PRECAP: தச்சனின் திருமகள் - 15

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Haaii drs...

A small teaser for next ud. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இங்க ப்ரோமோ போடுற காரணம் யூடி லேட் ஆகும். அடுத்தது பெரிய எபி சோ சனி/ஞாயிறு தான் யூடி கொடுக்க முடியும்னு நினைக்குறேன்... அதுவரை இந்த குட்டி டீசர் உங்களுக்காக... சென்ற பதிவிற்கு எப்போதும் வருவதைவிட சில கருத்துகள் மிகுதியாகவே வந்ததில் மீ சோ ஹாப்பி... ரொம்ப நன்றி மக்களே:love::love::love:

***

பார்த்து பார்த்து நேர்த்தியாய் உடுத்தியிருந்த சிகப்பும், கருப்பும் கலந்த சில்க் காட்டன் சேலை கேட்பாரற்று அவன் சட்டையோடு தரையில் கிடக்க, சிகை கலைந்து, சரீரம் அவன் கட்டுப்பாட்டில் கட்டுண்டு இருந்தது. வறண்ட அதரங்களுக்கு இணையாக தச்சனின் கரங்களும் அவளிடத்தில் ஊர்வலம் நிகழ்த்த, அவளது கரம் அவனது புஜத்தில் பதிந்து விரல்நகத்தின் தடங்களை அச்சிட்டுக்கொண்டிருந்தது. அவனை தடுக்கவென முதலில் பதிந்த அந்தக் கரங்கள் எப்போது பிடிமானத்திற்காக மாறியதோ அவளே அறியாள்… உடலும் உள்ளமும் அவன் புறம் சாய்ந்து அவனிடம் சிக்கி மயங்கியிருக்க, புத்தி மட்டும் காலை நேர அவசரங்களை நினைவூட்டி அவளை எழுப்ப முயன்று ஓய்ந்திருந்தது.

அவ்வளவு எளிதில் சூழ்நிலை மறந்து மயங்குபவள் அல்ல தான் என்றாலும், என்றுமில்லாத அவனது பிரத்யேக கொஞ்சல்கள் அவளை மயக்கத்தான் செய்தன.

“வானதி கூப்பிடுறா…”

வானதியின் அழைப்பை காரணம் காட்டி அவனிடமிருந்து விடுபடவென அவள் பேசியதில் தொண்டைக்குழி ஏறி இறங்க, அதில் ஊர்ந்த அதரங்களின் வெப்பம் இதமாய், இனிப்பாய் இருக்க பரீட்சை எல்லாம் மறந்தே போனது குந்தவைக்கு.

“எதுக்குடி தாலிச் செயின் மாத்துன? மண்ணு மாதிரி இருக்கு இந்த தங்கச்சரடு…”

வெடித்துச் சிரித்தவள் அவன் முகம் பற்றி நிமிர்த்தி, “தங்கம் சாப்பிடுற பொருளா உனக்கு?”

“இல்லைடி… புது மஞ்சள் தாலியில் இருந்து வந்த மஞ்சள் வாசனை ஆளையே மயக்கி அசச்சிடும்டி… அது ஒரு தனி கிக்கு. நீ அதைப்போய் மாத்திட்ட…”

“இதுவே லேட்… எங்க வழக்கத்தில் கல்யாணம் ஆன மூணாவது நாளே தங்கத்தில் மாத்திடுவாங்க.”

“நல்லா மாத்துனாங்க…”

“எப்படி இப்போ நீ மாத்திவிடுறேனு கலச்சிவிட்ட மாதிரியா?” சிணுங்கலாய் குந்தவை அவன் சிறையினில் நெளிய,

“கலச்சிவிடலடி… நல்லாயில்லை வேற மாத்தலாம்னு கழட்டிவிட்டேன்…” என்க எப்போதும் போலவே அவன் அதரங்களில் செல்ல அடிகள்.

“எல்லோரும் ஒரே மாதிரி எடுத்த சேலைடா இது…” கெஞ்சலுடன் கொஞ்சலாய் அவள் குரல் ஒலிக்க,

அவளை விடுவித்து ஓரடி பின்னெடுத்து அவளை மேலிருந்து கீழ் பார்த்து கூசச் செய்தவன், “இன்னும் உனக்கு புரியலையா மக்கு பொண்டாட்டி…” என்று விஷமமாய் இழுக்க, குந்தவை அகலமாய் கண்களை விரித்தாள்.

“டேய்… பிராடு. மணியாகுடா...” என்று அவள் எகிறிக்கொண்டு வர, நகைப்புடன் திமிறியவளை தன்வசம் இழுத்தணைத்துக் கொண்டான்.

“நான் எதிர்பார்த்த போதெல்லாம் விட்டுட்டு உன்னை யாரு இன்னைக்கு புடவை கட்ட சொன்னது? பார்த்ததும் பாயத்தான் தோணுது…” என்று பேசி மேலும் இரு அடிகளை சுகமாய் வாங்கிக் கொண்டான்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice

பரீட்சைக்கு போனாளா??? இல்ல பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாளா??? :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top