fathima.ar
Well-Known Member
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களது மனைவி ஈஷாவுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அல்லாஹ் அறிவித்தபடி அக்குழந்தைக்கு ‘யஹ்யா’ என்ற பெயர் சூட்டப்பட்டது.நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் பிறந்து விட்டார்கள்.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவயதிலேயே மிகவும் வசீகரமானத் தோற்றம் பெற்றிருந்தார்கள்.
அவர்கள் மற்ற சிறுவர்களைப் போல விளையாட்டில் ஈடுபடாதிருந்தார்கள். மற்ற சிறுவர்கள் அவர்களை விளையாட அழைத்தாலும் ‘மனிதனை அல்லாஹ் விளையாடுவதற்காக படைக்கவில்லை’ என்று கூறிவிடுவார்கள்.
அல்லாஹ் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி திருக்குர்ஆனில்
“யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவராயிருக்கும்போதே சர்வ காலமும் இறையச்சத்தின் காரணமாக அழுது கொண்டேயிருப்பார்கள். இதைப் பற்றி அன்னாரது தந்தை கேட்டபோது, ‘தீயாலான பாலைவனம் நரகத்தில் உள்ளது. அதனைக் கண்ணீரைக் கொண்டுத் தவிர வேறு எதனைக் கொண்டும் அணைக்க முடியாது என்று நீங்கள் கூறினீர்கள். அதனைக் கேட்டபிறகுதான் நான் அடிக்கடி அழுது கொண்டிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன்’ என்றார்கள்.
தமது மகனின் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இதுபற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் சொன்னான் ‘ ஓ ஜகரிய்யாவே! நீங்கள்தானே இறை அச்சம் அதிகம் நிறைந்த எனது வலீயாக உள்ள மக்கட்பேறு கேட்டீர்கள்? உங்கள் வேண்டுகோள்படியே யஹ்யாவை எனது அச்சம் நிறைந்த வலீயாகவே படைத்துள்ளேன்.
அதன்பிறகு ஜகரிய்யா நபி அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டார்கள்.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து அழுது கொண்டேயிருந்ததால் அவர்களது கன்னங்களின் சதை சிதைந்து, பற்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன.
தங்கள் மகன் முன்னால் நரகத்தைப் பற்றி போதிப்பதையே ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவயதிலேயே மிகவும் வசீகரமானத் தோற்றம் பெற்றிருந்தார்கள்.
அவர்கள் மற்ற சிறுவர்களைப் போல விளையாட்டில் ஈடுபடாதிருந்தார்கள். மற்ற சிறுவர்கள் அவர்களை விளையாட அழைத்தாலும் ‘மனிதனை அல்லாஹ் விளையாடுவதற்காக படைக்கவில்லை’ என்று கூறிவிடுவார்கள்.
அல்லாஹ் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி திருக்குர்ஆனில்
“யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவராயிருக்கும்போதே சர்வ காலமும் இறையச்சத்தின் காரணமாக அழுது கொண்டேயிருப்பார்கள். இதைப் பற்றி அன்னாரது தந்தை கேட்டபோது, ‘தீயாலான பாலைவனம் நரகத்தில் உள்ளது. அதனைக் கண்ணீரைக் கொண்டுத் தவிர வேறு எதனைக் கொண்டும் அணைக்க முடியாது என்று நீங்கள் கூறினீர்கள். அதனைக் கேட்டபிறகுதான் நான் அடிக்கடி அழுது கொண்டிருக்கும் வழக்கத்தை மேற்கொண்டேன்’ என்றார்கள்.
தமது மகனின் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இதுபற்றி கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் சொன்னான் ‘ ஓ ஜகரிய்யாவே! நீங்கள்தானே இறை அச்சம் அதிகம் நிறைந்த எனது வலீயாக உள்ள மக்கட்பேறு கேட்டீர்கள்? உங்கள் வேண்டுகோள்படியே யஹ்யாவை எனது அச்சம் நிறைந்த வலீயாகவே படைத்துள்ளேன்.
அதன்பிறகு ஜகரிய்யா நபி அவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டார்கள்.
ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து அழுது கொண்டேயிருந்ததால் அவர்களது கன்னங்களின் சதை சிதைந்து, பற்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன.
தங்கள் மகன் முன்னால் நரகத்தைப் பற்றி போதிப்பதையே ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.