மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா
பணமிருக்கும் தனமிருக்கும் உங்கள் வாசலில்
நல்ல குணம் இருக்கும் குலம் இருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில்
புது பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்
மணமகளே மருமகளே வா வா...........
கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமுடன் புது மணமும் சேர வந்த வாசல்
மணமகளே மருமகளே வா வா..........
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது
அது பொங்க நாம் பாத்திருந்தா பசி எடுக்காது
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா