E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிறைய கேள்விகள் வருது......
1. சுந்தரியின் தோற்றம் ...... வடிவு பாட்டி லட்சணமா இருப்பதாக சொல்லறாங்க..... கலர் மட்டும் தான் கம்மி .......கண்ணன் பார்வையில் அவ குண்டு.... முகத்துல பரு...... எண்ணெய் வழியும் தலை ...... நாகரீக உடை இல்லை..... கருப்பு...... இவங்க ரெண்டு பேருல யாரு சொல்லறது நிஜம்...... சுந்தரி கருப்பு வகைல சேர்த்தி என்பது தவிர வேற இங்கே பெரிதாக குறை என்று இல்லை என்று என்னோட எண்ணம் ...... எதோ ஒரு படத்துல சுஹாசினி பட்டிக்காட்டு தோற்ற துலா வருவாங்க..... என்ன புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு......பாட்டு வரும்( ஒரு லைன் தான் தெரியும்) ...... பெஅஉட்டி பார்லர் கூட்டிட்டு போனா தீர்ந்து போற பிரச்சனை......

2. கணவன் மனைவி உறவு ......கண்ணன் எதோ ஒரு காரணதோடு தான் உறவு கொண்டதாக வருது........ அந்த நேரத்தில் அவள் மேல் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு ....... அல்லது பெண்ணை முழுமையா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ......எதுவாக இருந்தாலும் அவளை அந்த நிமிடம் பிடித்ததனால் தானே நிகழ்ந்தது......குழந்தை உருவானதால் கேட்ட பேச்சுகள் தான் சுந்தரி வேண்டாம் என்ற எதிர்மறை எண்ணத்தை கொடுத்ததா வருது ...... அவன் மனஉறுதி இல்லாதவன்.... இப்படி பட்ட அழகில்லாத பெண்ணிடம் மயங்கி விட்டான் என்ற மாதிரி பேச்சுகளா அவை...... ஏன் இப்படி ஒரு சந்தேகம் எனக்கு என்றால்..... அவன் கவுன்சிலின் போது அவள் தன்னோடு வேறு ஊருக்கு வந்து விட்டால் விவாகரத்து வேண்டாம் என்று சொல்கிறான்..... சோ, மற்றவர்கள் பேசிய கேலி தான் அவன் முடிவுக்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது எனக்கு......


3.சுந்தரி...... கண்ணன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கோ ..... பார்த்த உடன் ஏன் அழுகை வரணும்.....அவனை வேண்டாம்னு சொன்னது கூட அவன் அவளை வேண்டாம் என்று சொன்னதால் தானோ..... அவளுக்கு தான் அழகில்லை என்ற தாழுணர்ச்சி எல்லாம் இல்லை......அவனை ரசிக்காமல் அவன் ஸ்டைல் மட்டும் பிடித்திருக்க முடியுமா ...... அனால் மகனுக்காக மட்டும் என்றால் அவள் கண்ணனை மறுத்து விடுவாள் உறுதியாக......

4.கண்ணன் ..... கிராமத்தில் பிறந்தவன்...... அப்பா ஒரு விவசாயி ...... அனால் வளர்ப்பு மட்டும் மேல் தட்டு முறைஎலா .......எதையும் கணிக்க முடியவில்லை..... தான் ஆடாவிட்டாலும் தான் சதை ஆடும் என்பது தான் மகன் விஷயத்தில் மட்டும் தானா ....... அப்படி இல்லை என்று எதோ ஒரு பட்சி சொல்லுது..... கண்ணனுக்கும் நிலத்தில் உழைத்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவனால் சுந்தரியை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா......

கொஞ்சம் பெருசா போய்டுச்சு .....ஆனா நினைத்ததை எல்லாம் கொண்டுவர முடியலை ..... சாரி ......
Interesting episode
Thankyou very much. Mallika :D:D:D
நல்ல விரிவான அலசல் உமா....அருமையாக இருக்கு....அப்பவும் நாம் நினைத்ததை கொண்டு வரமுடியல....பாருங்கள்....அவ்வளவு இருக்கு மல்லி எழுத்தில்..நன்றி உமா....உங்கள் கமெண்ட் எப்பவுமே எதிர்பார்ப்பது இதற்கு தான்....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நண்பிடா.....வண்டி யாருமே ஓட்டலையா என்ன.....
:D

பொன்னம்மா செம போங்க, இதையும் நான் நினைச்சேன் ஊர்ல எவ்வளவு பேரு வண்டி ஓட்டி இருப்பாங்க... எல்லாரையும் இவ இப்படி தான் பார்ப்பாளா என்ன உரிமை இன்னமும் எங்கயோ அவ மனசுல ஒட்டியிருக்க போய் தானே அவனை பார்த்து ரசிக்க முடிஞ்சுது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தெளிவா சொல்றாங்க மல்லி...
அவன ரசிக்கல...
அந்த ஸ்டைல பார்த்தா அப்படினு...
இத விட எப்படி புரிய வைக்கறது உங்களுக்கு...
பிடிக்கல...பிடிக்கல என்று தனக்குள் உருப்போட்டு சொல்லி நினைவு படுத்திக்கிறாளா....அப்படித்தான் தோணுது...எனக்கு.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பிடிக்கல...பிடிக்கல என்று தனக்குள் உருப்போட்டு சொல்லி நினைவு படுத்திக்கிறாளா....அப்படித்தான் தோணுது...எனக்கு.

ரொம்ப சரி பொன்னம்மா...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னம்மா செம போங்க, இதையும் நான் நினைச்சேன் ஊர்ல எவ்வளவு பேரு வண்டி ஓட்டி இருப்பாங்க... எல்லாரையும் இவ இப்படி தான் பார்ப்பாளா என்ன உரிமை இன்னமும் எங்கயோ அவ மனசுல ஒட்டியிருக்க போய் தானே அவனை பார்த்து ரசிக்க முடிஞ்சுது...
சூப்பர்..நீ என்ன வேண்டாம் சொல்றது எனக்கு நீயும் வேண்டாம் என்று அவளுள் சொல்லி கொள்கிறாள். ஏன் டா பிடிக்கலன்னே ...பின்ன பிள்ளை எப்படின்னு அவங்கம்மா கூட ஏற்றி விட்டு இருக்கலாம்....அவன் உடனே வீம்புக்கு நோட்டிஸ் அனுப்பி....அவனுக்கும் ஊரில் தான் அவளோட வாழ பிடிக்கல....என்னோட வான்னு கூப்பிடுறானே....தப்பு .இந்த சுத்தி இருக்கிறவங்க....நாட்டாமையாக அடுத்தவங்க ப்ரச்னைக்கு நாக்கு நரம்பில்லாமல் பேச சொம்பை தூக்கிட்டு வந்திடுவானுக.....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்..நீ என்ன வேண்டாம் சொல்றது எனக்கு நீயும் வேண்டாம் என்று அவளுள் சொல்லி கொள்கிறாள். ஏன் டா பிடிக்கலன்னே ...பின்ன பிள்ளை எப்படின்னு அவங்கம்மா கூட ஏற்றி விட்டு இருக்கலாம்....அவன் உடனே வீம்புக்கு நோட்டிஸ் அனுப்பி....அவனுக்கும் ஊரில் தான் அவளோட வாழ பிடிக்கல....என்னோட வான்னு கூப்பிடுறானே....தப்பு .இந்த சுத்தி இருக்கிறவங்க....நாட்டாமையாக அடுத்தவங்க ப்ரச்னைக்கு நாக்கு நரம்பில்லாமல் பேச சொம்பை தூக்கிட்டு வந்திடுவானுக.....

நீ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்லுறது நான் சொல்லிட்டா வலி பெரிசில்லைன்னு அவளுக்குள்ள ஒரு வீம்பு... ரெண்டு பேரும் சீக்கிரம் தங்களை உணரணும், உணர்ந்து சேரணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top