மலர் சுயநலமில்லாது செய்த செயல் இன்று அதற்கான பலனை கொடுத்துள்ளது.பிரவாவின் பாசிட்டிவ் எனர்ஜி மலர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கீர்த்தி புகுந்த வீட்டினர்க்கு இது தேவை தான்.தவறு செய்த மகனை கண்டிக்காதது, முக்கியமான நேரத்தில் பொறுப்பை விட்டு விலகியது எல்லாம் தவறு என தெரிந்தே செய்ததற்கு இந்த மாதிரி முடிவு தேவை தான்.
விஷ்ணுவின் புத்திசாலித்தனமான அணுகுமுறையால் மிகப்பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்தது.விஷ்ணு கொஞ்சம் யோசித்துப் பார்த்து முடிவு எடுக்கலாம்.மலருக்கு சப்போர்ட் ஆக இருக்கும்.இம்முறை மிருவின் குழந்தைக்கு பிரவா மாமா ஆவது உறுதி.
நல்ல சுபமான பதிவு.