிவதவசி உடல் முழுதும் சாம்பலைப் பூசிக்கொண்டு சூலத்தில் உடுக்கையோடு அவனை நோக்கி வந்தார்
வந்தவர் அவனை நோக்கி கூறியது
“நீ விரும்பியது ஒருத்தி
நீ தேடுவது ஒருத்தி
விதியின் ஆட்டத்தால்
வேறு ஒருத்தி நீ
தேடும் முகம்
கொண்டு இருக்க
உன்னைக் காக்க
உயிர் துறந்தாள் ஒருத்தி
உயிர் துறந்தவள்
நிம்மதியின்றி அலைய
உயிரோடு இருப்பவள்
உன்னை மறந்து
உன் உயிரை சுமந்து
அலைய நீ இருக்கிறாய்
கண்ணை மூடி உன்
தந்தையை அழித்த
சதி என்னும் எமன்
உன்னையும் அழிக்க
உன்னை தொடர்கிறது
சதியாகவும் மதியாகவும்
உன்னை வெல்ல அதை
தடுக்க தன்னையே
கவசமாக மாற்றிக்
கொண்டாள் ஒருவள்
உன் குலத்தையும்
உன் காதலையும் காப்பாற்ற
போராடி கொண்டிருக்கிறாள்
அவள் உன்னோடு
ஜென்ம ஜென்மமாக
தொடரும் உன்னதமான
உறவிற்காக போராடுகிறாள்
காரணம் முற்பிறவியில்
நீ ஒருத்தியின் நட்பிற்காக
போராட மற்றொருத்தி
உன் காதலுக்காக
போராடினாள் இப்பிறவியில்
உன் நட்பாக இருந்தவள்
உன் எல்லாவற்றுக்காகவும்
போராடுகிறாள் இனியாவது
விழித்துக் கொள்!
விழித்துக் கொள்!
விழித்துக் கொள் மூடனே!
இனியும் நீ கண்ணிருந்தும்
குருடனாய் இருந்தாய் ஆனால்
உன் குலத்திற்கு
வரமான நட்பை தீரா
சாபமாக மாற்றியதற்கும்
உன் குலத்தின் அழிவிற்கும்
நீயே காரணமாக
கடவாய் மூடனே! இது எம் அப்பன் ஈசனின் வாக்கு!........”
இதை கண்டும் கேட்டும் சித்தும் க்ரிஷ்வந்தும் ஒன்றும் புரியாமல் முழித்தனர்
அவர் இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் இப்போது நீங்கள் முழிப்பதை போல்தான் நானும் ராமும் முழித்துக் கொண்டிருந்தோம் ராம் தான் முதலில் சுதாரித்து என்னை அழைத்து வந்தான் அன்று மட்டும் ராம் இல்லையென்றால் நான் என்ன செய்து இருப்பேன் என்றே தெரியாது ஆனால் அவர் சொன்ன வரிகள் மட்டும் எப்படி என் மனதில் அச்சு பிசகாமல் பதிந்தது அது எவ்வாறு இது நாள் வரை ஞாயபகம் இருக்கிறது என்பது எனக்கே புரியாத புதிர் தான்
அப்போது தான் க்ரிஷின் கவனம் அங்கில்லை என்பதை உணர்ந்த ரிஷி க்ரிஷை அழைத்தான்
க்ரிஷ்
க்ரிஷ்
க்ரிஷ்……………
ஆங்
கிழிஞ்சுது போ-ராம்
ரிஷி ராமை முறைத்தான்
ராம் வாயை தன் கையால் மூடிக்கொண்டான்
என்னாச்சு க்ரிஷ் உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு உன் கவனம் இங்கு இல்லையே ஏன் – ரிஷி
அண்ணா அது வந்து அது வந்து.,….- க்ரிஷ்
அதான் வந்துட்டல சீக்கரம் விஷயத்தை சொல்லிட்டு கிளம்பு கிளம்பு – ராம்
இப்போது மூவரும் அவனை முறைத்தனர் சித் ஒரு படி மேலே சென்று. டேபிளில் இருந்த பிளஸ் திரியை எடுத்து கொண்டு ராமை நெருங்கிச் சென்றான் இதை கண்ட ராம் பின் வாங்கி கொண்டே பேச்சு பேச்சா இருக்கனும் நோ வேப்பன்ஸ் என்றான்
இனி நீ சும்மா குறுக்க பேசின இத வாயில கைல காலுல கட்டி இங்கேயே ஒருவாரம் சாப்பாடு தண்ணி இல்லாம இருனு விட்டுட்டு போய்டுவோம் என்று மிரட்டினான்
ராம் இதை கேட்டு அமைதியாகி விட்டான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு அவன் எகிறி கொண்டு சண்டையிட சென்றவன் ரிஷியின் ராம் என்ற ஒற்றை சொல்லில் அடங்கி அமைதியானான்
பின் ரிஷி க்ரிஷ் பக்கம் திரும்பினான்
தான் பதில் சொல்ல வேண்டியதை உணர்ந்த க்ரிஷ்
அண்ணா நானும் இவர பாத்தேன்– க்ரிஷ்
என்ன இந்த சிவன் அடியார நீ பார்த்தைய எப்போ எப்படி. என்ன சொன்னார் -ராம்(ஆம் ராமிற்கு இதில் எல்லாம் மிகுந்த நம்பிக்கை உண்டு)
ஆமாம் ராம் ஒரு ஒன்றரை மாதத்திற்கு முன்பு- க்ரிஷ்
நான் ஒரு ஆப்ரேஷனுக்காக மதுரை போய்ருந்தேன் அப்போ என்னோட கோலீக் மதுரைக்கு வந்தது தான் வந்தோம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு ஊருக்குத் திரும்பலாமே என்றார் நானும் சரி யென்று அவர்களுடன் இணைந்து சென்றேன்
அங்கு இவர் தீடிரென்று என் முன் வந்து ரிஷி அண்ணாவிடம் கூறியது போல் என்னிடமும் ஒன்றை கூறினார் எனக்கு அது இன்னமும் நினைவு இருக்கிறது அதை வைத்து தான் நான் அனுவை கண்டுபிடித்தேன் அது
“முக்கடல் சங்கமிக்கும் இடமாம்
எம் தாய் கன்னியாய் அவதரித்தவள்
வீற்றிருக்கும் இடமாம் அங்கு செல்
நீ தேடுவது கிடைக்கும் காலம் கடக்கும்
முன் செல் நீ தேடுவது பல உயிர்களைக்
காக்க வல்லது செல் சீக்கிரம் செல்!!!!!!!!!!!!!!!”
அவர் சொன்னது இதுதான் அண்ணா
Last edited: