மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
ஒரு வழியா பனிமலர் அவள் அப்பா இரத்னவேல் பற்றி தெரிந்து விட்டது
ஆனாலும் நம்ம அர்ஜென்ட் சி ஐ டி சிங்காரம் பஞ்சபூதம் சூப்பர் பூதம்தான் சேச்சே சூப்பர்மேன்தான்
பேட்டரியே இல்லாத செல் போனை வைச்சு பனிமலரின் பின்னணியைக் கண்டுபிடிச்சாச்சு
பிரியன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் பனிமலர் ஏன் ஓடி வர வேண்டும்?
பெற்றோரைக் கொன்றதாக நினைக்கும் பார்த்திபனை பிரியனின் உதவியுடன் பழிவாங்கியிருக்கலாமே
மலருக்கு பிரியனைப் பிடிக்கவில்லையா?
ஏன்? என்ன காரணம்?
அப்போ ஊருக்கு நல்லவனாக காட்டிக் கொள்ளும் பிரியனிடம் ஏதாவது தப்பு இருக்குமோ?
பனிமலர் யாருன்னு தெரிஞ்சாச்சு
இனி பார்த்திபன் அடுத்து என்ன செய்யப் போறான்?
இவன் சரக்கு லோடுக்கு போன நேரத்தில் மலரைத் தேடும் பிரியனின் ஆட்களின் கண்ணில் நித்யகலா பட்டால் என்ன வினை வருமோ?