Nee Ennul Yaaradaa 18

Advertisement

உதயா

Well-Known Member
கௌசல்யா நீ அசிங்கபடுறதுக்காவே இந்த நிச்சயதார்த்தம் நிக்கணும். சாரதாக்கு நடந்தது உனக்கு அநியாயமா தெரியல ஆனால் உன் பொண்ணுக்கு அந்த நிலைமை வரும் போது மட்டும் அநியாயமா தெரியுதா இவ்வளவு பதறுர.
இவங்க குடும்பமே சுயநலமாக தான் இருக்கு இவங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பொண்ணு கேட்டதுக்கு இப்படி யோசிக்கிறாங்க நிச்சயதார்த்தம் நிறுத்தவே இவ்வளவு அவமானமா இருக்கு ஆனால் அவங்க வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தையோடு விட்டுருக்கீங்க இவங்க பொண்ணுக்குன்னு வரும் போது மட்டும் கார்த்திக் இவ்வளவு கோவம் வருது

கமல் விஷயத்தில் உங்க அம்மாவை கண்டிச்சிருக்கியா அவங்க அவனை நடு வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்கிறாங்க சாரதாவோட குழந்தையை கூட்டிட்டு வர சொன்னாங்க நீ தான் போய்‌ அழைச்சுட்டு வந்த அப்போ பரணி கிட்ட ஏதோ நியாயம் எல்லாம் பேசின கௌசல்யா நேரடியாக கமல்க்கு சப்போர்ட் பண்றாங்க கார்த்திக் சக்திவேல் மறைமுகமாக சப்போர்ட் பண்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம். காயத்ரி மட்டும் தான் கமலை திட்டி இருக்கா அன்னைக்கு கமல் வீட்டுக்கு வந்த போது கூட காயத்ரி தான் அவ அம்மாவை திட்டுனா நல்லா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டால் அதனால் அவளுக்கு மட்டும் தான் பரணி கிட்ட கோப பட தகுதி இருக்கு....
கார்த்திக் அவன் தங்கச்சிக்கு நடக்கும் போது வர கோபம் சாரதாக்கு நடக்கும் போது வரவே இல்லை.
இவங்க குடும்ப யோக்கியதைக்கு நிச்சயதார்த்ததுக்கு அப்புறம் பொண்ணு கேட்டது தான் சரி. பரணி ஆதி கிட்ட மட்டும் மன்னிப்பு கேட்டால் போதும்.

காயத்ரி இனி நீதான் உறுதியாக பேசணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top