அவளின் போதை மருந்து பழக்கத்திற்கு மிதமிஞ்சிய பணம்தான்
காரணமா? அவள் வழி தவறிய பெண்ணில்லை.
அவனின் தவறான செயலும்,அதன் விளைவுகளுமே காரணம்..
அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
என் மனதை கவர்ந்த ,தொட்ட பாடல்....
'ஆழம் எது ஐயா,பொம்பள மனசு தான்யா'
அந்த வரிகளிலே நான் மூழ்கிவிடுவேன்.
அதை தாண்டி மனது எங்கும் போகாது......
ஈஷும் ஒரு காரணம்..நல்லா தெரிஞ்சுகோங்க..ஈஷும் ஒரு காரணம் ...
பணம் பணம் பணம் மட்டுமே மிக முக்கிய பிரதான காரணம்...
பணம் இருப்பதால் தான் போதையில் மிதந்து இருக்கா...பார் போய் குடித்தும் இருக்கா...நாம் மத்தியதர மக்கள் சாதாரணமா பார் உள்ள போவோமா????
அவளின் வளர்ப்பும் ஒரு காரணம்...வளர்ந்த சூழ்நிலையும் ஒரு காரணம்..பிறப்பும் ஒரு காரணம்..ஏன் ஈஷ் தந்த பாலியல் தொந்தரவை தாயிடம் சொல்லி இருப்பா,நல்ல தாய் அமைந்து இருந்தா..இல்லை கண்ணியமான தகப்பன் இடம் சொல்லி இருப்பா..இரண்டும் அமையாத பெற்றோரே சிறந்த காரணம்....
கையில் பணம் இல்லேன்னா அவள் தனிமையை வேறுவழி நோக்கி சென்று இருப்பா..தியானம் சென்று இருப்பா...கோவில்களுக்கு சென்று இருப்பா..ஏன் புத்தகங்களை தேர்ந்து இருப்பா...
இதை சொல்லிதர பெற்றோர் இல்லை..நல்ல நண்பர்கள் இல்லை...
உன் நண்பன் யாரென்று சொல்..நீ எப்படிபட்டவன் என்று நான் சொல்வேன்..ஒரு வாக்கு மொழி உண்டு...
உயர்ந்த நிலை பணம் இருப்பதால் தேர்ந்தெடுப்பது அசாத்திய போதை மருந்து..
தாழ்ந்த நிலை இருப்போர் அதற்கேற்றார் போல் கஞ்சா,குடி..இருக்கவே இருக்கு பான்பராக்....
அவரவர் கையில் உள்ள பணம் போன்று போதை பொருளை தேர்ந்து எடுக்க வழியா இல்லை பூமியில்???