கதிர் - பிரியா சண்டை ரொம்ப தத்ரூபமா காட்சி படுத்தி இருக்கீங்க
மஹாலட்சுமி அம்மாக்கு பொண்ணு மேல பாசம் இருந்தாலும் பையன் பொண்ணு நடுவுல பேதம் இருக்கு. இது நம்ம சமுதாயத்தில் புதுசு இல்லை தான். 5 நிமிஷம் late - ஆ வந்தா பொண்ணை போட்டு அந்த அடி அடிப்பாங்களே. இப்ப பையனையும் நாலு சாத்து சாத்த வேண்டியது தானே இப்படி ஒரு கேடுகெட்டவளை மனைவியாக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு. முடியலை இல்லை. கர்மா returns. பாருங்க தப்பா பேசுற மருமகளை நீங்க தாங்கினாலும் அவ உங்க மேல சேத்தை வாரி தான் வீசறா. இன்னும் கொஞ்சம் நேரத்துல இவளை பெத்த மகராசியும் அவங்க சாக்கடை வாயை தொறந்துகிட்டு வருவாங்க.
ஆனால் ஒன்னு சில (நல்ல) பெண்களுக்கு மட்டும் விதி டபுள் shift போட்டு வேலை செய்யும். நம்ம கார்த்திகா அந்த ரகம். அம்மா - மாமியார் ரெண்டு பேராலும் அவளுக்கு support கிடையாது. இதுல இந்த பிரியா பத்தி சொல்லவே வேண்டாம். கார்த்திகாக்கு வினை விதைக்கவே (மட்டுமே) பொறந்தவ.
எனக்கு ஒரே கவலை தான். முதல் முதலில் குமார் வாங்கி குடுத்த phone ஒன்னும் ஆகிடக்கூடாது + அது கார்த்திகாக்கு உபயோகமா இருக்கணும். இன்னும் ஆசையா ஒரு DP கூட வைக்கலை அவ. அதுக்குள்ள phone வீணாகிடுமோ?