"சொல்லால் சொற்றொடர் அமைத்து
நாவை சுழற்றி
நயவஞ்சகமாய்
ஒரு வார்த்தை
வலி தந்த வார்த்தை"
"கை ஓங்கி
கன்னம் வலிக்க
வாங்கிய அடியை விட
வஞ்சம் நிறைந்து
வாய் வழி வந்த வார்த்தை
நெஞ்சம் தொடும் போது
வரும் வலி பெரிதல்லவா"
"ஈட்டியால் எறிந்தாலும்
எழுந்திடுவேன்
தீட்டிய சொல் அது
தீக்கங்காய் சுட்டது
உள்ளமெல்லாம்"
"ஒரு வார்த்தை
உயிரோடு கொன்று
புதைக்க
வேரோடு வீழ்ந்திட
ஒரு வார்த்தை
வலி தந்த வார்த்தை"
"வாழ்நாள் முழுதும் மறக்காது
வலியின் வீரியம் குறையாது"
நாவை சுழற்றி
நயவஞ்சகமாய்
ஒரு வார்த்தை
வலி தந்த வார்த்தை"
"கை ஓங்கி
கன்னம் வலிக்க
வாங்கிய அடியை விட
வஞ்சம் நிறைந்து
வாய் வழி வந்த வார்த்தை
நெஞ்சம் தொடும் போது
வரும் வலி பெரிதல்லவா"
"ஈட்டியால் எறிந்தாலும்
எழுந்திடுவேன்
தீட்டிய சொல் அது
தீக்கங்காய் சுட்டது
உள்ளமெல்லாம்"
"ஒரு வார்த்தை
உயிரோடு கொன்று
புதைக்க
வேரோடு வீழ்ந்திட
ஒரு வார்த்தை
வலி தந்த வார்த்தை"
"வாழ்நாள் முழுதும் மறக்காது
வலியின் வீரியம் குறையாது"