சாந்தி கவிதா
Well-Known Member
Hi friends,
வணக்கம். தோழிகள் எல்லோருக்கும் என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
இது ஒரு சிறு நாவல். பதினைந்து episode தான் எழுத போறேன். இது கொஞ்சம் வித்தியாசமான ஒரு கதைன்னு கூட சொல்லலாம்.
ஒரே நேரத்தில பயணம் செய்யுற கொஞ்ச பேரோட தேடல் தான் இந்த கதை. உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.
படித்து பார்த்து உங்களோட கருத்துக்கள் என்னோட நிறை குறை என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நாவலின் சில வரிகள்....
"சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!" என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால் விழாதவாறு பிடித்தபடி தான் ஏற வேண்டிய ரயிலின் கம்பார்ட்மெண்டை அடைந்தாள் ஸ்ரேயா.
பார்க்கும் போதே துருதுருவென அலையும் கண்கள். அந்த கண்களில் நிறைந்த குறும்பு மற்றும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு. அவளின் வயது ஒரு இருபத்து இரண்டு இருக்கும் என கணித்து கூட விடலாம்.
_______________________________________
அவள் எதிரே இவளின் வயதை ஒத்த ஒரு பெண் ஸ்ரேயாவின் செயலை பார்த்த படி அமர்ந்திருந்தாள். ஆனால் பேசாது அமைதியாக இருந்தாள்.
அவள் சஹானா. அமைதியான அழகு முகம் இவளது. யார் இவளின் முகத்தை பார்த்தாலும் மனம் தன்னாலே அமைதி அடையும் என சொல்லலாம். ஆனால் அந்த கண்கள் ஏதோ தேடலை உள்ளடக்கி இருந்தது போல் தெரிந்தது.
__________________________________________
அவளுக்கு அருகே ஒரு வயதான தம்பதி தங்கள் பையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ஸ்ரேயா "ஹாய் அங்கிள்! ஹாய் ஆண்டி.
நான் டெல்லி போறேன். நீங்க எங்க போறீங்க" என கேட்டு அவர்களும் டெல்லி செல்கின்றனர் என அறிந்து கொண்டாள். அதன்பின் தன் போல் ஊர் கதை உலக கதை என பேச ஆரம்பித்து விட்டாள் ஸ்ரேயா.
அந்த சிறிது நேர பேச்சில் சோமசுந்தரம் அவளுக்கு 'சோம் அங்கிள்' ஆக அவர் மனைவி லக்ஷ்மி அம்மா 'லக்ஸ் ஆன்டி' ஆகிவிட்டார். அவர்களுக்கு இவள் 'ஸ்ரே பாப்பா' ஆகிவிட்டாள்.
__________________________________________
"ஏன்பா தம்பி என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் எந்த ஊருக்கு போறீங்க?" என்றார் கேள்வியாக.
அவரின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த வெற்றி 'எப்பா சாமி! இந்த பெருசுக்கு நாங்க ரெண்டு பேரும் கூட இருக்கிறது இப்ப தான் கண்ணுல விழுது போல' என நொந்தேவிட்டான்.
நன்றிகள் பிரண்ட்ஸ்
வணக்கம். தோழிகள் எல்லோருக்கும் என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.
இது ஒரு சிறு நாவல். பதினைந்து episode தான் எழுத போறேன். இது கொஞ்சம் வித்தியாசமான ஒரு கதைன்னு கூட சொல்லலாம்.
ஒரே நேரத்தில பயணம் செய்யுற கொஞ்ச பேரோட தேடல் தான் இந்த கதை. உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.
படித்து பார்த்து உங்களோட கருத்துக்கள் என்னோட நிறை குறை என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நாவலின் சில வரிகள்....
"சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!" என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால் விழாதவாறு பிடித்தபடி தான் ஏற வேண்டிய ரயிலின் கம்பார்ட்மெண்டை அடைந்தாள் ஸ்ரேயா.
பார்க்கும் போதே துருதுருவென அலையும் கண்கள். அந்த கண்களில் நிறைந்த குறும்பு மற்றும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் அழகு. அவளின் வயது ஒரு இருபத்து இரண்டு இருக்கும் என கணித்து கூட விடலாம்.
_______________________________________
அவள் எதிரே இவளின் வயதை ஒத்த ஒரு பெண் ஸ்ரேயாவின் செயலை பார்த்த படி அமர்ந்திருந்தாள். ஆனால் பேசாது அமைதியாக இருந்தாள்.
அவள் சஹானா. அமைதியான அழகு முகம் இவளது. யார் இவளின் முகத்தை பார்த்தாலும் மனம் தன்னாலே அமைதி அடையும் என சொல்லலாம். ஆனால் அந்த கண்கள் ஏதோ தேடலை உள்ளடக்கி இருந்தது போல் தெரிந்தது.
__________________________________________
அவளுக்கு அருகே ஒரு வயதான தம்பதி தங்கள் பையை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் ஸ்ரேயா "ஹாய் அங்கிள்! ஹாய் ஆண்டி.
நான் டெல்லி போறேன். நீங்க எங்க போறீங்க" என கேட்டு அவர்களும் டெல்லி செல்கின்றனர் என அறிந்து கொண்டாள். அதன்பின் தன் போல் ஊர் கதை உலக கதை என பேச ஆரம்பித்து விட்டாள் ஸ்ரேயா.
அந்த சிறிது நேர பேச்சில் சோமசுந்தரம் அவளுக்கு 'சோம் அங்கிள்' ஆக அவர் மனைவி லக்ஷ்மி அம்மா 'லக்ஸ் ஆன்டி' ஆகிவிட்டார். அவர்களுக்கு இவள் 'ஸ்ரே பாப்பா' ஆகிவிட்டாள்.
__________________________________________
"ஏன்பா தம்பி என்ன ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் எந்த ஊருக்கு போறீங்க?" என்றார் கேள்வியாக.
அவரின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த வெற்றி 'எப்பா சாமி! இந்த பெருசுக்கு நாங்க ரெண்டு பேரும் கூட இருக்கிறது இப்ப தான் கண்ணுல விழுது போல' என நொந்தேவிட்டான்.
நன்றிகள் பிரண்ட்ஸ்
Last edited: