Today evening will give the update.
“பவித்ரா, நீ சொன்னது போல, உங்க அண்ணன் இங்க வந்திட்டான். இதுக்கு மேல நீ கோபமா இருக்கிறது நியாயம் இல்லை.”
“நான் அதுக்கு யோசிக்கலை அத்தை. சித்தப்பாகிட்ட அப்படி பேசிட்டு இப்ப அங்க போக ஒரு மாதிரி இருக்கு.”
“இதுக்குதான் யோசிக்காம பேசக்கூடாது. ஆனா நீ வருத்தபடுற அளவுக்கு ஒன்னும் இல்லை. இதை விட உங்க அப்பாவும் அம்மாவும் இருக்கும் போது, உன் சித்தப்பாவும் சித்தியும் பேசி இருக்காங்க.”
“அப்ப எங்களுக்கு கம்பனியை தனியா பிரிச்சுக் கொடுங்கன்னு, அவங்களும் கேட்டவங்க தான்.”
“உங்க அப்பா தான் பொறுப்பா இருந்தார். கல்யாணத்துக்கு பிறகு இவருக்கு கீழ இருக்கிறதான்னு உங்க சித்தப்பாவுக்கு எண்ணம்.”
“இப்பவும் அவங்களுக்கு ஆதாயம் இல்லாம சேர்ந்து இருக்கிற முடிவுக்கு வந்திருக்கா மாட்டாங்க. அவங்க அவ்வளவு விவரம் இல்லாதவங்க இல்லை.”
***************************************************************************************************************
“நல்லா இருக்கா டா உன் பொண்டாட்டி.” என அருளிடம் சொன்ன புவனா, அவர் வாங்கி வந்திருந்த, பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுக்க... ரோஜா புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள், உள்ளே எடுத்து சென்று எல்லோருக்கும் பூவை சமமாக பங்கிட்டு கொடுத்தாள்.
மாமியார் வந்த தைரியத்தில் பவித்ரா தனக்கு டீ எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்.
“பொண்ணுங்க எல்லாம் என்ன இருந்தாலும் இன்னொருத்தர் வீட்டுக்கு போற வரைக்கும் தான்.” என தேவி மீண்டும் ஆரம்பிக்க...
“அப்படியில்லை தேவி, பரத் எங்க பெரிய அண்ணனை போல பொறுமை, பவித்ரா அவ சித்தப்பா போல இருக்கா... உன் புருஷனும் கோபம் வந்தா பட்டுன்னு பேசிடுவான். ஏன் அவனும் தானே சொத்தை பிரிச்சு கொடுன்னு கேட்டான்.”
****************************************************************************************************************
ரோஜா புவனாவையும் அருளையும் மாறி மாறி பார்க்க... “என்ன ரோஜா?” என புவனா கேட்க,
“நீங்க இவரையா பொறுமைன்னு சொன்னீங்க.” என அவள் சந்தேகமாக கேட்க,
“ஆமாம் ஏன்?”
“இவருக்கு பொறுமை எல்லாம் இல்லை. ரொம்ப கோபம் வரும். கோபம் வந்தா ரொம்ப பேசுவார்.” என ரோஜா அருளைப் பற்றி பிட்டு பிட்டு வைக்க... அடிப்பாவி என்பது போல அருள் பார்க்க, பவித்ராவுக்கு ஒரே சிரிப்பு.
“வேற என்ன பண்ணுவான் இவன்.” பவித்ரா கேட்க,
“வேற எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா இவர் பொறுமைன்னு சொன்னதுனால சொன்னேன்.”
“எங்ககிட்ட மட்டும் தான் நல்லவன் சீன் போடுறானா?” பவித்ரா சொன்னதும்,
“ஏன் டி அதுக்காக கோபமே வரமா இருக்குமா...” என்றான் அருள்.
“பவித்ரா, நீ சொன்னது போல, உங்க அண்ணன் இங்க வந்திட்டான். இதுக்கு மேல நீ கோபமா இருக்கிறது நியாயம் இல்லை.”
“நான் அதுக்கு யோசிக்கலை அத்தை. சித்தப்பாகிட்ட அப்படி பேசிட்டு இப்ப அங்க போக ஒரு மாதிரி இருக்கு.”
“இதுக்குதான் யோசிக்காம பேசக்கூடாது. ஆனா நீ வருத்தபடுற அளவுக்கு ஒன்னும் இல்லை. இதை விட உங்க அப்பாவும் அம்மாவும் இருக்கும் போது, உன் சித்தப்பாவும் சித்தியும் பேசி இருக்காங்க.”
“அப்ப எங்களுக்கு கம்பனியை தனியா பிரிச்சுக் கொடுங்கன்னு, அவங்களும் கேட்டவங்க தான்.”
“உங்க அப்பா தான் பொறுப்பா இருந்தார். கல்யாணத்துக்கு பிறகு இவருக்கு கீழ இருக்கிறதான்னு உங்க சித்தப்பாவுக்கு எண்ணம்.”
“இப்பவும் அவங்களுக்கு ஆதாயம் இல்லாம சேர்ந்து இருக்கிற முடிவுக்கு வந்திருக்கா மாட்டாங்க. அவங்க அவ்வளவு விவரம் இல்லாதவங்க இல்லை.”
***************************************************************************************************************
“நல்லா இருக்கா டா உன் பொண்டாட்டி.” என அருளிடம் சொன்ன புவனா, அவர் வாங்கி வந்திருந்த, பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுக்க... ரோஜா புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள், உள்ளே எடுத்து சென்று எல்லோருக்கும் பூவை சமமாக பங்கிட்டு கொடுத்தாள்.
மாமியார் வந்த தைரியத்தில் பவித்ரா தனக்கு டீ எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்.
“பொண்ணுங்க எல்லாம் என்ன இருந்தாலும் இன்னொருத்தர் வீட்டுக்கு போற வரைக்கும் தான்.” என தேவி மீண்டும் ஆரம்பிக்க...
“அப்படியில்லை தேவி, பரத் எங்க பெரிய அண்ணனை போல பொறுமை, பவித்ரா அவ சித்தப்பா போல இருக்கா... உன் புருஷனும் கோபம் வந்தா பட்டுன்னு பேசிடுவான். ஏன் அவனும் தானே சொத்தை பிரிச்சு கொடுன்னு கேட்டான்.”
****************************************************************************************************************
ரோஜா புவனாவையும் அருளையும் மாறி மாறி பார்க்க... “என்ன ரோஜா?” என புவனா கேட்க,
“நீங்க இவரையா பொறுமைன்னு சொன்னீங்க.” என அவள் சந்தேகமாக கேட்க,
“ஆமாம் ஏன்?”
“இவருக்கு பொறுமை எல்லாம் இல்லை. ரொம்ப கோபம் வரும். கோபம் வந்தா ரொம்ப பேசுவார்.” என ரோஜா அருளைப் பற்றி பிட்டு பிட்டு வைக்க... அடிப்பாவி என்பது போல அருள் பார்க்க, பவித்ராவுக்கு ஒரே சிரிப்பு.
“வேற என்ன பண்ணுவான் இவன்.” பவித்ரா கேட்க,
“வேற எல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா இவர் பொறுமைன்னு சொன்னதுனால சொன்னேன்.”
“எங்ககிட்ட மட்டும் தான் நல்லவன் சீன் போடுறானா?” பவித்ரா சொன்னதும்,
“ஏன் டி அதுக்காக கோபமே வரமா இருக்குமா...” என்றான் அருள்.