Sundaramuma
Well-Known Member
ஹாய் மல்லி...
நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...
ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...
நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...