05
கையில் சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்துடன் தன் முன் நின்றவனை பார்த்து என்ன செய்வது என புரியாமல் ஒருவித இயலாமை கலந்த தடுமாற்றத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா.
தன்னவளை காதலுடன் பார்த்த மஹத் இதழ்களில் தவழ்ந்த மென்மையான புன்னகையுடன் தன் கையில் இருந்த ரோஜாக்களை பார்த்தவன் அதை பார்வையால் வருடினான். அது தன்னவளையே வருடிக் கொடுப்பது போல் அத்தனை பரவசமாய் அவனுள் இறங்கியது.
இரண்டு வருட காத்திருப்பினை வார்த்தையால் வடிக்க எண்ணினான்... காதலின் காத்திருப்பு சுகமாய் இருப்பினும் ஒருவித வலியில் அவன் குரல் கரகரப்பாய் ஒலித்தது.
“இரண்டு வருசமா காத்திருந்தேன்... இப்போ தான் சொல்றதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...” சன்ன சிரிப்புடன் ஒரு கையால் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
“முதல் தடவையா உன்னை பார்க்கும் போதே எனக்காக பொறந்த பொண்ணுன்னு தான் தோனிச்சு... இதுவரைக்கும் யாரை பார்த்தும் கூட இந்த மாதிரி தோணது இல்ல... பர்ஸ்ட் டைம் ஏதோ ஸ்ட்ரக் ஆன மாதிரி...” அதற்கு மேல் எப்படி சொல்வது எனப் புரியாமல் பின்னங்கழுத்தை அழுந்த தடவிக் கொடுத்தவன் அலைபாய்ந்து கொண்டிருந்த தன்னவளின் விழிகளை உற்று நோக்கினான்.
“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு சொல்ல விரும்பிறேன் மது... இதுவரைக்கும் நான் இப்பிடி இருந்ததே கிடையாது... கண்ணை மூடி என்னால தூங்க முடில.. கண்ணை திறந்தா நீ என் பக்கத்தில இருக்கிற மாதிரி பீல் பண்றேன்... இதை எப்பிடி சொல்றதுன்னு கூட தெரில... நீ என்னை சுத்தி இருக்கிற மாதிரி ஒவ்வொரு நிமிசமும் என் கண்கள் உன்னை தேடுது மது... ஆயிரம் பேர் உன்னை விரும்பினாலும் என்னோட அன்பு அதையும் விட ஒருபடி அதிகமா இருக்கும்னு மட்டும் சொல்ல தோணுது... என்னால உன்னை மறக்க முடியல மறக்கவும் விரும்பல... நீ எனக்கு மட்டும் சொந்தம்னு மனசு துடிக்குது... நான் உன்னை ரொம்ப விரும்பிறேன் மது.. நான் சாகும் போது கூட இந்த காதல் அப்பிடியே இருக்கணும்னு நான் ஆசைபடுகிறேன்... even after that... அதுக்கு பிறகும் கூட...”
அழகான அழுத்தமான ஆழமான காதல். தன் மனதிலுள்ளதை காதலுடன் எடுத்துரைத்தவன் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றவில்லை. அந்த கண்கள் அவனை ஆழ்கடலுக்குள் அமிழ்த்துவது போலிருந்தது. அதில் விரும்பியே தொலைந்து போனான் அந்த காதல் பித்தன்.
அவன் நீட்டிய ரோஜாக்களை வாங்காது அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு அவன் காதலின் ஆழத்தை உணர முடிந்தது. இப்படி ஒரு காதலை தான் அவள் அவனிடம் கொண்டாள். ஆனால் அவன் தகுதியற்று போய்விட்டானே. அதை நினைக்கும் போதே அடிவயிற்றுக்குள் இருந்து எதுவோ மேலெழுந்து தொண்டைக்குள் அடைப்பது போல் அவஸ்தையாய் இருந்தது. கண்களில் கண்ணீரின் சாயல். அடக்கிக் கொண்டாள்.
தகுதியற்ற ஒருவனை காதலித்ததும் அவள் பிழை தான் அந்த வலியை தினம் தினம் அனுபவிப்பதும் அவள் பிழை தான். ஆனால் மறக்க முடியவில்லையே.. அவள் அவன் மேல் கொண்ட காதலுக்கு சமாதியும் கட்டி விட்டாள். ஆனால் அதுவோ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனீக்ஸாய் மீண்டும் மேலெழும்பி அல்லவா வருகின்றது.
அந்த காதலர் தினத்தன்று அவன் வாய் வார்த்தையாய் காதலை சொல்ல வேண்டும் என்று கூட அவள் எதிர்பார்க்கவில்லை மாறாய் அவன் கண்களில் தன்னை கண்டவுடன் தோன்றும் மின்னலுடன் கூடிய காதல் பார்வைக்காய் தான் தவமிருந்தாள். ஆனால் அவன் அன்றைய நாளின் பரிசாய் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பான் என அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லையே. எதிர்பாராதது நடப்பது தான் வாழ்க்கையோ.
அன்றைய நாளின் நினைவில் பொங்கிப் பெருகிய அழுகையை கூட வேறொருவனின் முன் அழ மனமற்று தனக்குள் அடக்கிக் கொண்டாள்.
தான் அவன் மேல் கொண்ட காதலுக்கு சற்றும் குறைவில்லா காதல் தான் தன் மீது இவன் கொண்டதும் என தெள்ளத்தெளிவாய் பெண்ணவளுக்கு புரிந்தது. அவன் கண்களை உற்று நோக்கினாள்.
தன் பதில் என்னவாய் இருக்குமோ என்ற பதற்றமும் தவிப்பும் ஒருங்கே மின்ன அவளையே பார்த்திருந்தான். அதை நினைத்து சோபையாய் புன்னகை சிந்தியது அவள் இதழ்கள்.
அவளுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். அவள் நேசித்தவன் அவளை துறந்து செல்ல அவளை நேசிப்பவன் அவளுக்காய் எதையும் துறக்கும் நிலையில் இருக்க அவளுக்கு அந்த காதல் மேலே பற்றற்று போய்விட்டது. அவளுக்கு அவள் மன்னவன் கொடுத்த வலியை அவள் தன் முன் நிற்பவனுக்கு கொடுக்க போகின்றாள். உண்மையாய் நேசித்த இரு நெஞ்சமும் காதல் வாதையில் வாடப்போகின்றது. பெண்ணவள் முன்னமே அந்த வலியை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றாள்.
அடைபுற்ற தொண்டையை லேசாய் செருமிக் கொண்டாள். கண்களில் துளிர்த்த நீரை இமை சிமிட்டி சரி செய்து கொண்டாள்.
“அழகா இருக்கீங்க.. நல்லா பேசுறீங்க...” அளவான புன்னகை சிந்தியது இதழ்கள்.
“ரொம்ப காதலிக்கிறீங்கன்னு புரியுது... ஆனா அதை ஏத்துக்கத்தான் முடில... I already love someone else” அவன் மனம் படப்போகும் பாட்டை உணர்ந்தவளாய் மென்மையாய் உரைத்தாள்.
ஆர்வத்துடன் அவள் பதிலுக்காய் காத்திருந்தவன் பெண்ணவள் மொழிந்ததை கேட்டு காதலெனும் கண்ணாடி சில்லு சில்லாய் உடைய உடைந்து போய் அவளை பார்த்தான். அன்பிற்கு ஏங்கும் அடிபட்ட குழந்தையாய் அவள் காதலுக்காய் ஏங்கி அவளை ஏக்கத்துடன் தழுவி மீண்டது அவன் விழிகள்.
வேறு ஒருத்தனை காதலிக்கும் பெண்ணை அதற்கு மேல் ஒரு நொடி கூட பார்க்க கூடாது என மனம் எடுத்துரைக்க தன் விழிகளை விலக்கிக் கொள்ள முனைந்தான். காதல் நெஞ்சமோ இனி பார்க்கவே முடியாத ரசிக்காவே முடியாத பெண்ணவள் முகத்தை ஆழமாய் தனக்குள் பதிப்பது போல் உற்று நோக்கியது. விலக்கிக் கொள்ள முடியவில்லை. தன்னவள் தனக்கு இல்லை என்ற எண்ணமே அவனை உடையச் செய்ய அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இருந்தும் தன் வேதனையை மறைத்துக் கொண்டு இறுதியாய் ஒரு முறை அவள் விழியோடு விழி கலந்தவன் அதில் இருந்த உண்மை நான் எந்த நேரத்திலும் பொய் சொல்லா மாட்டேன் என்பது போல் இருக்க அவள் கண்களில் இருக்கும் நேர்மையும் உண்மையும் விரும்பி பெண்ணவளை நேசித்தவன் இன்று தன் காதலை கொன்ற அந்த உண்மையை பெரிதும் வெறுத்தான்.
“all the best...” தன் காதல் தோற்று போன நேரத்திலும் கூட பெண்ணவள் காதல் ஜெய்க்க வேண்டும் என்பதற்காய் தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு கூறியவன் சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவள் கண்கள் பேசும் உண்மையைத்தான் வெறுத்தானே ஒழிய பெண்ணவளை அவனால் வெறுக்க முடியவில்லை. முதல் காதல் அவனுள் ஆழமாய் அழுத்தமாய் பதிந்து போனது. காலம் மாறினாலும் அதன் வடு மாறாது.
செல்லும் அவனை சில கணங்கள் பார்த்திருந்தவள் பாதி வழியிலே வீட்டிற்கு திரும்பி விட்டாள். வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது.
“டேய் ஏன்டா ஒருமாரி இருக்க என்னதான் ஆச்சு... சிஸ்டர் கிட்ட உன் காதலை சொன்னியா... சிஸ்டர் என்ன சொன்னா...” வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நண்பனை உலுக்கிக் கொண்டிருந்தனர் மஹத்தின் தோழர்கள்.
“அவன் கொஞ்ச நேரம் ப்ரீயா இருக்கட்டும் நீங்க வெளியில போங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன்...” மற்ற நண்பர்களை வெளியில் அனுப்பி விட்டு அவனருகில் வந்து அமர்ந்தான் அகில். அவனின் உயிர்த்தோழன்.
“சிஸ்டர் என்ன சொல்லுச்சுடா...” நண்பனின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டு கேட்டான்.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் இருந்து அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க அவன் மடி சாய்ந்து கொண்டவன் காத்திருந்த காதல் கொடுத்த வலியை தாள முடியாமல் கதறி அழுதான்.
“வேற ஒருத்தனை காதலிக்கிறாளாம்டா... என்னால தாங்கிக்க முடில மச்சான்... உனக்கு தெரியும்ல நான் எந்தளவுக்கு அவளை காதலிச்சேன்னு.. வலிக்குதுடா.. செத்துடலாம் போல இருக்கு... என்னால அவளை மறக்க முடியாதுடா இங்க வச்சிருந்தேன்...” இதயத்தை தொட்டுக் காட்டி கதறிய நண்பனின் கதறலை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்ல. எப்போதும் சிரித்த முகமாய் அமைதியுடன் கூடிய அட்டகாசத்துடன் வலம் வரும் நண்பனின் அழுகையை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
கையில் சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்துடன் தன் முன் நின்றவனை பார்த்து என்ன செய்வது என புரியாமல் ஒருவித இயலாமை கலந்த தடுமாற்றத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா.
தன்னவளை காதலுடன் பார்த்த மஹத் இதழ்களில் தவழ்ந்த மென்மையான புன்னகையுடன் தன் கையில் இருந்த ரோஜாக்களை பார்த்தவன் அதை பார்வையால் வருடினான். அது தன்னவளையே வருடிக் கொடுப்பது போல் அத்தனை பரவசமாய் அவனுள் இறங்கியது.
இரண்டு வருட காத்திருப்பினை வார்த்தையால் வடிக்க எண்ணினான்... காதலின் காத்திருப்பு சுகமாய் இருப்பினும் ஒருவித வலியில் அவன் குரல் கரகரப்பாய் ஒலித்தது.
“இரண்டு வருசமா காத்திருந்தேன்... இப்போ தான் சொல்றதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...” சன்ன சிரிப்புடன் ஒரு கையால் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.
“முதல் தடவையா உன்னை பார்க்கும் போதே எனக்காக பொறந்த பொண்ணுன்னு தான் தோனிச்சு... இதுவரைக்கும் யாரை பார்த்தும் கூட இந்த மாதிரி தோணது இல்ல... பர்ஸ்ட் டைம் ஏதோ ஸ்ட்ரக் ஆன மாதிரி...” அதற்கு மேல் எப்படி சொல்வது எனப் புரியாமல் பின்னங்கழுத்தை அழுந்த தடவிக் கொடுத்தவன் அலைபாய்ந்து கொண்டிருந்த தன்னவளின் விழிகளை உற்று நோக்கினான்.
“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு சொல்ல விரும்பிறேன் மது... இதுவரைக்கும் நான் இப்பிடி இருந்ததே கிடையாது... கண்ணை மூடி என்னால தூங்க முடில.. கண்ணை திறந்தா நீ என் பக்கத்தில இருக்கிற மாதிரி பீல் பண்றேன்... இதை எப்பிடி சொல்றதுன்னு கூட தெரில... நீ என்னை சுத்தி இருக்கிற மாதிரி ஒவ்வொரு நிமிசமும் என் கண்கள் உன்னை தேடுது மது... ஆயிரம் பேர் உன்னை விரும்பினாலும் என்னோட அன்பு அதையும் விட ஒருபடி அதிகமா இருக்கும்னு மட்டும் சொல்ல தோணுது... என்னால உன்னை மறக்க முடியல மறக்கவும் விரும்பல... நீ எனக்கு மட்டும் சொந்தம்னு மனசு துடிக்குது... நான் உன்னை ரொம்ப விரும்பிறேன் மது.. நான் சாகும் போது கூட இந்த காதல் அப்பிடியே இருக்கணும்னு நான் ஆசைபடுகிறேன்... even after that... அதுக்கு பிறகும் கூட...”
அழகான அழுத்தமான ஆழமான காதல். தன் மனதிலுள்ளதை காதலுடன் எடுத்துரைத்தவன் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றவில்லை. அந்த கண்கள் அவனை ஆழ்கடலுக்குள் அமிழ்த்துவது போலிருந்தது. அதில் விரும்பியே தொலைந்து போனான் அந்த காதல் பித்தன்.
அவன் நீட்டிய ரோஜாக்களை வாங்காது அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு அவன் காதலின் ஆழத்தை உணர முடிந்தது. இப்படி ஒரு காதலை தான் அவள் அவனிடம் கொண்டாள். ஆனால் அவன் தகுதியற்று போய்விட்டானே. அதை நினைக்கும் போதே அடிவயிற்றுக்குள் இருந்து எதுவோ மேலெழுந்து தொண்டைக்குள் அடைப்பது போல் அவஸ்தையாய் இருந்தது. கண்களில் கண்ணீரின் சாயல். அடக்கிக் கொண்டாள்.
தகுதியற்ற ஒருவனை காதலித்ததும் அவள் பிழை தான் அந்த வலியை தினம் தினம் அனுபவிப்பதும் அவள் பிழை தான். ஆனால் மறக்க முடியவில்லையே.. அவள் அவன் மேல் கொண்ட காதலுக்கு சமாதியும் கட்டி விட்டாள். ஆனால் அதுவோ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனீக்ஸாய் மீண்டும் மேலெழும்பி அல்லவா வருகின்றது.
அந்த காதலர் தினத்தன்று அவன் வாய் வார்த்தையாய் காதலை சொல்ல வேண்டும் என்று கூட அவள் எதிர்பார்க்கவில்லை மாறாய் அவன் கண்களில் தன்னை கண்டவுடன் தோன்றும் மின்னலுடன் கூடிய காதல் பார்வைக்காய் தான் தவமிருந்தாள். ஆனால் அவன் அன்றைய நாளின் பரிசாய் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பான் என அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லையே. எதிர்பாராதது நடப்பது தான் வாழ்க்கையோ.
அன்றைய நாளின் நினைவில் பொங்கிப் பெருகிய அழுகையை கூட வேறொருவனின் முன் அழ மனமற்று தனக்குள் அடக்கிக் கொண்டாள்.
தான் அவன் மேல் கொண்ட காதலுக்கு சற்றும் குறைவில்லா காதல் தான் தன் மீது இவன் கொண்டதும் என தெள்ளத்தெளிவாய் பெண்ணவளுக்கு புரிந்தது. அவன் கண்களை உற்று நோக்கினாள்.
தன் பதில் என்னவாய் இருக்குமோ என்ற பதற்றமும் தவிப்பும் ஒருங்கே மின்ன அவளையே பார்த்திருந்தான். அதை நினைத்து சோபையாய் புன்னகை சிந்தியது அவள் இதழ்கள்.
அவளுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். அவள் நேசித்தவன் அவளை துறந்து செல்ல அவளை நேசிப்பவன் அவளுக்காய் எதையும் துறக்கும் நிலையில் இருக்க அவளுக்கு அந்த காதல் மேலே பற்றற்று போய்விட்டது. அவளுக்கு அவள் மன்னவன் கொடுத்த வலியை அவள் தன் முன் நிற்பவனுக்கு கொடுக்க போகின்றாள். உண்மையாய் நேசித்த இரு நெஞ்சமும் காதல் வாதையில் வாடப்போகின்றது. பெண்ணவள் முன்னமே அந்த வலியை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றாள்.
அடைபுற்ற தொண்டையை லேசாய் செருமிக் கொண்டாள். கண்களில் துளிர்த்த நீரை இமை சிமிட்டி சரி செய்து கொண்டாள்.
“அழகா இருக்கீங்க.. நல்லா பேசுறீங்க...” அளவான புன்னகை சிந்தியது இதழ்கள்.
“ரொம்ப காதலிக்கிறீங்கன்னு புரியுது... ஆனா அதை ஏத்துக்கத்தான் முடில... I already love someone else” அவன் மனம் படப்போகும் பாட்டை உணர்ந்தவளாய் மென்மையாய் உரைத்தாள்.
ஆர்வத்துடன் அவள் பதிலுக்காய் காத்திருந்தவன் பெண்ணவள் மொழிந்ததை கேட்டு காதலெனும் கண்ணாடி சில்லு சில்லாய் உடைய உடைந்து போய் அவளை பார்த்தான். அன்பிற்கு ஏங்கும் அடிபட்ட குழந்தையாய் அவள் காதலுக்காய் ஏங்கி அவளை ஏக்கத்துடன் தழுவி மீண்டது அவன் விழிகள்.
வேறு ஒருத்தனை காதலிக்கும் பெண்ணை அதற்கு மேல் ஒரு நொடி கூட பார்க்க கூடாது என மனம் எடுத்துரைக்க தன் விழிகளை விலக்கிக் கொள்ள முனைந்தான். காதல் நெஞ்சமோ இனி பார்க்கவே முடியாத ரசிக்காவே முடியாத பெண்ணவள் முகத்தை ஆழமாய் தனக்குள் பதிப்பது போல் உற்று நோக்கியது. விலக்கிக் கொள்ள முடியவில்லை. தன்னவள் தனக்கு இல்லை என்ற எண்ணமே அவனை உடையச் செய்ய அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இருந்தும் தன் வேதனையை மறைத்துக் கொண்டு இறுதியாய் ஒரு முறை அவள் விழியோடு விழி கலந்தவன் அதில் இருந்த உண்மை நான் எந்த நேரத்திலும் பொய் சொல்லா மாட்டேன் என்பது போல் இருக்க அவள் கண்களில் இருக்கும் நேர்மையும் உண்மையும் விரும்பி பெண்ணவளை நேசித்தவன் இன்று தன் காதலை கொன்ற அந்த உண்மையை பெரிதும் வெறுத்தான்.
“all the best...” தன் காதல் தோற்று போன நேரத்திலும் கூட பெண்ணவள் காதல் ஜெய்க்க வேண்டும் என்பதற்காய் தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு கூறியவன் சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவள் கண்கள் பேசும் உண்மையைத்தான் வெறுத்தானே ஒழிய பெண்ணவளை அவனால் வெறுக்க முடியவில்லை. முதல் காதல் அவனுள் ஆழமாய் அழுத்தமாய் பதிந்து போனது. காலம் மாறினாலும் அதன் வடு மாறாது.
செல்லும் அவனை சில கணங்கள் பார்த்திருந்தவள் பாதி வழியிலே வீட்டிற்கு திரும்பி விட்டாள். வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது.
“டேய் ஏன்டா ஒருமாரி இருக்க என்னதான் ஆச்சு... சிஸ்டர் கிட்ட உன் காதலை சொன்னியா... சிஸ்டர் என்ன சொன்னா...” வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நண்பனை உலுக்கிக் கொண்டிருந்தனர் மஹத்தின் தோழர்கள்.
“அவன் கொஞ்ச நேரம் ப்ரீயா இருக்கட்டும் நீங்க வெளியில போங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன்...” மற்ற நண்பர்களை வெளியில் அனுப்பி விட்டு அவனருகில் வந்து அமர்ந்தான் அகில். அவனின் உயிர்த்தோழன்.
“சிஸ்டர் என்ன சொல்லுச்சுடா...” நண்பனின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டு கேட்டான்.
அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் இருந்து அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க அவன் மடி சாய்ந்து கொண்டவன் காத்திருந்த காதல் கொடுத்த வலியை தாள முடியாமல் கதறி அழுதான்.
“வேற ஒருத்தனை காதலிக்கிறாளாம்டா... என்னால தாங்கிக்க முடில மச்சான்... உனக்கு தெரியும்ல நான் எந்தளவுக்கு அவளை காதலிச்சேன்னு.. வலிக்குதுடா.. செத்துடலாம் போல இருக்கு... என்னால அவளை மறக்க முடியாதுடா இங்க வச்சிருந்தேன்...” இதயத்தை தொட்டுக் காட்டி கதறிய நண்பனின் கதறலை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்ல. எப்போதும் சிரித்த முகமாய் அமைதியுடன் கூடிய அட்டகாசத்துடன் வலம் வரும் நண்பனின் அழுகையை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.