Sasideera
Well-Known Member
உண்டும் உண்ணாமலும் தன் சுவாசத்தையே உயிராய் தேக்கி வேரும் தண்டுமாய் சேர்ந்து உருவாக்கிய மலரின் மொட்டு இவள்!!!
இவளின் ஒவ்வொரு இதழ் விரிப்பும் பொக்கிஷமே!!!
தொட்டாய் சிணுங்கியாய் இல்லாமல் தொட்டாலே சிவக்கும் மென்மையான தேகம்!!!
முதன்முதலில் கண் விழித்து அன்னையை நோக்கி வீசும் உதட்டோர சின்னச் சிரிப்பும்!!!
தந்தையை அடையாளம் கண்டு உரிமை கொண்டு தாவும் நேசமும்!!!
கன்னக்குழியும் பொக்கைவாய் சிரிப்பும்!!!
நாக்கை துருத்திக் கண்கள் சுருக்கி செய்யும் கொஞ்சலும்!!!
தத்தி தத்தி நடக்கும் போது சிணுங்கும் கொலுசும்!!!
கள்ளமில்லாத பேச்சும் கள்ளத்தனமான குறும்பும்!!!
சகோக்களிடம் உரிமை சண்டையும் அவர்களுடன் பாசப் பிணைப்பும்!!!
நண்பர்களிடம் அடாவடியாக அன்பு காட்டி உறவுகள் சிலாகிக்கும் குட்டி இளவரசி இவள்!!!
நாட்கள் கடந்தும் முழுதாக இன்னும் மலராமல் தாயின் கண்டிப்பிலும் தந்தையின் கொஞ்சலில் வளரும் இளம் மொட்டு இவள்!!!
சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிக்கு இணையாக காற்றிலே அசைந்தாடும் இந்த மலரை கசக்கவும் கயவன் வருவான் என்பதை இவள் அறிவாளோ!!!
முழுதாக இன்னும் மலராமல் உள்ள தன்னை நுகர்ந்தே தீருவேன் என்ற அரக்கன்கள் வாழும் பூமியில் பிறந்ததை தான் அறிவாளோ!!!
கடவுளுக்கு தொடுக்கும் அளவு மகத்துவம் வாய்ந்த தன்னை கட்டிலில் விழும் மலராக பார்க்கும் கொடியவன் உள்ளதை தான் அறிவாளோ!!!
வாழ்க்கை தடம் மாறிய விலை மாதுக்கள் பலர் இருக்க, வாழ்வே என்னவென்று அறியாத இந்த பேதையை அழிக்கவும் ஆட்கள் உள்ளனர் என்பதை தான் அறிவாளோ!!!
கண்முன்னே கருகிய மொட்டுக்களின் கணக்கே இத்தனை!!!
கண்ணுக்கு தெரியாமல் வாடிய மொட்டுக்கள் எத்தனையோ!!!
பெண்கள் மலரினம் தான் என்பதை அறிய அவன் தாய் ஒன்றே சான்றாகாதோ!!!
பெண்கள் நிமிர்ந்தாலே அடக்கி அழிக்க நினைக்கும் அரக்கனே, பொறுமை பறந்து இரக்கம் விட்டு வீறு கொண்டு மலர்கள் நிமிர்ந்தால் உந்தன் இறுதி சடங்கு இந்த மலர்களின் தலைமையில் தான் என்பதை கவனம் கொள்!!!
ஒரு அரக்கனின்ஆதியும் அழிவும் மலரினும் மென்மையான பெண்ணாலே என்பதற்கு வேறு சான்றும் உண்டோ!!!
சட்டம், நீதி, அதிகாரம், பதவி இத்தனையும் முட்களாக இருந்து மலரை பாதுகாக்காமல், அவற்றை பறிப்பதற்கு ஏதுவாக இணங்குவது ஏனோ!!!
ஒரு முறை மலரை கொய்ததற்கே இந்த முட்கள் அவனை குத்தி கிழித்து இரத்தத்தை அவனிடம் காட்டி இருந்தால் மறுமுறை அவனோ அல்ல எவனோ மனதாலும் மலரை நெருங்க நினைத்திருப்பானா!!!
இலக்கியம் சொல்லும் குற்றங்கள் பத்து என்ன பல இருக்கட்டும் ஆனால் நீதி இரண்டே!!!
ஒன்று மன்னிக்க முடிந்தது!!!
மற்றொன்று மன்னிக்க முடியாதது!!!
குற்றங்கள் பெருகுவது வளரும் நாகரிகத்தினால் அல்ல!!!
