சொர்க்கம் எது??

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
கரும்பலகையில் உள்ள
வெள்ளை நிற எழுத்துக்கள் போல்
இருள் சூழ்ந்த வானில்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்!!
அரச சபையில் சபையினர் சூழ
சிம்மாசனத்தில் மணிமகுடம் சூடி
வீற்றிருக்கும் அரசனை போல்
நட்சத்திரங்கள் படை சூழ
இருள் சூழ்ந்த வானில்
உலா வரும் வெண்ணிலவு!!
மயிலிறகால் வருடும்
உணர்வை தரும்
உடலை தழுவிச்செல்லும்
குளிர்காற்று!!
இசை வித்துவான்களால் பாடமுடியாத
தாளக்கட்டுக்கடங்காத வார்த்தைகளினால்
வர்ணிக்க முடியாத
மனதுக்கினிய
நாதத்தை இசைக்கும்
கடலலைகள்!!
இவ்வழகை உலகை மறந்து
ரசிக்கும் என்னை
தீண்டும் மழைத்துளிக்கு
தெரியுமா??
அதன் வரவு எனக்கு
சொர்க்கத்தை உணரச்செய்யும் என்று!!
யார் சொன்னது இந்திரலோகம்
சொர்க்கம் என்று??
இந்திர லோகத்தில் உள்ளவர்களையே
அவர்கள் உலகத்தை
மறக்க வைக்கும்
இந்த இரவு நேர
கடற்கரை அழகு!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top