இந்த ஹீரோயின்ஸ் ரவுசு தாங்கலையே......
சட்டு புட்டுன்னு மொத்தமா சொல்லிமுடிக்கிறதில்லை.......
என்ன நடக்குதுன்னே தெரியாமல் ஆளாளுக்கு ஏமாற்றினால் அவனும் என்ன பண்ணுவான்???
அதுவும் பொண்டாட்டியே பண்ணினால்......
அவள் குடும்பம் ஏமாற்றப்பட்டதில் அவன் பங்கு என்ன???
கே எம் ஜுவல்லரியை காஞ்சன மாலா ஜுவல்லரின்னு நீயா நினைத்து கொண்டால் எப்படி விஷ்வா?
இன்னிக்கு அதிர்ச்சியாறவன் அன்னிக்கே நல்லா விசாரிச்சிருக்கணும்
இதுக்கே இப்படி அதிர்ச்சியானால் இன்னும் செந்தில்வேல் தன்னுடைய அப்பா இல்லைன்னு தெரியும் பொழுது விஸ்வாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலவே
அதுசரி
பெற்ற தாயே ஒண்ணும் சொல்லாமல் மூடி மறைக்கும் பொழுது இப்போ வந்த காஞ்சனா மட்டும் எல்லாவற்றையும் சொல்லிடுவாளா என்ன?
அதுவும் அவள் பாதிக்கப்பட்டவரின் மகள் வேற
அப்பாவை ஏமாற்றியதற்கு பழி தீர்க்க நினைப்பவள் வேற
ஆனால் எனக்கு ஒண்ணுதான் புரியலை, சவீதா டியர்
எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா-ங்கிற மாதிரி எல்லா தப்பையும் செஞ்சது கனகவேலும் அவன் பிள்ளைங்களும்
சம்பந்தமேயில்லாமல் எந்த தப்பும் செய்யாத விஸ்வகர்மாவுக்கு எதுக்கு இத்தனை துன்பங்கள்?
விஸ்வா ரொம்ப ரொம்ப பாவம்ப்பா