fathima.ar
Well-Known Member
ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நீண்ட காலம் வரை யாரும் நபியாக வரவில்லை. இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜாலூத் என்னும் கொடியோன் பனீ இஸ்ரவேலர்களை மிகக் கொடுமைப் படுத்தியும், கொன்றும், அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தும் அநியாயம் செய்து கொண்டிருந்தான். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் தத்தம் வீடு, வாசல்களை விட்டுப் பல திக்குகளிலும் ஓடி ஒளிந்தனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நபி தோன்றினார்கள். அவர்களது பெயர் அஸ்மவீல் என்பதாகும். பனீ இஸ்ரவேலர்கள் இந்த நபியிடம் சென்று தங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி ஓர் அரசனை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், அந்த அரசனின் ஆதரவோடு அந்த கொடியவன் ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும் என்றும் விடுத்த வேண்டுகோளை அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏற்று அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
அதன்காரணமாக, அல்லாஹ் ஒரு கழியையும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யையும் அனுப்பி, பனீ இஸ்ரவேலர்களில் அரசனுக்குத் தகுதியானவர்கள் அந்தக் கழியின் உயரமிருப்பர் என்றும், அத்தகையவர் அங்கு வந்ததும் பாத்திரத்திலுள்ள எண்ணெய் கொப்பளிக்கும் என்றும் அத்தகையவரே பனீ இஸ்ரவேலர்களுக்குரிய அரச பதவிக்குத் தகுதியானவர் என்றும் அறிவித்தான்.
இத்தகவலை தம் மக்களுக்கு நபி அவர்கள் அறிவித்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அன்னாரின் வீட்டில் குழுமினர். ஒருவருக்கும் அந்த அடையாளம் பொருந்தவில்லை. இறுதியாக தாலூத் என்பார் தம்முடைய காணாமல் போன கழுதையைத் தேடி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு வந்தான். அவன் வந்ததும் அந்த எண்ணெய் கொப்பளிக்க ஆரம்பித்தது. கழியை வைத்து அளந்து பார்த்ததில் சரியான அளவாகவே இருந்தது.
தாலூத் பனீ இஸ்ரவேலர்களின் அரசன் என்று அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவித்ததும் தாலூத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் புன்யாமீன் வழி வந்தவராயிருந்தார். மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். அதனால் பனீ இஸ்ராயீல்கள் தங்கள் அரசனாக அவனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. தங்கள் யஹூதா வம்சாவழியில் வந்தவர்களையே அரசராக ஏற்றுக் கொள்வோம் என்றும் பிடிவாதம் பிடித்தனர். இது அல்லாஹ்வின் ஏற்பாடு. இதை மறுப்பது அவனை கோபத்திற்குள்ளாக்கிவிடும் என்று அச்சமூட்டி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.
தாலூத்துடைய புத்தி தீட்சண்யத்தையும், ஆளும் திறனையும் பார்த்து நாளடைவில் மக்கள் அவனை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக அல்லாஹ் ஒரு பெட்டியை கொடுத்திருந்தான். அப்பெட்டி நபிமார்களின் குடும்பத்தினர்களிடம் கைமாறிக் கொண்டே வந்தது. ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கைக்கு அது வந்தபோது அதில் தவ்ராத் வேதத்தையும், சில பொருட்களையும் அதில் வைத்திருந்தார்கள். இந்தப் பெட்டி யார் கையில் இருக்கிறதோ அவருக்கு வெற்றி நிச்சயம் என்று இஸ்ரவேலர்கள் நம்பி வந்தனர்.
இப்பெட்டி அமாலிகா என்ற பெயர் கொண்ட கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காமல் அசுத்தமான இடங்களில் வைத்திருந்தனர்.அதனால் அவர்களுக்கு அது பெரும் துன்பமாக மாறிவிட்டது. எனவே அதை ஒரு குப்பை மேட்டில் வைத்து புதைத்து விட்டனர்.
அல்லாஹ் அந்தபெட்டியை வானவர்கள் மூலம் அரசர் தாலூத்திடம் சேர்த்து விட்டான். உடனே ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘பனீ இஸ்ரவேலர்களிடம் சென்று நாம் அனைவரும் அரசர் தாலூத் தலைமையில் திரண்டு அமாலிகா கூட்டத்தினர்களிடம் சிறைப்பட்டு கிடக்கும் பனீ இஸ்ரவேலர்களை மீட்டு வருவோம்’ என்று கூறினர்.
