அத்தியாயம் 01
“I'm so lonely broken angel,
I'm so lonely, listen to my heart.
Man, dooset daram,
Be cheshme man, gerye nade.
Na, nemitoonam,
Bedoone to, halam bade.
I'm so lonely broken angel...
I'm so lonely, listen to my heart...
One n' lonley, broken angel...
Come n' save me, before I fall apart...”
ஆடிடோரியத்தின் எட்டுத்திக்கும் பரவிய குழைந்த குரல் வெகு திருப்தியளிக்க அதை கண்மூடி ரசித்தபடி தனக்குள் ஆழ்ந்து போயிருந்த ஷாலினி திருப்தியுடன் முன் நின்ற மாணவியை பார்த்து.
“இத்தனை நாள் ப்ராக்டீஸ்ல இன்னிக்கி தான் நல்லா பாடியிருக்க இதே மாதிரி காம்பெடிசன்லயும் பாடி பிரஸ்ட் பிளேஸ் எடுக்கணும் புரியுதா... கீப் இட் அப்...” பாராட்டி விடைபெற்று ஆசிரியர்களுக்கான ஸ்டாப் ரூம் நோக்கி சென்றார்.
‘பார்றா நம்மள பாராட்டிட்டு போகுது.. அவ்வளவு நல்லாவா பாடினேன்..’ மனதில் எண்ணிக் கொண்டாள் அவள்.
‘இது உனக்கு தெரியுது உன்னைய பாராட்டிட்டு போன டீச்சருக்கு தெரியலையேமா’ டைமிங் கவுண்டர் கொடுத்தது அவள் மனசாட்சி.
‘எவ்ளோவோ கேட்டிட்டோம் இத கேக்கமாட்டோமா..’ அதை கேட்டு வெமாசூசு எதுவுமில்லாமல் சிரித்துக்கொண்டே பதிலடிகொடுத்தாள்.
‘இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல...’ காறித்துப்பியது மனசாட்சி.
அதில் சுற்றும் முற்றும் பார்த்தவள் ‘நல்லவேளை யாருக்கும் தெரியலை...’ எனும் பாவனையுடன் முகத்தை கெத்தாய் வைத்துக் கொண்டு உற்சாகத்துடன் தோழிகளை நாடிச் செல்ல,
‘அடச்சி தூ... ரியாக்சன குறை...’ மீண்டும் அது காறி உமிழ அதை கேட்டு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள்,
‘இது நமக்குள்ளே இருக்கட்டும் வெளிய யாருக்கும் தெரிய வேணாம்...’ காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச மனசாட்சி கேவலமான பார்வையுடன் போனால் போகட்டும் என்று சமத்தாய் உள்ளே நுழைந்து கொண்டது.
‘ஷப்பாஹ்... இது கிட்ட மாட்டிக்கின்னு நான் படும் பாடிருக்கே... தாங்கமுடில...’ உதட்டி பிதுக்கி அழுவது போல் பாவனை செய்தவள் தோழிகள் அருகில் நெருங்கவும் கெத்தாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.
“என்னடி சீடுமூஞ்சி வாயால பாராட்டெல்லாம் வாங்கிட்டியாம்... பெரிய ஆளு தான் போ... என்ன சொக்கு பொடி டி போட்ட... நானும் அது வாயால என்னைக்காவது ஒரு நாள் பாராட்டு வாங்கலாம்னு பார்க்கிறேன் முடியலடி... என்னைய பார்த்தாலே உர்ராங்கோட்டான் மாதிரி உர்ருன்னு முறைச்சு வைக்குது...” கடுப்பில் பொரிந்தாள் ஷாஷி.
அதை கேட்டு பள்ளி சீருடையின் மேற்சட்டையை தூக்கி விட்ட பாலா சீரியசான முகபாவத்தில் அவள் தோள் மேல் கைபோட்டு “மச்சி... இதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு சொல்றேன் கேட்டுக்கோ... இதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும் ஒரு முரட்டு தனமான புத்திசாலித்தனம் வேணும்...” கண்களை உருட்டி உருட்டி அவளை ஓட்ட,
“உன்கிட்ட கேட்டதுக்கு என்னைய ...” ஷாஷி கடுப்புடன் பல்லை கடித்து பாதியில் நிறுத்த,
“செருப்பாலயே அடிச்சிக்கனும்.. அத தானே சொல்ல வந்த” அழகாய் முடித்து வைத்தாள் ஷிக்கு.
“ஹா ஹா...” ஷிக்குவும் பாலாவும் கையடித்து சிரிக்க “உங்கள...” அவர்களை அடிக்க துரத்தினாள் ஷாஷி.
“அடியே அடிக்காதடி... வலிக்கிது... வேணாம் விட்டிடு அழுதிடுவேன்...” ஷிக்கு ஆடிடோரியத்தின் மேல் தளத்தில் படிகளில் ஏறி இறங்கி ஆட்டம் காட்ட அவளுடன் பாலாவும் சேர்ந்து கொண்டாள்.
“கன்னி பொண்ணு சாபம் உன்னைய சும்மாவிடாதிடி... இதுக்கு மேலா என்னால ஓட முடில விட்டிடு...”
“அடிங்..” பாலாவின் பேச்சை கேட்டு மீண்டும் அவளை துரத்த இறுதியில் மூவரும் மூச்சு வாங்க படியில் தோய்ந்து அமர்ந்து கொண்டனர்.
“எ..என்னா..ல முடில... ஷப்பா.. மூ..ச்சு வாங்கிது...” தொண்டை உளற மூச்சு வாங்கிக் கொண்டு ஒரு போத்தல் தண்ணீரை மூவரும் காலி செய்தனர்.
“காலைல போனதிலிருந்து எஸ்எஸ் (SS – சிடுமூஞ்சி ஷாலினி) கிட்ட பாடி காமிச்சே என் தொண்ட போச்சு... இப்போ செம்மையா பசிக்கிது.. கான்டீன் போகலாம்.. இல்ல இங்கயே பொட்டுன்னு போய்டுவேன்...” சோர்ந்த குரலில் கூறிய பாலா தோழிகளை இழுத்துக் கொண்டு கான்டீன் சென்றாள்.
“அண்ணே... ஆறு சமோஸா...”
“எதுக்கிடி ஆறு சமோஸா...” ஷிக்கு லட்டுவை வாய்க்குள் மென்றபடி கேட்க, அதில் அர்த்த பார்வை பரிமாறிக் கொண்ட பாலாவும் ஷாஷியும் வாய்விட்டு சிரித்தனர்.
தோழிகளின் சிரிப்பின் காரணம் உணர்ந்து முதலில் அவர்களை முறைத்தவள் பின் சன்ன சிரிப்புடன் சிரிக்கும் போது பளிச் பளிச் என மின்னும் பாலாவின் கன்னத்து குழியை ஆசையுடன் தடவிக் கொடுத்து எப்போதும் போல் “நான் மட்டும் பையனா பொறந்திருந்தேன் அப்பிடியே உன்னை தூக்கிட்டு போய்....”
“தூக்கிட்டு போயி...” ஷாஷி கண்ணடித்துக் கொண்டு கேட்க,
“அப்பிடியே...” கள்ளச்சிரிப்புடன் ஷிக்கு பாதியில் நிறுத்த,
“சீ... கர்மம்... கர்மம்... என்னத்த சொல்ல போற...” கண்களை சுருக்கி மறைமுகமான ஆர்வத்துடன் கேட்டாலும் முகம் தோழியின் பேச்சில் லேசாய் சிவந்து போனது.
“கல்யாணம் பண்ணுவேன்னு தான் சொல்ல வந்தேன்... நீ என்ன நினைச்ச...” குறும்புடன் ஹை பை அடித்துக் கொண்டு இரு தோழிகளும் ஒருமித்த குரலில் கேட்க, அதில் சன்னமாய் வெட்கம் கொண்டவள் “சும்மாயிருங்கடி...” முகத்தை கைகுட்டையால் மறைத்துக் கொண்டாள்.
“வெக்கத்த பாருடா... இந்த உலகத்தில யாரை வேணா நம்பலாம் ஆனா அமைதியா இருக்கிற யாரையும் நம்ப கூடாதுடி...” ஷாஷி கண்ணடிக்க, அதை ஆமோதித்து தலையசைத்தாள் ஷிகா.
அதற்குள் சுட சுட சமோஸா வரவும் பசியில் இருந்த மூவரும் எச்சில் ஊறிய நாவுடன் தக்காளி கெட்சப் ஊற்றி ஒரு கட்டு கட்டினர்.
