ஹாய் friends aduththa கதையோட டீசேரோட வந்துட்டேன். படிச்சிட்டு எந்த கதையை முதல்ல எழுதணும் என்று சொல்லுங்க.
விக்ரம்
"விக்ரம் சசியோட திவசத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டியா?" படிகளில் இறங்கியவாறு ஜனனி கேட்க
"என் ஜானுமா கேட்டு ஏதாவது நான் இல்லனு சொல்லி இருக்கேனா? எல்லா ஏற்பாட்டையும் பக்காவா பண்ணிட்டேன்" தலை வணங்கி மரியாதை செய்ய ஜனனி விக்ரமை முறைத்தாள்.
"எங்க போறதாக இருந்தாலும் முதல்ல சாப்பிடு. அப்பொறம் போலாம். உன் உடம்ப பாத்திகிறதுதான் ஆக முக்கியம்" என்றவன் அவளை இழுத்துக்கொண்டு செல்ல
"ஷாலு எங்க?" என்றவாறே விக்ரம் இழுத்த இழுப்புக்கு வந்தமர்ந்தாள் ஜனனி.
ஜனனி
"டாடி..." ஓடி வந்து விக்ரமின் கழுத்தைக் கட்டிக்கொண்டு குனிந்து ஜனனியின் கன்னத்தில் முத்தமிட்ட ஐந்து வயதான ஷாலு "மம்மி... நம்ம கார்டன்ல ரெட் றோஸ் அழகாக பூத்திருக்கு" என்று சிரிக்க
மகளின் சிரிப்பில் மயங்கியவள் அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க, விக்ரம் அதை ஒரு புன்னகையினூடாக பார்த்தவாறு அமர்ந்து தானும் பரிமாறிக்கொண்டான்.
உணவு உண்ணும்வரை அமைதியாக இருந்த விக்ரம் ஜனனி வெளியே கிளம்பும் பொழுது "ஜானு சொல்லுறேன்னு கொவிக்காத நீ திதி கொடுத்தே ஆகணுமா? கடற்கரையில உன்ன யாராச்சும் பார்த்தா வீணா பிரச்சினைதான்..." சொல்லி முடிக்கவில்லை
கணவனை கையை நீட்டி தடுத்த ஜனனி "சசி என் ஹஸ்பனா இருந்தவரு அவருக்காக நான் இதை கூட பண்ணலைனா எப்படி விக்ரம்" தொண்டை அடைக்க வேறு பேச்சு வரவில்லை.
"சரி.... வா.... நானும் உன் கூட வரேன்" என்ற விக்ரம் அவளோடு கிளம்பினான்.
"சே.. யார் முகத்துல முழிக்கக் கூடாதுனு இருந்தேனோ! காலங்காத்தால அவ முகத்துலையே! முழிக்க வேண்டியதா போச்சு. கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணை இல்ல" நளினி முகத்தை திருப்ப
ஜனனியின் கையிலிருந்த பொருட்களை பார்த்த தேசிகன் "என் தம்பியோட உசுர எடுத்துட்டு எப்படித்தான் உனக்கு இந்த காரியமெல்லாம் பண்ண மனசு வருதோ! நல்லா நடிக்கிறம்மா நல்லா நடிக்கிற. வாங்க அம்மா போலாம்"
"இல்லனா சொத்து கிடைக்காதே!" என்றாள் தேசிகனின் மனைவி சுவாதி.
விக்ரம் ஜனனிக்கு அரணாக நிற்க ஜனனி அவர்களை பேச்சை காதில் வாங்காது தனது முன்னாள் கணவன் சசிதரனுக்காக செய்ய வேண்டிய கடமைகளை செய்யலானாள்.
"பிண்டத்தை கடல்ல கரைச்சிடுங்கோ!" என்று சாஸ்திரிகள் சொல்ல ஜனனி கடற்கரைக்கு எழுந்து செல்ல விக்ரமின் அலைபேசி அடிக்கவே! இயக்கி காதில் வைத்திருந்தான்.
அதில் வந்த செய்தியில் அதிர்ந்தவன் "என்ன டா? இது எப்படி ஆச்சு என்று கத்த"
தனது வேலையை முடித்துக்கொண்டு வந்த ஜனனியும் என்ன எது என்று விசாரிக்கலானாள்.
ஷங்கர்
"யாரோ சங்கரன் சிவ ஷாஸ்த்ரியாம் நமக்கு வர வேண்டிய டெண்டர் அவன் கைக்கு போய்ட்டதா ரவி சொல்லுறான்" விக்ரமின் கோபம் எல்லை கடந்திருக்க,
அவன் சொன்ன செய்தியை விட அவன் சொன்ன பெயரை கேட்டதும் அதிர்ந்து சிலையாக நின்று விட்டாள் ஜனனி.