நிராகரிக்கப்படும் சரியான தண்டனைகளால்!!!
சசி.
இவளின் ஒவ்வொரு இதழ் விரிப்பும் பொக்கிஷமே!!!
தொட்டாய் சிணுங்கியாய் இல்லாமல் தொட்டாலே சிவக்கும் மென்மையான தேகம்!!!
முதன்முதலில் கண் விழித்து அன்னையை நோக்கி வீசும் உதட்டோர சின்னச் சிரிப்பும்!!!
தந்தையை அடையாளம் கண்டு உரிமை கொண்டு தாவும் நேசமும்!!!
கன்னக்குழியும் பொக்கைவாய் சிரிப்பும்!!!
நாக்கை துருத்திக் கண்கள் சுருக்கி செய்யும் கொஞ்சலும்!!!
தத்தி தத்தி நடக்கும் போது சிணுங்கும் கொலுசும்!!!
கள்ளமில்லாத பேச்சும் கள்ளத்தனமான குறும்பும்!!!
சகோக்களிடம் உரிமை சண்டையும் அவர்களுடன் பாசப் பிணைப்பும்!!!
நண்பர்களிடம் அடாவடியாக அன்பு காட்டி உறவுகள் சிலாகிக்கும் குட்டி இளவரசி இவள்!!!
நாட்கள் கடந்தும் முழுதாக இன்னும் மலராமல் தாயின் கண்டிப்பிலும் தந்தையின் கொஞ்சலில் வளரும் இளம் மொட்டு இவள்!!!
சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிக்கு இணையாக காற்றிலே அசைந்தாடும் இந்த மலரை கசக்கவும் கயவன் வருவான் என்பதை இவள் அறிவாளோ!!!
முழுதாக இன்னும் மலராமல் உள்ள தன்னை நுகர்ந்தே தீருவேன் என்ற அரக்கன்கள் வாழும் பூமியில் பிறந்ததை தான் அறிவாளோ!!!
கடவுளுக்கு தொடுக்கும் அளவு மகத்துவம் வாய்ந்த தன்னை கட்டிலில் விழும் மலராக பார்க்கும் கொடியவன் உள்ளதை தான் அறிவாளோ!!!
வாழ்க்கை தடம் மாறிய விலை மாதுக்கள் பலர் இருக்க, வாழ்வே என்னவென்று அறியாத இந்த பேதையை அழிக்கவும் ஆட்கள் உள்ளனர் என்பதை தான் அறிவாளோ!!!
கண்முன்னே கருகிய மொட்டுக்களின் கணக்கே இத்தனை!!!
கண்ணுக்கு தெரியாமல் வாடிய மொட்டுக்கள் எத்தனையோ!!!
பெண்கள் மலரினம் தான் என்பதை அறிய அவன் தாய் ஒன்றே சான்றாகாதோ!!!
பெண்கள் நிமிர்ந்தாலே அடக்கி அழிக்க நினைக்கும் அரக்கனே, பொறுமை பறந்து இரக்கம் விட்டு வீறு கொண்டு மலர்கள் நிமிர்ந்தால் உந்தன் இறுதி சடங்கு இந்த மலர்களின் தலைமையில் தான் என்பதை கவனம் கொள்!!!
ஒரு அரக்கனின்ஆதியும் அழிவும் மலரினும் மென்மையான பெண்ணாலே என்பதற்கு வேறு சான்றும் உண்டோ!!!
சட்டம், நீதி, அதிகாரம், பதவி இத்தனையும் முட்களாக இருந்து மலரை பாதுகாக்காமல், அவற்றை பறிப்பதற்கு ஏதுவாக இணங்குவது ஏனோ!!!
ஒரு முறை மலரை கொய்ததற்கே இந்த முட்கள் அவனை குத்தி கிழித்து இரத்தத்தை அவனிடம் காட்டி இருந்தால் மறுமுறை அவனோ அல்ல எவனோ மனதாலும் மலரை நெருங்க நினைத்திருப்பானா!!!
இலக்கியம் சொல்லும் குற்றங்கள் பத்து என்ன பல இருக்கட்டும் ஆனால் நீதி இரண்டே!!!
ஒன்று மன்னிக்க முடிந்தது!!!
மற்றொன்று மன்னிக்க முடியாதது!!!
குற்றங்கள் பெருகுவது வளரும் நாகரிகத்தினால் அல்ல!!!
நிராகரிக்கப்படும் சரியான தண்டனைகளால்!!!
சசி.
Last edited: