தித்திக்கும் முத்தங்கள் 14

Advertisement

Novel-reader

Well-Known Member
கதிர் - பிரியா சண்டை ரொம்ப தத்ரூபமா காட்சி படுத்தி இருக்கீங்க :D

மஹாலட்சுமி அம்மாக்கு பொண்ணு மேல பாசம் இருந்தாலும் பையன் பொண்ணு நடுவுல பேதம் இருக்கு. இது நம்ம சமுதாயத்தில் புதுசு இல்லை தான். 5 நிமிஷம் late - ஆ வந்தா பொண்ணை போட்டு அந்த அடி அடிப்பாங்களே. இப்ப பையனையும் நாலு சாத்து சாத்த வேண்டியது தானே இப்படி ஒரு கேடுகெட்டவளை மனைவியாக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு. முடியலை இல்லை. கர்மா returns. பாருங்க தப்பா பேசுற மருமகளை நீங்க தாங்கினாலும் அவ உங்க மேல சேத்தை வாரி தான் வீசறா. இன்னும் கொஞ்சம் நேரத்துல இவளை பெத்த மகராசியும் அவங்க சாக்கடை வாயை தொறந்துகிட்டு வருவாங்க.

ஆனால் ஒன்னு சில (நல்ல) பெண்களுக்கு மட்டும் விதி டபுள் shift போட்டு வேலை செய்யும். நம்ம கார்த்திகா அந்த ரகம். அம்மா - மாமியார் ரெண்டு பேராலும் அவளுக்கு support கிடையாது. இதுல இந்த பிரியா பத்தி சொல்லவே வேண்டாம். கார்த்திகாக்கு வினை விதைக்கவே (மட்டுமே) பொறந்தவ.

எனக்கு ஒரே கவலை தான். முதல் முதலில் குமார் வாங்கி குடுத்த phone ஒன்னும் ஆகிடக்கூடாது + அது கார்த்திகாக்கு உபயோகமா இருக்கணும். இன்னும் ஆசையா ஒரு DP கூட வைக்கலை அவ. அதுக்குள்ள phone வீணாகிடுமோ?
 
Last edited:

Vatsalaramamoorthy

Well-Known Member
குமரனுக்கு உணவு பரிமாறியது பிரியா இல்லை..கார்த்திகைசெல்வி தானே?
சாரிம்மா கவி..நீங்க அவசரத்தில் எழுதியிருப்பீங்க..if I am wrong pl மன்னிச்சுக்குங்க..
 

Novel-reader

Well-Known Member
விதி சதி செய்தாலும் ...குமரனுக்கு எல்லாம் நன்மைக்கே ஆகட்டும் :love:
இப்ப வரையுமே அவனுக்கு தானே எல்லா சூழலிலும் ஜாக்பாட் அடிச்சுருக்கு. இப்பையும் நீங்க அவனுக்காக மட்டும் வாழ்த்தினா எப்படி? எப்ப தான் கார்த்திகாக்கு விதி கண்ணை தொறக்கும்?
 

Hema Guru

Well-Known Member
❤️❤️❤️

அவளை மையமாக வைத்து விளையாட்டை தொடங்க இருந்தது விதி அல்ல... கவி பண்ற சதி.. :cautious::cautious:
View attachment 11669
SS.... நான் இதை வன்மையாக வழி மொழிகிறேன் .... பண்ணரதெல்லாம் பண்ணிட்டு விதியாம்ல.....
 

vijiramesh

Active Member
தங்கையை கதிர்வேலு கடத்திக்கொண்டு போய் கல்யாணம் செய்து கொண்டான் என்று பழி வாங்க குமரன் கார்த்திகாவை கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்து இருக்கிறான். கதிரும் ப்ரியாவும் பண்ண தப்புக்கு பலிகடா கார்த்திகா. அதை யோசிக்காமல் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் என்ன ஒரு திமிர் இருந்தா கார்த்திகாவை இந்த பிரியா இப்படியெல்லாம் சொல்லுவா? மாமியாரை ஏக வசனம் வேறு. என்ன பொண்ணு இவ சே ..... தாயைப் போல பெண். நல்ல பெண்ணை அனாவசியமா கண்டித்து, கண்காணித்துக்கொண்டே இருந்த மகாவிற்கு தண்டனை மருமகளின் ரூபத்தில் வந்துள்ளது . இந்த கதிருக்கு கொஞ்சம் கூட தங்கை மேல் பாசமில்லையா ? இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறானே ?
 

Surya Palanivel

Well-Known Member
Disgusting Priya! என்ன பேச்சு பேசுது. இதுலயே ராணி வளர்ப்பு தெரிது. ரெண்டும் சேர்ந்து கார்த்திகை யை என்ன பாடு படுத்தப் போறாங்களோ?
 

Mathykarthy

Well-Known Member
இவ வாய்க்கு எல்லாம் இன்னும் ரெண்டு சேர்த்து கொடுக்கலாம்.... என்ன பேச்சு பேசுறா.... பின்விளைவுகள் எதை பத்தியும் யோசிக்காம நீ பண்ணின., பண்ற வேலைக்கு பேச்சு வாங்குற.... அதுக்கு அவனை பேசு....
கார்த்திகா என்ன பண்ணா....
மகா பொண்ணை விசாரிக்காம துரத்துனீங்க... இப்போ மருமக பின்னாடி ஓடிட்டு இருக்கீங்க...
ராணி சும்மாவே வாய்ப்புக்கு காத்திருக்காங்க கார்த்திகாவை எப்படி துரத்தலாம்ன்னு... இனி அம்மா பொண்ணு சேர்ந்து என்ன பண்ணப் போறாங்களோ.... பாவம் கார்த்திகா...
குமரன் இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கான்.... அது பிடிக்கலயா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top