ஜெய்யின் பயம் நியாயம் இந்த விஷயத்தில், ஏனெனில் கற்பகம் உயிரோடு இருக்கும் வரைக்கும் தேள் மாதிரிக் கொட்டிக்கொண்டே இருப்பார். அவரின் மகள்களும் அதற்கு ஒத்து ஊதுவார்கள். யுவராஜ் எவ்வளவு என்று காப்பாற்ற முடியும் இந்தப் பெண்களிடமிருந்து? அவனின் அப்பாவும் தன் தாய் தங்கைகள் பேச்சைத் தான் கேட்பார். It is better for the girls to stay away from that hell. ஆனால் வெண்ணிலா வாழப் போகும் இடத்தில் அப்படியில்லையே. தாய் மாமன் வீட்டில் அவளைத் தங்குவார்கள், அப்படி இல்லை என்றாலும் வாய்ப் பேச்சுக் கொடுமைகளாவது இருக்காது தானே.