அருமையான பதிவு சவீதா
.விலோசனா கண்ணை பிடிச்சுருக்கு,மயக்குதுன்னு ஆதி சொன்னதுக்கு வெறி பிடிச்சது போல கத்தறா
,இவ கண்ணை பார்த்து யாராவது கேலி செய்து
பேசியிருப்பாங்களோ,அதனால் ஏற்பட்ட பாதிப்பால் சத்தம் போடறாளா
.
ஆதி என்ன சாப்பாடு வேணாம்னா சொன்னான்,உடம்பு சரியில்லை ரசம் போதும்னு சொன்னவன் கிட்ட தேவையில்லாம பேசி,அவன் சாப்பிடாம தட்டை வீசிட்டு,திட்டு வாங்கிட்டு போயிட்டான்
.
புருசன்,பொண்டாட்டி சண்டை நாலு சுவத்துகுள்ளன்னு தெரியாதான்னு சொல்றரு,என்ன நடந்தது என தெரியாமலே பொண்டாட்டி முன்னாடி கணவனை திட்டாம,தனியா கூட்டிட்டு போய் கேட்டு, கண்டிக்கனும்னு தெரியாதா
.
சந்தியா,விலோவிடம் பெண்கள் அன்னபூரணின்னு சொல்வாங்க,யார் வயிறும் வாடாமல் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்குன்னு பொறுமையாக எடுத்து சொல்லியது அருமை
.