சௌமியா - வருண் scene ரொம்ப எதார்த்தமா அழகா, ஏற்றுக்கொள்ள கூடியதா இருந்தது.
(Particularly Sowmya's behaviour towards Varun after three months of seperation during pregnancy.)
எவ்வளவு நேர்மையா, நியாய சிந்தனையோட செயல்பட்டு பாலன் இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை சிதையாது காப்பாத்தி இருக்கான்.
எனக்கு வருண்கிட்ட ஒரே ஒரு கேள்வி தான். பாலன் இப்படி தான் react பண்ணுவான்னு உறுதியா தெரிஞ்சு தான் இவன் இப்படி செஞ்சானா? அவன் long term-ல எதுவும் எதிர்மறை பின் விளைவை எதிர் பார்த்தானா இல்லையா?
சிவபாலன் பிரஹதீஸ்வரியோட எல்லா கஷ்டத்திற்கும் ஆறுதலாய், மருந்தாய் வந்த வரம்ன்னு தான் எனக்கு தோணும்.
ஏம்மா பிரியா, உன் லவ் ஆனாலும் இவ்வளவு scene காட்ட வேணாம். தேங்காய் பர்பி தூளா சாப்பிட்டா உன் புருஷனுக்கு என்னம்மா ஆகிடும்? அல்வா என்றாலாவது பரவாயில்லை. சரியா செய்யலைன்னா வாயில ஒட்டிக்கும். தூள் பர்பி உன் புருஷன் பல்லை ஒன்னும் செஞ்சுருக்காதும்மா. அப்படியே ஏதாவது ஆனாலும் ஆதவன் மாதிரி ஒரு திறமையான dentist மாப்பிள்ளை இருக்கறப்போ ஒன்னும் கவலை இல்லை.
(நீ செஞ்ச sweet-க்கே இவ்வளவு பார்க்கற, அப்ப கண்டிப்பா ஒரு dentist - ஆ நீ அவனுக்கு வைத்தியம் பார்க்க மாட்ட.)
ஆதவன் - வருண் conversation நல்ல சிரிப்பு. பிரியா அவளுக்கு இப்படி பயப்பட வெச்சுட்டாளே அவளோட அண்ணனை.
பாலன் சொல்வது போல வருண் சௌம்யா பிறந்த வீட்டு விஷயத்துல பொறுத்து தான் போகணும். அவ மட்டும் வேணும்னு நினைப்பது என்ன மனநிலை?
வைத்தியநாதன் எந்த முகத்தை வெச்சுகிட்டு இப்ப பிரஹதீஸ்வரியை பார்க்க வராரு? வரும் வழியிலயே அவர் கை கால் முறிஞ்சு ஏதாவது அவருக்கு ஆனா என்னன்னு தோணுது. பாவம் பாலனோட அம்மா. இப்பதான் தன் குழந்தைகளோட சந்தோஷமா கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. அதை கெடுக்க இந்த துரோகி வந்து அவங்களோட. ரணத்தை கிளறப்போறாரா?
ஆண்டவா! வைத்தியநாதனை சந்திக்கும் பொழுது, வருணை அவனுக்குள்ள எழும் ஆத்திரத்தில் இருந்து காப்பாத்து.