E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
பாம்பு புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! ஏன் ?
புற்றுக்கு பால் ஊத்துகிறோமே..! அது எதற்கு என்று யாரவாது யோசித்துள்ளீர்களா??
உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.
பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
அதனாலேயே புற்றுக்குள் பால் ஊற்றி முட்டை வைக்கப்படுகிறது. பாருங்களேன்
நம்ம முன்னோர்கள் எவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்கனு
 

murugesanlaxmi

Well-Known Member
திறமையை வெளிப்படுத்த
நினைக்கும் சில பேர்..!!
அதை தடுக்க நினைக்கும் சில பேர்..!!
அதை மறைக்க நினைக்கும் சில பேர்..!!
கற்றுக்கொண்டதை திசை திருப்பும் சில பேர்..!!
வளர விடாமல் தடுக்கும் சில பேர்..!!
போட்டியும் பொறாமையும்

வளர்த்துக்கொள்ளும் சில பேர்..!!
எதற்கு உதவ வேண்டும் என நினைக்கும் சில பேர்..!!
நீ பெரியவனா நான் பெரியவனா என நினைக்கும் சில பேர்..!!
திறமையிருந்தும் வாழ்கையின் வழி தெரியாமல் முன்னேற முடியாமல் தவிக்கும் சில பேர்..!!
அதை கண்டும் காணாமல் போகும் சில பேர்..!!

#இந்த_சில_பேருக்கு_நடுவில்_பல_பேர்..!!
 

murugesanlaxmi

Well-Known Member
ஏழு விதமான ஆச்சரியங்கள்* ....!!!¡¡¡
  1. *மரணம்*என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை
    அறிந்த மனிதர்கள்,
    கவலைப்படாமல்,
    தன் கடமைகளச்
    செய்யாமல்
    *சிரித்துக் கொண்டிருப்பது*
    ஆச்சரியம்.!!!
  2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
    *மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!
  3. எந்த ஒரு செயலும்
    *இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,
    கைநழுவிச் சென்றவற்றை
    எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!
  4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை
    நம்புகின்ற மனிதன்,
    அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!
  5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
    அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!
  6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
    நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!
  7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
    *ஆச்சரியம்*..!!!!!!!
 

murugesanlaxmi

Well-Known Member
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...!!
அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள்
சொன்னது என்ன தெரியுமா?? "தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல...அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்".....!!!
அதாவது "பழைய சோறு".......அந்த உணவு,
1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….
ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!
சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?
1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!
2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!
ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்…. இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்………..!!!...
இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்...உடல் நலத்தை பேணுவோம்
 

murugesanlaxmi

Well-Known Member
தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு
, காய்மா
கேக் - கட்டிகை
, கடினி
சமோசா - கறிப்பொதி
, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு
, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி
, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம்
, பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம்
, துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி
, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் -

பழக்கூட்டு



 

murugesanlaxmi

Well-Known Member
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு சிறு குட்டிக்கதை.
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன்
, அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில்
, மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன்
, தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.
நிச்சயமாக அரசரும்
, அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத்
தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும்
, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம்
, ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான்.
உள்ளே வந்த பிச்சைக்காரனிடம்
, ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.
''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை.
ஆனால்
, என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம்
, மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர்
, அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம்
, ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய்.
அதைவிட, முக்கியமான ஒன்று...
இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது.
உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது
'' என்றார்.
கண்ணீர்மல்க
, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான்.
அவனது மனம் சற்றே சலனப்பட்டது.

'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல்
இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.
அடிக்கடி கீழே விழுந்து
விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது.
மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல்
, அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.
அவனைக்
'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க
, அரசர் வந்தார்.
அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து
, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.
பழைய துணி மூட்டை
, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல
, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம்
, கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால்
, நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம்.
நம்முடைய தீராத கோபம்
, எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.
அரண்மனைகளில்

கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர்.
அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி.
வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ
, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
மகிழ்ச்சியாக இருப்போம்...
 

murugesanlaxmi

Well-Known Member
*நீ . . .நீயாக இரு !*
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
*எனவே நீ . . .நீயாக இரு !*
கங்கை நீர் புனிதம் தான் . . .

அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
*நீ . . .நீயாக இரு !*
காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
*நீ . . .நீயாக இரு !*
நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
*நீ . . .நீயாக இரு !*
பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
*நீ . . .நீயாக இரு !*
ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
*நீ . . .நீயாக இரு !*
நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
*எனவே நீ . . .நீயாக இரு !*
அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்
,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்

உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்
,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
உலகம் ஒரு நாள்
,
உன் வழி நடக்கும் ! ! !
*நீ . . .நீயாக இரு !*
அடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !

*நீ . . .நீயாக இரு !*
*நீ . . .நீநீயாகவே இரு !*
 

murugesanlaxmi

Well-Known Member
திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும் சரி என்றான்.
சிறிது நேரத்திற்கு பிறகு கணவனின் தாயார் வந்து கதவை தட்டினார். இவன் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலில் எட்டி பார்த்தும் மனைவியும் பார்த்தான். கதவை திறந்தால் கொன்னுடுவேன் என்பது போல் அவள் முறைத்தாள். சரி வீட்டில் யாரும் இல்லை போல என்று நினைத்து தாயார் சென்றுவிடுகிறார்.
மறுபடியும் சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம். இந்த முறை மனைவி எழுந்து கணவனை போல் ஜன்னலில் எட்டிப் பார்த்தால். தன் மகளை பார்க்க கையில் திண்பண்டத்துடன் காத்திருக்கிறார் அவளின் தந்தை. ஆனால் இவளோ கதவு அருகே நின்று அழுதுக் கொண்டிருக்கிறாள்.
பெண்கள் அழுவது எந்த ஒரு நல்ல ஆண்களுக்கும் பிடிக்காது. ஏன் எதற்காக அழுகிறாய் என்று கணவன் அதட்டி கேட்க அப்பா!!! என்று கை நீட்டி அவன் தோளில் சாய்ந்து இன்னும் சத்தமாக அழுகிறாள்.
மெதுவாக சிரித்த கணவன் சரி கதவை திற என்கிறான். அவனை பிடித்து இழுத்து அவன் முகத்தில் ஆசையாக முத்த மழை பொழிந்து கதவை திறக்கிறாள் மனைவி.
மாதங்கள் பல ஓடின.
முதல் குழந்தை ஆண் குழந்தையாகவும் 2வது குழந்தை பெண் குழந்தையாகவும் பிறந்தது. பெண் குழந்தை பிறந்த அன்று நண்பர்களையும் ஊர் மக்களையும் உறவினர்களையும் அழைத்து பெரும் செலவில் விருந்து வைத்தான்.
இதை பார்த்த மனைவி
ஏன் ஆண் குழந்தைக்கு மட்டும் விருந்து வைக்கவில்லை!!! என்றாள். அவள் கையை பிடித்துக் கொண்ட கணவன். நான் வீட்டிற்கு வந்தால் முதலில் பெண் குழந்தைதான் கதவை திறக்கும் என்று கண் கசிகிறான்.
அன்று அவள் செய்த தவறை நினைத்து என்னை மன்னிச்சிருடா!!! என்று சொல்லி அழுகிறாள். நீ அழுகாதே எனக்கு வலிக்கிறது என்று கணவன் சொல்ல அவள் வேக வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு நான் அழமாட்டேன்டா! செல்லம்!!!
என்று கணவனை கொஞ்சுகிறாள். இவர்கள் கொஞ்சி காதல் செய்வதை பார்த்த நண்பர்கள் அத்தனை பேரும் கைத் தட்டி விசிலடித்தனர்.
// பெண்கள் பிறவிலேயே இரக்கமும் தாய்மையும் கொண்டவர்கள் ஆனால் ஆண்கள் எப்போதுமே பெண்களை நேசிப்பவர்களாய் தான் இருக்கின்றனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top