மூவருமே பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாய் படித்தவர்கள். பெண்கள் பள்ளி என்பதால் பெரிதாய் கட்டுபாடுகள் இல்லாவிடினும் ஓரளவு கட்டுப்பாடுடன் கூடிய பள்ளி தான். இப்போது பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர்.
படிப்பில் மூவரும் மூன்று விதம். ஷிகா எப்போதும் வகுப்பில் முதலிடம். பாலா இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்வாள். ஷாஷினிக்கு அந்தளவுக்கு படிப்பில் ஈடுபாடில்லை. அவள் ரசனைகள் சற்று வித்தியாசமானவை. ஆனாலும் படித்து நல்ல மார்க் எடுத்து விடுவாள்.
சாப்பிட்டு முடித்து கிரௌண்டிற்குள் நுழைந்தவர்கள் கல் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
“மோர்னிங் வந்தது... இன்னும் கிளாஸ்க்கு போகல... சீதேவி மட்டும் என்ட்ரி கொடுத்தா நம்ம மூனு பேரையும் மூதேவயாக்கி இமேஜ் டேமேஜ் பண்ணிடுவா... சும்மாவே நம்ம மூனு பேரையும் அதுக்கு பிடிக்காது இப்போ மட்டும் கிளாஸ்க்கு போகல வச்சி செஞ்சிடும்...” பாலா வகுப்பாசிரியரின் நினைவில் கடுப்புடன் கூறினாள்.
“ஏன்டி நல்ல நேரத்தில் அவ பேச்சை எடுக்கிற வாயில வந்திட போகுது... இவங்களையெல்லாம் யாருடி டீச்சர் ஆக சொன்னாங்க... இப்போ நம்ம உயிரை குடிக்கிறாங்க... உனக்கே தெரியும்ல எனக்கு ஹிஸ்ட்ரி எவ்ளோ இன்ரெஸ்ட்னு; எப்போ இவ வந்தாவோ அன்னைக்கு போச்சு என் ஹிஸ்ட்ரி மேல இருந்த ஆசை... இப்போ எனக்கு கிளாஸ்க்கு போற மூடே இல்லடி... நீ வேணா போய் அவ அறுக்கிறதை ஆசைதீர வாங்கிட்டு வாயேன்..” கடுப்புடன் கூறியபடி உதட்டை சுழித்துக் கொண்டாள் ஷிகா.
“அது என்ன தேவைக்கு... அதெல்லாம் நானும் போக போறதில்ல... நீங்க ரெண்டு பேரும் வராம நான் என்னைக்கு அந்த வகுப்புக்குள்ள போய் இருக்கேன்....” அலுப்புடன் உரைத்த பாலா ஷாஷியின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.
“இன்னிக்காச்சும் தூங்கலாம்னு பார்த்தேன் அதுக்கு வேட்டு வச்சிட்டானுங்க... ஈவ்னிங் டியூசன் க்ளாஸ் போறதா இல்ல கட் பண்றதா...” மாலை நேர வகுப்பை பற்றி பேச்சை எடுத்தாள் ஷிகா.
“நான் கண்டிப்பா வருவேன்...” அவசரப்பட்டு வாயை விட்ட ஷாஷி அதன் பின்பு தான் அவசரபட்டதை உணர்ந்து அசடு வழிந்து இதழை அழுந்த கடித்துக் கொண்டாள்.
“அம்மாடியோய்... செம்ம ஸ்பீட்டா தான் போ...” ஓட்டினாள் பாலா.
“அதுக்கில்லடி.. இன்னிக்கு சயின்ஸ்ல முக்கியமான பாடம் படிக்கிறோம்ல அதுக்கு தான் சொன்னேன்... வேறயொன்னுயில்ல...” தோழிகளிடம் வசமாய் சிக்கிக் கொண்டதில் தவிப்புடன் படபடத்தாள்.
“அப்பிடியா... நான் நம்பிட்டேன்... ஷிக்கு நீயும் நம்பிட்டேன்னு சொல்லு... அப்போதான் இது நம்பும்... நாம நம்பிட்டோம்னு...” தான் நம்பவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துரைத்தாள் பாலா. உடன் ஷிகாவும்.
“நானும் சத்தியமா நம்பிட்டேன்டி...” இதழ்கடையோரம் குறும்பில் துடித்தது.