ஹாய் கவி,
கதை ரொம்ப நல்லா இருந்தது.அதுக்குள்ள முடிந்து விட்டதேனு பீல் பண்ண வச்சுட்டிங்க.கைலாஷ் மாதிரியான பொறுமையான ஆண்மகனை பார்க்கவே முடியாது.அகல்யா கைலாஷ் வாழ்க்கை துணையாக வருவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.கைலாஷ்க்கு காயத்ரியை பார்த்தவுடன் பிடித்ததுபோல் காயத்ரிக்கும் கைலாஷை பிடிக்கவேண்டும் என்று அவசியமில்லையே அவள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அவளுடைய விருப்பம்,கனவும் இருக்கு.அவளுக்கு தகுந்த மாதிரியான துணையை தான் அவர்கள் வீட்டில் பார்த்திருக்கவேண்டும்.கைலாஷ் மாதிரியான ஆள் கண்டிப்பாக காயத்ரிக்கு செட்டாகமாட்டான்.அகல்யாதான் கைலாஷ்க்கு ஏற்ற ஜோடி.அவளுடைய பொறுமை,எப்படியும் அவனை மாற்றிவிடலாம் என்ற தன்னம்பிக்கை ரொம்ப பிடிச்சது.அகல்யா கைலாஷின் விலகுதலுக்கு காரணம் தெரியாமல் அவள் படும் அவஸ்தையை பார்க்கும் போது ரொம்ப பாவமா இருந்தது.கடைசியில் ஹாஸ்பிட்டலில் நடக்கும் காட்சி ரொம்ப அருமையாக இருந்தது.கைலாஷ் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டான்.