நேசம் மறவா நெஞ்சம்-19Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
மறுநாள் காலை.........லேசாக மழை தூறவும்...... கண்ணன் வயலுக்குச் செல்லாமல்....வீட்டிலேயே இருந்தான்.........



காலை எட்டுமணி போல்....... கயல் சாப்பிட்டுவிட்டு பஸ்க்கு நேரமாகிவிட்டதால்......தன் பேகை எடுக்க மாடிக்கு வந்தவள்....... கண்ணன் அப்போதுதான் குளித்துவிட்டு.......துண்டைமட்டும் கட்டிக்கொண்டு தலைதுவட்டிக் கொண்டிருந்தான்…….



இவள் படக்கென்று கதவை திறந்து உள்ளே வந்தவள்........கண்ணனை பார்த்தவுடன்......” ஐயோ..... அம்மா....” என்று கத்தினாள்......

இவள் கத்துவதை கண்டவன்.........வேகமாக போய் கதவை சாத்தியவன்..... “ஏன் இப்புடி கத்துற.... கீழே அம்மா தம்பிங்கயெல்லாம் இருக்காங்கள்ள....”

கண்ணை இரு கையால் மூடியவள் “ நீங்க ஏன் இப்புடி இருக்கீங்க......”

“குளிச்சவுடனே இப்புடி இல்லாம.....வேற எப்புடி இருப்பேன்......”

“சரி.... என்னமோ பண்ணுங்க.....என்னோட காலேஜ் பேக்கை மட்டும் எடுத்துக்கிறேனே...... அப்புறம் உங்ககிட்ட ஒன்ன சொல்லனுமே......”

“சொல்லு....” என்ற படி கட்டிலில் உட்கார்ந்தவன்..... என்னடா நம்ம பொண்டாட்டி நம்மகிட்ட என்னமோ..... பேசனும்குறா.....

“நீங்க டிரஸ் போட்டுடீங்களா......”



“நீ....... என்னோட பொண்டாட்டி தானே........”



“ஆமா.......”

“அப்புடின்னா..... என்னைய இப்புடி பாத்தா ஒன்னும் தப்பில்ல......”

“ஆனா ..... எனக்கு கூச்சமாயிருக்கே....... நீங்க என்னைய இப்புடி அரைகுறை டிரஸ்ல பாத்தா கூச்சமா இருக்காது.......”



ம்ம்ம்....நல்ல சான்ஸ்..... எனக்கு எங்க அந்த மாதிரியெல்லாம்.....பாக்க குடுத்து வைக்குது....என்று முனுமுனுத்தவன்...........

“என்ன சொன்னீங்க........”

“இல்ல இல்ல.....வேணும்னா.... ஒரு கண்ண மட்டும் மூடிக்க....சரியா....”

“சரி என்று ஒரு கண்ணைமட்டும் திறந்தவள்...... போங்க....போங்க.... இப்பவும் தெரியிரிங்க......”.

ஹாஹாஹா...... என்று வாய்விட்டு சிரித்தவன்.....”. ஏய் எத்தன படத்துல........ ஹீரோல்லாம்... இப்புடி வரத பாக்கல.......”



“ஆமால்ல..... ஆனா....... அப்பல்லாம் எனக்கு கூச்சமாயில்லயே......உங்கள பாத்தா....போனவாரம் ஒரு படத்துல விஜய் இப்புடித்தான் சட்டையில்லாம வருவாருல்ல..... அவர பாத்த மாதிரி இருக்கு...ஆனா அமுதா சொல்லுரா.....நீங்க கடைகுட்டிசிங்கம் கார்த்தி மாதிரி இருக்கீங்களாம்....”



அப்ப இவ என்னைய ரசிக்கிறாளா..... முகத்தை மாற்றி வைத்து...... “அப்ப நீயும் அமுதாவும் என்னைய பத்தி தேவையில்லாம பேசியிருக்கீங்க.......அப்புடித்தானே.........”

“ஐயோ.......ப்ராமிசா.....அப்புடியெல்லாம் பேசல......” என்று முகத்தை அழுகை வருவதுபோல் வைத்திருக்க.......

“சரி விடு.......... ஆனா உனக்கு ஒரு தண்டனை உண்டு........”



“தண்டனையா............. இன்னைக்கும் பெல்டால அடிக்கப்போறிங்களா............”



“ச்சி.....ச்சி..... இது வேற.......இங்க வா....”

எனக்கு பஸ் போயிருமே......நேரமாச்சு.........

“பரவால்ல.....நான் இன்னைக்கு உன்னைய..... வண்டியில கொண்டுபோய் விடுறேன்..........நீ முதல்ல இங்க வா......”



“என்ன......”

“இன்னும் ....கிட்டவா......அன்னைக்கு உங்க வீட்டுல புருசன்தான் முத்தம் குடுக்கனும்..... உங்க அக்காவ மறந்தா....... என்னைய புருசனா ஏத்துக்கிருவன்னு சொன்னீல......”