அவர்களது கூற்றிக்கிணங்க அரசர் தாலூத் 70000பேர் கொண்ட படையினைத் திரட்டினார். அப்படையினரை நோக்கி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ஓ மக்களே! நீங்கள் அமாலிகா கூட்டத்தினரை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை தென்படும். அச்சமயம் எனது சொற்படி நடந்தால்தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும்போது தண்ணீர் தாகமெடுத்து நாவரண்டு விடும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீh மிக சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகியவராவீர்;கள் என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னபடி வந்தது. அந்த தண்ணீரை 313பேர் தவிர ஏனையோர் வயிறு முட்ட குடித்தனர். அதனால் எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாதபடி ஆகிவிட்டனர். அவர்களது முகங்களும் கறுத்தும், சிறுத்தும் போய்விட்டன.
313பேரைக் கொண்டு தாலூத் ஜாலூத்தை வெல்ல படைநடத்தி சென்றான். அவனுடைய ஆஜானுபாவமான தோற்றத்தைக் கண்டு பனீஇஸ்ரவேலர்கள் நடுநடுங்கிவிட்டனர். ஜாலுத்தும், என்னிடம் நீங்கள் போரிடவா போகிறீர்கள்? என்ன வேடிக்கை. முதலில் என்னிடம் தனியாக மோத உங்கள் அரசனையோ, அல்லது வேறு ஆளையோ வரச் சொல்லுங்கள். அதன்பிறகு என்னுடைய படையினருடன் மோதலாம் என்று அறைகூவல் விடுத்தான். அவனது அறைகூவலைக் கண்டு அனைவரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் அரசர் தாலூத் மட்டும் அவனோடு போரிடுவதற்கு மும்முரமாயிருந்தார்.
பனீ இஸ்ரவேலர்களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் என்றும், எனது ராஜ்ஜியத்திலும் சரிபாதியைத் தருவதாகவும் பறை அறிவிப்பு செய்தனர். ஆனாலும் யாரும் முன்வரவில்லை.
பனீ இஸ்ரவேலர்களிடையே ஆய்ஷா என்ற பெயருடன் ஒருவர் இருந்தார். இவர் ஹழ்ரத் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரரான யஹூதாவின் வழியில் வந்தவர். இவருக்கு 12மக்கள் இருந்தனர். கடைசி மகனின் பெயர்தான் தாவூது. இவர்கள் குள்ளமாக இருந்தார்கள். இவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 569ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள். யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 9ஆவது தலைமுறையில் வந்தவர்கள்.
அல்லாஹ் வஹி மூலம் ஜாலூத்தை கொல்பவர் ஆய்ஷாவின் மகன் தாவூதுதான் என்று ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்திருந்தான். அவர்களது அடையாளங்களையும் தெரிவித்திருந்தான்.
ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அய்ஷாவின் வீட்டைக் கண்டுபிடித்து, காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹழ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டுபிடித்து அல்லாஹ்வின் ஆணைப்படி ஜாலூத்தை கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதற்கு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்;த்து நீங்கள் அல்லாஹ்வுடைய நபியா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும்> நான் எனது பெற்றோர்களையும், சகோதரர்களையும் கலந்து கொண்டபிறகு தாலூத்தை சந்திக்கிறேன் என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களை சந்தித்து தாம் ஜாலூத்தைக் கொல்லப் போவதாக சொல்ல அவர்கள் கேலி செய்து சிரித்தார்கள்.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்மிடம் ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் எதிரிகளை கொல்ல பயன்படுத்திய கல்லும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட உபயோகப்படுத்திய கல்லும், இன்னும் ஜாலூத்தைக் கொல்வதற்காகவே வந்த கல்லும் ஆகிய மூன்று கல்கள் என்னிடம் இருக்கின்றன. அதுபோதும் அவனை;க கொல்வதற்கு என்று சொன்னார்கள்.
சகோதரர்கள் சிரித்தார்கள். அப்போது தந்தை ஆய்ஷா வந்து இந்த நீ சொல்வதையெல்லாம் கேட்டேன். ஆனால் அதை எப்படி நம்புவது? என்று கேட்டார்கள்.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். நான் கூறியது அனைத்தும் உண்மை. இந்த கற்களே தங்களைப் பற்றி பேசி என்னிடம் அறிமுகம் செய்து கொண்டன. அதனால்தான் நான் ஜாலூத்தைக் கொல்ல முன்வந்தேன் என்றார்கள்.
தந்தைக்கு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை ஏற்பட்டது. துஆ செய்து தம் மகனை அனுப்பி வைத்தார்கள்.
தாவூது நபி அவர்கள் மன்னர் தாலூத்தை சந்தித்து தான் ஜாலூத்தை கொல்ல போவதாக சொன்னதும்> அவர் ஆச்சரியப்பட்டு நீ தனியாளாக எவ்வாறு அவனைக் கொல்வாய்.? நான் சிறு படையை உனக்குத் துணையாக அனுப்பி வைக்கட்டுமா? என்று கேட்டான்.
தாவூது நபி அவர்கள் தம்மிடமிருந்த கற்களைப் பற்றி சொல்லி எனக்கு அல்லாஹ்வின் துணை ஒன்றே போதும். மற்றவர்களின் துணை தேவையில்லை என்று சொன்னார்கள்.
மன்னர் வெகு வேகமாக ஓடும் குதிரை ஒன்றைக் கொடுத்து அல்லாஹ் உனக்கு உதவி செய்வானாக என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஜாலூத் தன்னை கொல்ல பனீ இஸ்ரவேலர்களிலிருந்து ஒருவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பக்கத்துணையாக ஒரு பெரும் படையைத் தயார் செய்தான்.
ஜாலூத் தம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் குதிரையைப் பார்த்தான். அதில் ஒரு சிறு மனித உருவம் உட்கார்ந்திருந்தது. குதிரை ஜாலூத்தின் ரதம் இருந்த இடம் வந்ததும் நின்றது. அதிலிருந்து தாவூத் அலைஹிஸ்ஸலாம் இறங்கி ஏ ஜாலூத்தே உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அவன் எள்ளி நகையாடினான்.
தம் கையிலிருந்த மூன்று கற்களையும், கயிறையும் எடுத்துக் காட்டி கயிற்றில் முதல் கல்லை வைத்து கவண் கல்லாக ஜாலூத்தின் தலையை நோக்கி எறிந்தார்கள். அவன் தலையை அது சுக்குநூறாக்கியது. அடுத்த கல்லை அவன் உடலை நோக்கி எறிந்தார்கள். அது பட்டு அவன் உடல் நெடுஞ்சாண்கிடையாக சாய்ந்தது. அடுத்த கல்லை படைகளை நோக்கி எறிந்தார்கள். படைகள் அனைத்தும் சிதறி ஓடின. இதில் காலாட்படைகள் மிதிபட்டே அழிந்தது.
அல்லாஹ்வின் உதவியால் ஜாலூத்தை கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு அத்தாட்சியாக அவனது மோதிரத்தை எடுத்துக் கொண்டு தம் இடம் நோக்கி விரைந்தார்கள். இந்த வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில்…
-அல்-குர்ஆன் 2 : 250>251
மன்னர் தாலூத் ஜாலூத்தைக் கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தாம் சொன்னபடி தம் அழகிய மகளை திருமணம் செய்து வைத்தார். அதேபோல் தமது இராஜ்ஜியத்திலும் சரிபாதியை கொடுத்தார். இதன்பின் இரண்டுஆண்டுகள் வாழ்ந்தார். தமது இறுதிகாலம் நெருங்கி விpட்டதை அறிந்த மன்னர் தம்முடைய மறுபாதி இராஜ்ஜியத்தையும் தாவூது நபி அவர்களிடமே ஒப்படைத்து அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி தம் மந்திரிகளைக் கேட்டுக் கொண்டார். மன்னர் தாலூத்தின் மறைவிற்குப் பின்னர் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முழு இராஜ்ஜியத்திற்கும் அதிபதியாகி, இஸ்ரவேலர்களின் தலைவரானார்கள்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பனீ இஸ்ரவேலர்களிடையே ஒரு நபி தோன்றினார்கள். அவர்களது பெயர் அஸ்மவீல் என்பதாகும். பனீ இஸ்ரவேலர்கள் இந்த நபியிடம் சென்று தங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி ஓர் அரசனை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், அந்த அரசனின் ஆதரவோடு அந்த கொடியவன் ஜாலூத்தோடு போர் புரிய வேண்டும் என்றும் விடுத்த வேண்டுகோளை அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏற்று அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள்.
அதன்காரணமாக, அல்லாஹ் ஒரு கழியையும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யையும் அனுப்பி, பனீ இஸ்ரவேலர்களில் அரசனுக்குத் தகுதியானவர்கள் அந்தக் கழியின் உயரமிருப்பர் என்றும், அத்தகையவர் அங்கு வந்ததும் பாத்திரத்திலுள்ள எண்ணெய் கொப்பளிக்கும் என்றும் அத்தகையவரே பனீ இஸ்ரவேலர்களுக்குரிய அரச பதவிக்குத் தகுதியானவர் என்றும் அறிவித்தான்.
இத்தகவலை தம் மக்களுக்கு நபி அவர்கள் அறிவித்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அன்னாரின் வீட்டில் குழுமினர். ஒருவருக்கும் அந்த அடையாளம் பொருந்தவில்லை. இறுதியாக தாலூத் என்பார் தம்முடைய காணாமல் போன கழுதையைத் தேடி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டிற்கு வந்தான். அவன் வந்ததும் அந்த எண்ணெய் கொப்பளிக்க ஆரம்பித்தது. கழியை வைத்து அளந்து பார்த்ததில் சரியான அளவாகவே இருந்தது.
தாலூத் பனீ இஸ்ரவேலர்களின் அரசன் என்று அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவித்ததும் தாலூத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் புன்யாமீன் வழி வந்தவராயிருந்தார். மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். அதனால் பனீ இஸ்ராயீல்கள் தங்கள் அரசனாக அவனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. தங்கள் யஹூதா வம்சாவழியில் வந்தவர்களையே அரசராக ஏற்றுக் கொள்வோம் என்றும் பிடிவாதம் பிடித்தனர். இது அல்லாஹ்வின் ஏற்பாடு. இதை மறுப்பது அவனை கோபத்திற்குள்ளாக்கிவிடும் என்று அச்சமூட்டி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.
தாலூத்துடைய புத்தி தீட்சண்யத்தையும், ஆளும் திறனையும் பார்த்து நாளடைவில் மக்கள் அவனை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக அல்லாஹ் ஒரு பெட்டியை கொடுத்திருந்தான். அப்பெட்டி நபிமார்களின் குடும்பத்தினர்களிடம் கைமாறிக் கொண்டே வந்தது. ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கைக்கு அது வந்தபோது அதில் தவ்ராத் வேதத்தையும், சில பொருட்களையும் அதில் வைத்திருந்தார்கள். இந்தப் பெட்டி யார் கையில் இருக்கிறதோ அவருக்கு வெற்றி நிச்சயம் என்று இஸ்ரவேலர்கள் நம்பி வந்தனர்.
இப்பெட்டி அமாலிகா என்ற பெயர் கொண்ட கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்டது. அவர்கள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காமல் அசுத்தமான இடங்களில் வைத்திருந்தனர்.அதனால் அவர்களுக்கு அது பெரும் துன்பமாக மாறிவிட்டது. எனவே அதை ஒரு குப்பை மேட்டில் வைத்து புதைத்து விட்டனர்.
அல்லாஹ் அந்தபெட்டியை வானவர்கள் மூலம் அரசர் தாலூத்திடம் சேர்த்து விட்டான். உடனே ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘பனீ இஸ்ரவேலர்களிடம் சென்று நாம் அனைவரும் அரசர் தாலூத் தலைமையில் திரண்டு அமாலிகா கூட்டத்தினர்களிடம் சிறைப்பட்டு கிடக்கும் பனீ இஸ்ரவேலர்களை மீட்டு வருவோம்’ என்று கூறினர்.
அவர்களது கூற்றிக்கிணங்க அரசர் தாலூத் 70000பேர் கொண்ட படையினைத் திரட்டினார். அப்படையினரை நோக்கி ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ஓ மக்களே! நீங்கள் அமாலிகா கூட்டத்தினரை வெல்லப் புறப்படுகிறீர்கள். வழியில் அல்லாஹ்வின் சோதனை தென்படும். அச்சமயம் எனது சொற்படி நடந்தால்தான் வெற்றி பெற முடியும். பாலைவனப் பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்லும்போது தண்ணீர் தாகமெடுத்து நாவரண்டு விடும். பாலஸ்தீனுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ஒரு ஆறு ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதன் தண்ணீh மிக சுவையாக இருக்கும். அதிலிருந்து நீங்கள் ஒரு மிடறுக்கு மேல் குடிக்க கூடாது. மீறி அதிகமாகக் குடித்தால் எங்கள் கூட்டத்தை விட்டு விலகியவராவீர்;கள் என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னபடி வந்தது. அந்த தண்ணீரை 313பேர் தவிர ஏனையோர் வயிறு முட்ட குடித்தனர். அதனால் எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாதபடி ஆகிவிட்டனர். அவர்களது முகங்களும் கறுத்தும், சிறுத்தும் போய்விட்டன.
313பேரைக் கொண்டு தாலூத் ஜாலூத்தை வெல்ல படைநடத்தி சென்றான். அவனுடைய ஆஜானுபாவமான தோற்றத்தைக் கண்டு பனீஇஸ்ரவேலர்கள் நடுநடுங்கிவிட்டனர். ஜாலுத்தும், என்னிடம் நீங்கள் போரிடவா போகிறீர்கள்? என்ன வேடிக்கை. முதலில் என்னிடம் தனியாக மோத உங்கள் அரசனையோ, அல்லது வேறு ஆளையோ வரச் சொல்லுங்கள். அதன்பிறகு என்னுடைய படையினருடன் மோதலாம் என்று அறைகூவல் விடுத்தான். அவனது அறைகூவலைக் கண்டு அனைவரும் பயந்து பின்வாங்கினர். ஆனால் அரசர் தாலூத் மட்டும் அவனோடு போரிடுவதற்கு மும்முரமாயிருந்தார்.
பனீ இஸ்ரவேலர்களிடையே ஜாலூத்தைக் கொல்பவருக்கு எனது மகளை மணமுடித்து தருவேன் என்றும், எனது ராஜ்ஜியத்திலும் சரிபாதியைத் தருவதாகவும் பறை அறிவிப்பு செய்தனர். ஆனாலும் யாரும் முன்வரவில்லை.
பனீ இஸ்ரவேலர்களிடையே ஆய்ஷா என்ற பெயருடன் ஒருவர் இருந்தார். இவர் ஹழ்ரத் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குமாரரான யஹூதாவின் வழியில் வந்தவர். இவருக்கு 12மக்கள் இருந்தனர். கடைசி மகனின் பெயர்தான் தாவூது. இவர்கள் குள்ளமாக இருந்தார்கள். இவர்கள் ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 569ஆண்டுகள் கழித்து பிறந்தவர்கள். யகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 9ஆவது தலைமுறையில் வந்தவர்கள்.
அல்லாஹ் வஹி மூலம் ஜாலூத்தை கொல்பவர் ஆய்ஷாவின் மகன் தாவூதுதான் என்று ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவித்திருந்தான். அவர்களது அடையாளங்களையும் தெரிவித்திருந்தான்.
ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அய்ஷாவின் வீட்டைக் கண்டுபிடித்து, காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹழ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டுபிடித்து அல்லாஹ்வின் ஆணைப்படி ஜாலூத்தை கொல்ல வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதற்கு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் அஸ்மவீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்;த்து நீங்கள் அல்லாஹ்வுடைய நபியா? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும்> நான் எனது பெற்றோர்களையும், சகோதரர்களையும் கலந்து கொண்டபிறகு தாலூத்தை சந்திக்கிறேன் என்று சொன்னார்கள்.
அடுத்த நாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களை சந்தித்து தாம் ஜாலூத்தைக் கொல்லப் போவதாக சொல்ல அவர்கள் கேலி செய்து சிரித்தார்கள்.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்மிடம் ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் எதிரிகளை கொல்ல பயன்படுத்திய கல்லும், ஹழ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட உபயோகப்படுத்திய கல்லும், இன்னும் ஜாலூத்தைக் கொல்வதற்காகவே வந்த கல்லும் ஆகிய மூன்று கல்கள் என்னிடம் இருக்கின்றன. அதுபோதும் அவனை;க கொல்வதற்கு என்று சொன்னார்கள்.
சகோதரர்கள் சிரித்தார்கள். அப்போது தந்தை ஆய்ஷா வந்து இந்த நீ சொல்வதையெல்லாம் கேட்டேன். ஆனால் அதை எப்படி நம்புவது? என்று கேட்டார்கள்.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். நான் கூறியது அனைத்தும் உண்மை. இந்த கற்களே தங்களைப் பற்றி பேசி என்னிடம் அறிமுகம் செய்து கொண்டன. அதனால்தான் நான் ஜாலூத்தைக் கொல்ல முன்வந்தேன் என்றார்கள்.
தந்தைக்கு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை ஏற்பட்டது. துஆ செய்து தம் மகனை அனுப்பி வைத்தார்கள்.
தாவூது நபி அவர்கள் மன்னர் தாலூத்தை சந்தித்து தான் ஜாலூத்தை கொல்ல போவதாக சொன்னதும்> அவர் ஆச்சரியப்பட்டு நீ தனியாளாக எவ்வாறு அவனைக் கொல்வாய்.? நான் சிறு படையை உனக்குத் துணையாக அனுப்பி வைக்கட்டுமா? என்று கேட்டான்.
தாவூது நபி அவர்கள் தம்மிடமிருந்த கற்களைப் பற்றி சொல்லி எனக்கு அல்லாஹ்வின் துணை ஒன்றே போதும். மற்றவர்களின் துணை தேவையில்லை என்று சொன்னார்கள்.
மன்னர் வெகு வேகமாக ஓடும் குதிரை ஒன்றைக் கொடுத்து அல்லாஹ் உனக்கு உதவி செய்வானாக என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஜாலூத் தன்னை கொல்ல பனீ இஸ்ரவேலர்களிலிருந்து ஒருவர் வருகிறார் என்று கேள்விப்பட்டு தனக்குப் பக்கத்துணையாக ஒரு பெரும் படையைத் தயார் செய்தான்.
ஜாலூத் தம்மை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் குதிரையைப் பார்த்தான். அதில் ஒரு சிறு மனித உருவம் உட்கார்ந்திருந்தது. குதிரை ஜாலூத்தின் ரதம் இருந்த இடம் வந்ததும் நின்றது. அதிலிருந்து தாவூத் அலைஹிஸ்ஸலாம் இறங்கி ஏ ஜாலூத்தே உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அவன் எள்ளி நகையாடினான்.
தம் கையிலிருந்த மூன்று கற்களையும், கயிறையும் எடுத்துக் காட்டி கயிற்றில் முதல் கல்லை வைத்து கவண் கல்லாக ஜாலூத்தின் தலையை நோக்கி எறிந்தார்கள். அவன் தலையை அது சுக்குநூறாக்கியது. அடுத்த கல்லை அவன் உடலை நோக்கி எறிந்தார்கள். அது பட்டு அவன் உடல் நெடுஞ்சாண்கிடையாக சாய்ந்தது. அடுத்த கல்லை படைகளை நோக்கி எறிந்தார்கள். படைகள் அனைத்தும் சிதறி ஓடின. இதில் காலாட்படைகள் மிதிபட்டே அழிந்தது.
அல்லாஹ்வின் உதவியால் ஜாலூத்தை கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதற்கு அத்தாட்சியாக அவனது மோதிரத்தை எடுத்துக் கொண்டு தம் இடம் நோக்கி விரைந்தார்கள். இந்த வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில்…
-அல்-குர்ஆன் 2 : 250>251
மன்னர் தாலூத் ஜாலூத்தைக் கொன்ற தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தாம் சொன்னபடி தம் அழகிய மகளை திருமணம் செய்து வைத்தார். அதேபோல் தமது இராஜ்ஜியத்திலும் சரிபாதியை கொடுத்தார். இதன்பின் இரண்டுஆண்டுகள் வாழ்ந்தார். தமது இறுதிகாலம் நெருங்கி விpட்டதை அறிந்த மன்னர் தம்முடைய மறுபாதி இராஜ்ஜியத்தையும் தாவூது நபி அவர்களிடமே ஒப்படைத்து அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி தம் மந்திரிகளைக் கேட்டுக் கொண்டார். மன்னர் தாலூத்தின் மறைவிற்குப் பின்னர் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முழு இராஜ்ஜியத்திற்கும் அதிபதியாகி, இஸ்ரவேலர்களின் தலைவரானார்கள்.