HI friends ஒரு குட்டி டீசேரோட விடைபெறுகிறேன். BE SAFE இரண்டு வாரங்கள் அல்லது அதற்க்கு மேலையும் ஆகுமோ!தெரியல In sha Allah சந்திக்கலாம்.
"வாங்க டி இதுதான் வர்ர நேரமா?" பாலர் பெண்களின் வசமாகி இருந்தவாறே! தோழிகளை கடிந்தாள் கோதை.
"என்ன டி நீ... அவசர அவசரமா கல்யாணம் பண்ணுற, உன் அவசரத்துக்கு நாங்க வர முடியுமா?" என்று கவி எனும் கவிதா சொல்ல,
"ஆமாம்மா.. நாங்க மேற்படிப்பு என்ன படிக்கலாம்னு யோசிக்கிறப்போ! இங்க ஒருத்தி கல்யாணத்த பத்தி யோசிச்சி இருக்கா" என்று கலா எனும் சித்ரகலா KGF ஸ்டைலில் சொல்லி சிரிக்க,
"என்னங்க டி.. என்ன ஓட்டுறதுக்குன்னே! வந்தீங்களா?" என்று தோழிகளை முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக முறைத்தாள் கோதை.
"யார் டி இவ நாங்க வந்து அரை மணித்தியாலமாக போகுது குடிக்க ஏதாச்சும் கொடுக்காம, தொண்ட தண்ணி வத்தும் வரைக்கும் பேச வைக்கிறியே!" என்றாள் இன்பா.
"இவ ஒருத்தி தீனி பண்டாரம் வரும் வழியெல்லாம் வண்டிய நிறுத்த சொல்லி சாப்பிட்டுக்கிட்டே! வந்தா. உனக்கு இருக்குறது வயிறா டி இங்க வந்தும் ஆரம்பிச்சிட்ட.." என்றாள் கவி.
"ஆமா நான் வாங்கினதுல பாதிய முழுங்கிட்டு பேசுறா பாரு" என்று இன்பா நொடிக்க அங்கே! குட்டி கலாட்டாவோடு சிரிப்பலை பரவிக்கொண்டிருக்க, அவர்களுக்கு குடிக்க குளிர்பானமும் வந்து சேர, அதை பற்றி பேச ஆரம்பித்தனர் தோழிகள்.
இப்படி இவர்கள் இருக்கும் இடம் மறந்து தலைப்பை மாற்றியவாறு மணமகள் அறைக்குள் பேசிக்கொண்டே! சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
******************************************
"என்ன டி கல்யாணத்துக்கு வந்தா நல்லா விருந்து சாப்பிட்டு போலாம்னு பார்த்தா இங்க ஒரே ரணகளமா இருக்கு" இன்பா முழித்தவாறு சொல்ல
"ஏன் டி இந்த கோதையை பாரேன். அவங்க அப்பாக்கு ரெண்டு பொண்டாட்டி எங்குறதும் எங்களுக்கு தெரியாது. அவ லவ் பண்ணதும் எங்களுக்கு தெரியாது. இன்னும் என்னத்த எல்லாம் எங்க கிட்ட இருந்து மறச்சி வச்சிருக்காளோ!" என்று சித்ரகலா சொல்ல
"முதல்ல இவ ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணனும் டி.. அவ்வளவு தூரத்துல இருந்து எங்கள வர வளச்சு அவ பாட்டுக்கு வசனம் பேசிகிட்டு இருக்கா.. இங்க என்ன நடக்க போகுதுனு முதல்லயே! சொல்லித் தொலைக்க வேணாமா?" கவி எனும் கவிதா திட்ட,
"கோதையோட ஆளு செம்ம ஹண்சம் டி.. அதான் பக்கி நம்ம கிட்ட சொல்லாம மறச்சி இருக்கா போல" இன்பா அவனை பார்த்து ஜொள்ளு விட
"ஆமா டி... ஆரியக் கூத்தாடினாலும் அவ காரியத்துல கண்ணா இருந்திருக்கா... நாமதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாம போய்ட்டோம்" பெருமூச்சு விட்டுக்கொண்டாள் கலா.
"நம்ம கூடவே! தானே! டி சுத்தி கிட்டு இருப்பா.. இப்படி ஒருத்தன எங்க இருந்து புடிச்சா. அதுவும் மினிஸ்டரோட தம்பிய? அமேரிக்கா ரிட்டன்ஸ் வேற. என்னமா லவ் லுக்கு விடுறான்.. சினிமால கூட ஹீரோயின அடிக்கும் போது இப்படி காப்பாத்தி இருக்க மாட்டாங்க" கவிதா தாடையை தடவியவாறு யோசிக்க ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
"வாங்க டி இதுதான் வர்ர நேரமா?" பாலர் பெண்களின் வசமாகி இருந்தவாறே! தோழிகளை கடிந்தாள் கோதை.
"என்ன டி நீ... அவசர அவசரமா கல்யாணம் பண்ணுற, உன் அவசரத்துக்கு நாங்க வர முடியுமா?" என்று கவி எனும் கவிதா சொல்ல,
"ஆமாம்மா.. நாங்க மேற்படிப்பு என்ன படிக்கலாம்னு யோசிக்கிறப்போ! இங்க ஒருத்தி கல்யாணத்த பத்தி யோசிச்சி இருக்கா" என்று கலா எனும் சித்ரகலா KGF ஸ்டைலில் சொல்லி சிரிக்க,
"என்னங்க டி.. என்ன ஓட்டுறதுக்குன்னே! வந்தீங்களா?" என்று தோழிகளை முகம் பார்க்கும் கண்ணாடி வழியாக முறைத்தாள் கோதை.
"யார் டி இவ நாங்க வந்து அரை மணித்தியாலமாக போகுது குடிக்க ஏதாச்சும் கொடுக்காம, தொண்ட தண்ணி வத்தும் வரைக்கும் பேச வைக்கிறியே!" என்றாள் இன்பா.
"இவ ஒருத்தி தீனி பண்டாரம் வரும் வழியெல்லாம் வண்டிய நிறுத்த சொல்லி சாப்பிட்டுக்கிட்டே! வந்தா. உனக்கு இருக்குறது வயிறா டி இங்க வந்தும் ஆரம்பிச்சிட்ட.." என்றாள் கவி.
"ஆமா நான் வாங்கினதுல பாதிய முழுங்கிட்டு பேசுறா பாரு" என்று இன்பா நொடிக்க அங்கே! குட்டி கலாட்டாவோடு சிரிப்பலை பரவிக்கொண்டிருக்க, அவர்களுக்கு குடிக்க குளிர்பானமும் வந்து சேர, அதை பற்றி பேச ஆரம்பித்தனர் தோழிகள்.
இப்படி இவர்கள் இருக்கும் இடம் மறந்து தலைப்பை மாற்றியவாறு மணமகள் அறைக்குள் பேசிக்கொண்டே! சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
******************************************
"என்ன டி கல்யாணத்துக்கு வந்தா நல்லா விருந்து சாப்பிட்டு போலாம்னு பார்த்தா இங்க ஒரே ரணகளமா இருக்கு" இன்பா முழித்தவாறு சொல்ல
"ஏன் டி இந்த கோதையை பாரேன். அவங்க அப்பாக்கு ரெண்டு பொண்டாட்டி எங்குறதும் எங்களுக்கு தெரியாது. அவ லவ் பண்ணதும் எங்களுக்கு தெரியாது. இன்னும் என்னத்த எல்லாம் எங்க கிட்ட இருந்து மறச்சி வச்சிருக்காளோ!" என்று சித்ரகலா சொல்ல
"முதல்ல இவ ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணனும் டி.. அவ்வளவு தூரத்துல இருந்து எங்கள வர வளச்சு அவ பாட்டுக்கு வசனம் பேசிகிட்டு இருக்கா.. இங்க என்ன நடக்க போகுதுனு முதல்லயே! சொல்லித் தொலைக்க வேணாமா?" கவி எனும் கவிதா திட்ட,
"கோதையோட ஆளு செம்ம ஹண்சம் டி.. அதான் பக்கி நம்ம கிட்ட சொல்லாம மறச்சி இருக்கா போல" இன்பா அவனை பார்த்து ஜொள்ளு விட
"ஆமா டி... ஆரியக் கூத்தாடினாலும் அவ காரியத்துல கண்ணா இருந்திருக்கா... நாமதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாம போய்ட்டோம்" பெருமூச்சு விட்டுக்கொண்டாள் கலா.
"நம்ம கூடவே! தானே! டி சுத்தி கிட்டு இருப்பா.. இப்படி ஒருத்தன எங்க இருந்து புடிச்சா. அதுவும் மினிஸ்டரோட தம்பிய? அமேரிக்கா ரிட்டன்ஸ் வேற. என்னமா லவ் லுக்கு விடுறான்.. சினிமால கூட ஹீரோயின அடிக்கும் போது இப்படி காப்பாத்தி இருக்க மாட்டாங்க" கவிதா தாடையை தடவியவாறு யோசிக்க ஆளாளுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.