“ஆமா சொன்னேன்.....ஆனா...... அதுக்குதான் ஒரு வருசமோ ரெண்டு வருசமோ டயம் குடுத்தனே”

கிழிச்ச...... “அந்த டயம் இருக்குறபடி இருக்கட்டும்........ இன்னைக்கு நீமட்டும் தான் தெரியிற .........என்று அவள் அருகில் வந்தவன்...... அவள் இரு கன்னத்திலும் முத்தம் கொடுக்க......

அவள் அவன் வெற்று மார்பில் கைவைத்து பின்னால் தள்ள.......

குளிர்ச்சியான அவன் உடம்பில் அவளின் சூடான கைபடவும்...... அவளுக்கு என்னவோ போல் இருந்த்து........



“போங்க.....போங்க...... இப்புடியெல்லாம் செய்யக்கூடாது.......”



“செய்யக்கூடாது........... அது மத்தவங்க.......நான்மட்டும் குடுக்கலாம்....... ஏன்னா நான் உன்னோட புருசன்......”



சாவித்திரியின் குரல் கீழே கேட்கவும்......”. சரி நீ கீழே போ........ நான் இன்னும் அஞ்சு நிமிசத்துல வாரேன்........”

கண்ணனும் கயலும் வண்டியில் கல்லூரிக்கு செல்ல......” நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.......”

“நீ எப்ப வேணாலும் என்ன வேணும்னாலும் கேக்கலாம்...... அதுக்கு ஒவ்வொரு தரமும் பர்மிசன் வாங்கனும்னு அவசியம் இல்ல சரியா..........”



“ம்ம்ம்...... முத்து என்கிட்ட கணக்கு பாடம் கத்துக்குறான்ல........ அதப்பாத்துட்டு...... அவன் ப்ரண்ட்ஸ் எங்கிட்ட வந்து பாடம் கத்துக்குறாங்களாம்....... கத்துக்குடுக்கவா.........”



“ம்ம்ம எத்தனை பேரு.....” அவள் ஒரு கையை அவன் முன் காட்டி அஞ்சுவிரலையும் மூடித்திறக்க....

கண்ணனோ...... அஞ்சு பேருதான் போல...... என்று நினைத்தவன்.......” சரி கத்துக்குடு......ரொம்ப கஷ்டப்படாத...... வீட்டுலயும் வேலைபாக்குற....அப்புறம் காலேஜ்க்கும் போய்ட்டு வந்து... உன்னால முடியுமா.......”

“என்னால முடியும்ங்க.......”.

“சரி அப்ப உன்னிஷ்டம்........”



ஒரு வாரம் கழித்து கண்ணன் வீட்டுக்கு போய் கயல கூட்டிட்டு வந்து...... அவளுக்கு தேவையானத ...எடுத்துக்கச் சொல்வோம்..... என்று நினைத்தவன்....... அவளுக்கு போன் செய்ய ரிங் முழுவதும் போய் கட்டானது...... சரி வீட்டுக்கே போயிருவோம் என்று வீட்டுக்கு வர....... வீட்டு வாசலில் நிறைய செருப்புகள்....... நம்ம வீட்டுக்கு யாரு வந்திருப்பா..... அதுவும் நிறைய....... இந்த செருப்புக்கு வேலையில்லயே.......உள்ளே வந்தவன்

சாவித்திரி......” என்ன கண்ணா சீக்கிரமா வந்துட்ட......”



“ஒண்ணுமில்லமா....கயல நம்ம கடைக்கு கூட்டிட்டு போகலாமுன்னு நினைச்சேன்........”



“சரிப்பா..... அத முதல்லயே மருமககிட்ட சொல்லலையா....புள்ளங்கயெல்லாம் டியூசன் படிக்குதுங்க...... இப்பதாம்பா வீடு நல்லா கலகலன்னு இருக்கு...... அம்புட்டும் இப்பதான் கீழ படிச்சுட்டு மாடிக்கு போச்சுக........”

சரி நான் போய் பாக்குறேம்மா.....என்றபடி மாடிக்கு போக.....அங்கு இருபது முப்பது பிள்ளைகள்........கட்டிலிலும் தரையிலும் நின்று ஆடிக்கொண்டிருக்க.......நடுவில் நின்று கயல் தன் நைட்டியை கைலிமாதிரி மடித்துக்கட்டி....ஒரு துண்டை எடுத்து தலையில் ஒரு முண்டாசு மாதிரி கட்டியிருக்க..... அவள் செல்லில் இருந்து பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது........











எஹ் எஹ் எஹ் எஹ்……


சின்ன மச்சான்……


என்ன புள்ள……..


செவத்த மச்சான்…..


சொல்லு புள்ள………


என் செவத்த மச்சான்……..


என்ன சொல்லு புள்ள………


ஊருக்குள்ள

உங்கள யேசுராக

தினம் ஒன்னா ரெண்டா

சொல்லி பேசுறாக

நம்ம ஊருக்குள்ள

உங்கள யேசுராக

ஒன்னா ரெண்டா

சொல்லி பேசுறாக……….



எஹ்எஹ்எஹ்எஹ்…………


கயல் ஆண் போல நடுவில் நின்று ஆட....... மற்ற பெண் பிள்ளைகள் இவளை சுற்றி ஆடிக்கொண்டிருந்தனர்...........



இனி.......................?.

தொடரும்..........
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top