நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

Advertisement

Eswari kasi

Well-Known Member
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு


தோற்றால் புலம்பாதே . . .
போராடு


கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு


தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு


நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி


ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில்


நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை


கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு


உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு


கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு


மொத்தத்தில் நீ பலமாவாய்


சித்தத்தில் நீ பக்குவமாவாய்



உன்னால் முடியும் .

உயர முடியும் . . .



உதவ முடியும் . . .



⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
உன்னை உயர்த்த நீ தான் . . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .


நீயே பாறை.நீயே உளி . . .


நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .


நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .

நீயே வளர்வாய் . நீயே அனுபவிப்பாய் . . .


நீயே நதி . . . நீயே ஓடு . . .


நீயே வழி . . . நீயே பயணி . . .


நீயே பலம் . . . நீயே சக்தி . . .


நீயே ஜெயிப்பாய்

எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே
. படித்ததில் பிடித்தது
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எல்லாவற்றையும் நமக்குள்ளே வைத்துக்கொண்டு நாம் வெளியில் தேடுகிறோம்... மனதை வெகுவாக கவர்ந்த பதிவு:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top