காயூட்ட யார் சொல்றது அண்ணி வீட்ல மட்டும் இல்ல. அவங்க தம்பி மனசுக்குள்ளயும் அவ கால மேல போட்டு தான் உக்காந்துருக்கானு...கமல் வீட்டை வைத்திருக்கும் நிலைமை - அந்த காட்சி படிக்கப் படிக்க வேதனை தான். சாரதாவின் வலி வார்த்தையில் வடிக்க முடியாது. கவுசல்யாவை கூட்டிட்டுப் போய் பத்து நாள் பையன் வீட்டுல விட்டுட்டு வந்துடனும். அதுக்கப்புறம் அவங்களுக்கு அவங்க பையனை பார்க்க பிடிக்குதான்னு பார்க்கணும். இப்படியா நியாயமே இல்லாமல் பாசம் கண்ணை மறைக்கும்?
இனி வருங்காலத்தில் சாரதா தன் மகன்கள் தந்தையை பற்றி கேட்டால் அதையும் சமாளிக்கணும். கமல் செய்யும் தவறுக்கு சாரதாவிற்கு துறவு - கொடுமை.
இவ ஏன் இன்னமும் மக்கு மாதிரி தம்பியோட மனக்கஷ்டத்தை யோசிச்சு தப்பு தப்பா சிந்திக்கறா? இதைத் தான் காயூ நீங்க சகிச்சுட்டு இருந்துருக்காமல் முன்னாடியே சொல்லி இருக்கணும்னு சொன்னா? அவ சொன்னது தானே சரி.
பரணி மாதிரி நல்லவனுக்கு இன்னுமா பொண்ணு அமையலை?
காயூ மாமான்னு கூப்பிடாதம்மா. 'மாமாங்க'-ன்னு பிரத்யேகமா மரியாதையா கூப்பிடும்மா. நீ சிஞ்சான் பார்த்தாலும் சரி இன்னும் டோரா புஜ்ஜி பார்த்தாலும் சரி அது ஒரு பக்கம், கல்யாண விஷயத்துல நீயே வெளிப்படையா உங்க அண்ணிகிட்ட உன் விருப்பத்தை சொன்னால் தான் உண்டு. ஏன்னா இந்த நல்லவன் சொல்லவே மாட்டான்.
கரெக்ட்.காயூட்ட யார் சொல்றது அண்ணி வீட்ல மட்டும் இல்ல. அவங்க தம்பி மனசுக்குள்ளயும் அவ கால மேல போட்டு தான் உக்காந்துருக்கானு...