அதான் எங்களுக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகணும்
பொண்டாட்டியை வயிற்று பிள்ளையோடு தூக்கிட்டுப்போயிருக்கான்.....
அவளை தேடுறப்போ வந்தவனுக்கெல்லாம் நச்சு நச்சுன்னு போட்டவன் அர்ஜுனை மட்டும் ஏன் எதுவும் சொல்லலை???
ஆரு கிளாஸ்மேட்...... அருளுக்கு அடுத்த வீடு......
என்ன இருந்தாலும் அர்ஜுன் பண்ணிணது ரொம்ப தப்பு.....
இதுல அவன் ரொம்ப ஓவரா உரிமை எடுத்துக்கிறான்.......
மாமியார் கூட ஒன்னும் சொல்லலையே
எல்லாம் அருளை பத்திரமா பாத்துக்கிட்டதுக்காகவா????
அடப்பாவி...அர்ஜூன் கர்நாடகா எல்லையில் இருக்க ஊர்லேயே அருளை கடத்தி வச்சிருந்தான்.அருளை இவ்வளவு தொலைவு எப்படி கூட்டிட்டு வந்திருப்பான்.ஆருத்ரன் அன்னபூரணியை வர வேணாம்னு சொன்னது இதனால் தானா.
பேத்தியை பார்க்க ஆசை இருந்தாலும்,முதலில் அருள் தான் முக்கியம்னு அன்னபூரணி சொல்ல, அவங்க பாசத்தை பார்த்து ருத்ரனுக்கே பொறாமையா இருக்கு.பாட்டியை,பேத்தி பன்னீர் தூவி வரவேற்கிறா.மாமியார்,மருமகள் மேல பாசமா இருப்பதை பார்த்து மஞ்சுளாவுக்கு இந்த காலத்துல இப்படியும் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் தான்.
அருள்,ஆருத்ரன் விரும்பா விட்டாலும் அர்ஜூன் வீட்டில் ரெண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.
அன்னபூரணியை பார்த்த அர்ஜூனுக்கு ஆளை அடிப்பவர் போல இருப்பதை கண்டு பயமா.
அந்த பயம் இருக்கட்டும்.பேத்தியை பார்த்த சந்தோஷத்துல அர்ஜூனை மன்னிச்சுட்டார்...
அருள் இங்கு தங்கியதற்கு ருத்ரன் பணம் கொடுப்பதும்,அர்ஜூன் அம்மா போட சொன்னதாக குழந்தை கழுத்தில் போடும் செயினை அருள் வாங்காததும் சரிதான்.அருள் சொன்னது போல அர்ஜூன் அவன் அம்மாவோடு வந்து போடட்டும்.தாமரை வந்திருப்பதை பற்றி பூரணி ஒன்னும் சொல்லலை.மனம் திருந்தி வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்குது
அர்ஜூனை ஏன் எதுவும் செய்யாம விட்டான்னு எங்களுக்கும் தெரியனும்.அர்ஜூனை ஒன்றும் செய்யாததற்கு அருள் தான் காரணமா.ஆருத்ரன் திருமணத்துக்கு முன் அருள் அப்பா இறப்பதற்கு முன் அவளை சந்திச்சு இருக்கானா.
கேளு கேளு அருளு நல்லாக் கேளு ஆருத்ரனை
எனக்கும் இத்தனை நாளாய் மண்டை குடைந்து கொண்டே இருந்தது
அவ்வளவு அடாவடிக்காரன் வருணையும் அவங்கப்பனையும் வைச்சு லாடம் கட்டினவன் அர்ஜுனை மட்டும் எப்படி சும்மா விட்டான்னு?
ஒருவேளை நான் சொன்ன மாதிரி அருளாசினியை ஆள் போட்டு கவனமாகப் பார்த்ததாலேவா?
இல்லை ஹாஸ்பிடலுக்கு உடனே கூட்டிட்டு போனதாலா?
ஏண்டா அர்ஜுன்
அவளை கடத்தி வைச்சு நீ செஞ்ச கேப்மாறி வேலைக்கு நீ செயின் போட்டால் உடனே ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு அருளு வாங்கிக்குவாளா என்ன?