Well saidபாவனா செய்யறதெல்லாம் செஞ்சு கொஞ்சம் தயக்கத்தோட இருந்தவனை stimulate பண்ணிட்டு இப்ப நிர்பந்தபடுத்திட்டேனான்னு கேட்கறது-எப்படி அவளால செய்ய முடியுதுன்னே தெரியலை.
சுயநலம் அவ கண்ணை மறைக்குதோ இல்லையோ விஜய் கண்ணை நல்லா மறைச்சுருக்கு.
என்ன விஷயம்னே சொல்லாமல் நியாயம் கேட்கறதெல்லாம் துரோகம். கங்கா ஒரு பக்கம் பையன் இன்னொரு பக்கம் அவன் friends என்று யோசிச்சு தன் கருத்தை சொல்லறாங்க. இந்த நல்லவன் இன்னொரு பக்கம் அவங்க அப்பாவோட கெளரவமும், அவனோட உடன்பிறப்புகளும்ன்னு சொல்லி இருந்தா கங்காவோட நிஜமான நியாயம் தெரிய வந்துருக்கும்.
எந்த தப்புமே செய்யாவிட்டாலும் பாவனா மரியாதை இழந்து தான் இருக்கா சமுதாயத்தில். அதை ஓரளவு தன் படிப்பு-career என்ற திசையில் உயர்ந்து குறைக்கலாம். அவளோட தனி அடையாளங்கள் அவளுக்கு மரியாதையாய் ஈட்டுத் தரும். ஆனால் அதுக்கு அதிக நாள் எடுக்கும். இவளுக்கு பொறுமை அவசியம். அதெல்லாம் அவகிட்ட சுத்தமா இல்லை.
விஜய்க்கு அவனோட ஊர்ல இதுவரை இருக்கும் மதிப்பு அவங்க அப்பா சேர்த்துவெச்சது. அதை எப்படி இவன் குறைக்கலாம்?
பேசாமல் மொத்தமா ஒரு பக்கம் யோசிச்சு இவங்களை யாருன்னே அடையாளம் தெரியாத வெளிநாட்டுல குடி போய்டலாம். IT வேலை தானே விஜய்க்கு. So easy - ஆ கிடைச்சுரும். காலப்போக்குல பெத்தவங்களும் siblings -ம் சரியாகிடுவாங்க. அவங்களுக்கு வேற option -ம் இருக்காது.