விறுவிறுப்பான பதிவு மல்லி
.ஏதோ பொண்ணு கொடுத்துட்டாங்களா,ரவிக்கு என்ன குறைன்னு இப்படி சொல்லுது,மாமியார் அவ்வளவு பேசுனாங்க அப்பவும் அடங்கலையா, பையன் உழைப்புல சுகம்மா இருந்துட்டு அவனையே குறை சொல்ற அம்மா இதுவா தான் இருக்கும்
.
வயசாகிடுச்சுனா எல்லாம் தெரியும்னு அர்த்தம் கிடையாது,வந்தீங்களா பொண்ணை பார்த்தீங்களா போய்ட்டே இருக்கனும்.இவங்க குடும்பத்தையே தாங்கறது போல நடந்துக்க கூடாது,ஷர்மிக்கு வரன் கொண்டு வர்றேன்னு அவளை டென்ஷன் பண்ணீங்க,இப்போ சந்தோஷ்க்கான்னு ரவி,சீதா சொன்னதை கேட்ட கோபமும் சேர்ந்து விசாலி,அவ அம்மாட்ட பொங்கிட்டான்
.
ஷர்மிக்கு வரன் கொண்டு வந்து ரவியோட கம்பெனியை கொடுக்க சொன்னுச்சு,சந்தோஷ்க்கு வரன் பார்த்து என்ன கொடுக்க சொல்லியிருக்குமோ
.மறுபடியும் இப்படி வந்தா,இது பரம்பரை சொத்து சந்தோஷ் இங்கே இருப்பான்,நீங்க தனிக்குடித்தனம் போயிடுங்கன்னு ஷர்மி சொல்லிட்டா.
,
எங்க அத்தை அவங்க பையனை சொன்னாங்க,நீங்க என் வீட்டுக்காரரை பத்தி இன்னொரு தடவை பேசுனா,உங்க பொண்ணு என் அப்பா வீட்டுலே இருக்க முடியாதுன்னு சரவெடியா வெடிச்சுட்டா.
இத்தனை வருசம் கழித்து கல்யாணம் பண்ணிய விசாலியை,அவங்க அம்மா புருசனோட வாழ விடாம விவாகரத்து வாங்கி கொடுத்திரும் போலிருக்கே
.பொண்ண கல்யாணம் பண்ணா இவன் சொல்றது தான் கேட்கனுமான்னு சொல்றவங்களுக்கு பொண்ணு குடும்ப விஷயத்துலே தலையிடறது தப்புன்னு தெரியலையா
.
ரவி,ஷர்மி ரெண்டு பேரும் அதிரடி,சரவெடியா கலக்கிட்டாங்க
.சீதா சொன்னதுக்கு ஷர்மிய பார்த்து முகத்தை திருப்பிட்டு போறானே,மறுபடியும் சண்டைய ஆரம்பிக்கறானா
.