எந்த கதையை முதல்ல எழுதணும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க....
விக்ரம்
"விக்ரம் சசியோட திவசத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டியா?" படிகளில் இறங்கியவாறு ஜனனி கேட்க
"என் ஜானுமா கேட்டு ஏதாவது நான் இல்லனு சொல்லி இருக்கேனா? எல்லா ஏற்பாட்டையும் பக்காவா பண்ணிட்டேன்" தலை வணங்கி மரியாதை செய்ய ஜனனி விக்ரமை முறைத்தாள்.
"எங்க போறதாக இருந்தாலும் முதல்ல சாப்பிடு. அப்பொறம் போலாம். உன் உடம்ப பாத்திகிறதுதான் ஆக முக்கியம்" என்றவன் அவளை இழுத்துக்கொண்டு செல்ல
"ஷாலு எங்க?" என்றவாறே விக்ரம் இழுத்த இழுப்புக்கு வந்தமர்ந்தாள் ஜனனி.
ஜனனி
"டாடி..." ஓடி வந்து விக்ரமின் கழுத்தைக் கட்டிக்கொண்டு குனிந்து ஜனனியின் கன்னத்தில் முத்தமிட்ட ஐந்து வயதான ஷாலு "மம்மி... நம்ம கார்டன்ல ரெட் றோஸ் அழகாக பூத்திருக்கு" என்று சிரிக்க
மகளின் சிரிப்பில் மயங்கியவள் அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க, விக்ரம் அதை ஒரு புன்னகையினூடாக பார்த்தவாறு அமர்ந்து தானும் பரிமாறிக்கொண்டான்.
உணவு உண்ணும்வரை அமைதியாக இருந்த விக்ரம் ஜனனி வெளியே கிளம்பும் பொழுது "ஜானு சொல்லுறேன்னு கொவிக்காத நீ திதி கொடுத்தே ஆகணுமா? கடற்கரையில உன்ன யாராச்சும் பார்த்தா வீணா பிரச்சினைதான்..." சொல்லி முடிக்கவில்லை
கணவனை கையை நீட்டி தடுத்த ஜனனி "சசி என் ஹஸ்பனா இருந்தவரு அவருக்காக நான் இதை கூட பண்ணலைனா எப்படி விக்ரம்" தொண்டை அடைக்க வேறு பேச்சு வரவில்லை.
"சரி.... வா.... நானும் உன் கூட வரேன்" என்ற விக்ரம் அவளோடு கிளம்பினான்.
"சே.. யார் முகத்துல முழிக்கக் கூடாதுனு இருந்தேனோ! காலங்காத்தால அவ முகத்துலையே! முழிக்க வேண்டியதா போச்சு. கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணை இல்ல" நளினி முகத்தை திருப்ப
ஜனனியின் கையிலிருந்த பொருட்களை பார்த்த தேசிகன் "என் தம்பியோட உசுர எடுத்துட்டு எப்படித்தான் உனக்கு இந்த காரியமெல்லாம் பண்ண மனசு வருதோ! நல்லா நடிக்கிறம்மா நல்லா நடிக்கிற. வாங்க அம்மா போலாம்"
"இல்லனா சொத்து கிடைக்காதே!" என்றாள் தேசிகனின் மனைவி சுவாதி.
விக்ரம் ஜனனிக்கு அரணாக நிற்க ஜனனி அவர்களை பேச்சை காதில் வாங்காது தனது முன்னாள் கணவன் சசிதரனுக்காக செய்ய வேண்டிய கடமைகளை செய்யலானாள்.
"பிண்டத்தை கடல்ல கரைச்சிடுங்கோ!" என்று சாஸ்திரிகள் சொல்ல ஜனனி கடற்கரைக்கு எழுந்து செல்ல விக்ரமின் அலைபேசி அடிக்கவே! இயக்கி காதில் வைத்திருந்தான்.
அதில் வந்த செய்தியில் அதிர்ந்தவன் "என்ன டா? இது எப்படி ஆச்சு என்று கத்த"
தனது வேலையை முடித்துக்கொண்டு வந்த ஜனனியும் என்ன எது என்று விசாரிக்கலானாள்.
ஷங்கர்
"யாரோ சங்கரன் சிவ ஷாஸ்த்ரியாம் நமக்கு வர வேண்டிய டெண்டர் அவன் கைக்கு போய்ட்டதா ரவி சொல்லுறான்" விக்ரமின் கோபம் எல்லை கடந்திருக்க,
அவன் சொன்ன செய்தியை விட அவன் சொன்ன பெயரை கேட்டதும் அதிர்ந்து சிலையாக நின்று விட்டாள் ஜனனி.
எந்த கதையை முதல்ல எழுதணும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க....
Last edited: