மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்
அடப்பாவி சேர்மமூர்த்தி
கஷ்டப்பட்டு உழைத்து வாழும் ஒருவனின் மீது பொறாமை கொண்டு அவனை அநியாயமா கொன்னுட்டானே
போலீஸ் ஸ்டேஷனில் அடித்த அடியில்தான் நெஞ்சு வலி வந்து குலசேகரன் இறந்து விட்டாரா?
புருஷனைக் கொன்ற கொலைகாரன் மீது கோபம் வராமல் அவனிடம் கைநீட்டி காசு வாங்கியிருக்கிறாளே தனவிதி இவளெல்லாம் என்ன பொம்பளை?
இதிலே புருஷன் போனதுக்கு சந்திரா வீடுதான் காரணம்ன்னு நீலிக்கண்ணீர் வேறு
ரேவதி மூதேவி அப்பவே வில்லங்கமாத்தான் பேசியிருக்குது
குலசேகரனின் எண்ணம் சரிதான்
தங்கள் நிலத்தை இவரைப் பார்த்துக்கோன்னு சொன்ன வரதராஜனும் நாராயணனும் சேர்மமூர்த்தியிடம் நிலத்தை ஒத்திக்கு கொடுக்கும் பொழுது குலசேகரனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே
அப்போ மரங்களை சேர்மா வெட்டினதை குலசேகரன் சொல்லியிருப்பாரே
அநியாயமா அவர் உயிர் போயிருக்காதே
மனோ வரும் வண்டியில் போதை மருந்து வைத்து பொய்க் கேஸ் போட்டது வக்கீலை மடக்கியது எல்லாம் சேர்ம மூர்த்தியின் வேலைதானா?
இவ்வளவு நாள்தான் சொல்லவில்லை சரி
இப்போவாவது எல்லா உண்மையையும் இளங்கதிருக்கு சின்னாயி சொன்னாளா? இல்லையா?
சேர்மா கொடுத்த பணத்தை தனவிதி என்னதான் செய்தாள்?
உண்மை தெரிந்து கதிரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?