umamanoj64
Well-Known Member
சூப்பர்ப் அரவின்...அருமையான அற்புதமான ஆழ்ந்த அலசி ஆராய்ந்த கருத்துக்கள். ..Hi mam
அருமையான ஒருவரி தன் தங்கையின் வாழ்க்கையை சரி செய்யப்போய் தன் வாழ்க்கையை ஊசலாடவிட்டுவிட்டார் ஈஸ்வர்,ரஞ்சனிக்குள் பத்து மீது இப்போதுதான் உரிமையுணர்வு வந்துள்ளது இனி விரைவில் அவர்களுக்குள் எல்லாம் சரியாகும்,ஆனால் வர்ஷினி பாவம்தான் அதைவிட இப்போ ஈஸ்வர் பாவமாகத்தோன்றுகின்றது,வாழ்க்கையின் ஓட்டத்தில் எவராலுமே நிலையான மனநிலையுடன் இருக்கமுடியாது,அதுவும் குடும்பத்திற்குள் மிகவும் குறைவு,அன்பினை சிலர் வாயாலும் சிலர் மௌனமாயும் சிலர் செய்கையாலும் உணர்த்துவார்கள்,வேலை இருந்தால் என்னை மறந்துவிடுவாயா என வர்ஷினி கேட்கும் இடம் வர்ஷினி ஒரு வளர்ந்த குழந்தைக்கு என்றே காட்டுகின்றது,எங்கு வளரந்தாலும் மனிதர்களுக்கென்று சில அடிப்படை உணர்வு ஒன்று இருக்கின்றதல்லவா,அதைக்கூட வர்ஷினியால் யோசிக்கமுடியாதா,ஏனென்றால் பணப்பிரச்சனையை ஈஸ்வர்தான் தீர்த்து வைக்கவேண்டும் என்று தெரியுமல்லவா,அதற்காக ஈஸ்வர் வேலையே கதியென்று இருந்தது சரி என்று சொல்லவில்லை ஒரு இக்கட்டான சூழ்நிலை அதைக்கூட புரிந்து கொள்ளமுடியாத பெண்ணா,ஈஸ்வர் எல்லாவற்றுக்கும் சரியான காரணங்களை விளக்கமாக கூறியும் புரியவில்லையே,எனக்கு இது வேணும் அதன்படி நீ செய்ய வேண்டும் என்று கூறி திருமணம் செய்து அதன்படியே வழுவாமல் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் என்ன செய்வது ,ஈஸ்வர் ஒன்றும் இயந்திரமனிதன் அல்லவே, இருவருக்கும் மிகவும் காரசாரமான வாக்குவாதம் இப்போது ,கோபத்தில் தங்களை உணராமல் வார்த்தைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்,இதையிட்டுத்தான் அவர்களின் பிரிவா,வர்ஷினிக்குத் தெரியும் தன் மேல் உள்ள ஈர்பினால் ஈஸ்வர் திருமணம் செய்வதற்கு எவ்வளவு காலம் காத்திருந்தது அதன்பின் மணமுடித்தது என்று ,அப்படிச்செய்தவன் ஒரு தவிர்க்க முடியாத சூழலில் அப்படி நடந்து கொண்டார் என்றால் ஒரு சாதரண மனிதனால் உணர்ந்துகொள்ள முடியும்,ஏன் வர்ஷினியல் உணர்ந்துகொள்ள முடியவில்லை, உறவுகளுக்குள் சண்டை சமாதானம் எல்லாமே இயற்கையாக நடப்பதுதான் ,எனக்குதோன்றுகின்றது வர்ஷினி பிறந்ததில் இருந்தே தனிமை & ஒருவித பாதுகாப்பின்மையுடன் வளர்ந்ததால் ,அது கவனிக்கப்படாமல் இருந்ததால் ,அது ஒருவித மனநோயாக மாறுகின்றதோ என்று,இனியாவது ஈஸ்வர் வர்ஷினி மேல் இன்னும் கூடுதல் கவனமெடுத்து இன்னும் பொறுமையாக அவரை கையாள வேண்டும்,ஈஸ்வரால்தான் வர்ஷினியின் உணர்வுகளை வெளிக்கொண்டுவரமுடியும்,காதல் சொன்ன பெண்ணை ஈஸ்வர் நோகடித்தார், இப்போ கட்டினவள் ஈஸ்வரை நோகடிக்கின்றார்,இதுதான் "தன்வினை தன்னைச்சுடும்"
நன்றி
Aravin22
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. .அவளுக்கு மனநோயே தான். .இப்போ அவளுக்கு தேவை தீவிர சிகிச்சை. .