எங்கம்மா மனக்குரலை பதிவிட முடிகிறது............. எப்போ எவன் வந்து arrest பண்ணுவானோன்னு பயமா இருக்கு............
அவ்ளோ டெரர்ஆ இல்லை...
கமல் மாதிரி..
புரியும் ஆனால் புரியாது
வலையின் வலையில்வலைகளில் சிக்கிய
தலைமுறையா???
இணையம் மூலம் இணைந்த
இளைய தலைமுறையா????
தூரங்களில் தொலைந்த நம்மை இணைப்பது இணையமே..
அடுப்படியில் அடங்கிய பெண்களின் மனங்களை திறப்பதும்
வலைத்தளங்களின் ஜன்னல் மூலமே...
நடந்தவை
நடப்பவை
நடக்கக்கூடாதவை அறிவுறுத்தப்படுவதிலும்
இணையில்லா பங்கு இணையத்தின் இணைப்பில்...
.
நல்லறம் நோக்கி
இணையத்தில் குரல் கொடுப்போர் பலர்..
செவி மடுப்போர் சிலர்...
அதை மறப்போரும் உளர்..
தலையில்லா உடலில்
உயிரில்லை..
நல்ல தலைவன் இல்லா தேசத்தில் உயர்வில்லை..
இணையத்தில் மனக்குரலை பதிவிடுதல் மட்டும் போதாது..
களப்பணி ஆற்றும் நேரமிது...
இணைவோம்
களமிறங்குவோம்...
வாடிய தமிழ் உணர்வை
புதுப்பிப்போம்
ஒரு வார்த்தை-ன்னாலும் திருவார்த்தையாக,எங்கம்மா மனக்குரலை பதிவிட முடிகிறது............. எப்போ எவன் வந்து arrest பண்ணுவானோன்னு பயமா இருக்கு............