அருமையான பதிவு சவீதா.செலக்க்ஷன் கமிட்டியில உள்ளவங்க இவன் ப்ராஜக்டை விட அவங்களோடது நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணதால பழி வாங்க துடிக்கிறானே.
இதெல்லாம் லூசுத்தனமா இல்லை.கமிட்டில அவங்க கம்பெனி ஆளுங்க இருந்தா அதுக்கு ருத்ரன் என்ன பண்ணுவான்.
அடப்பாவி...எவ்வளவு கிரிமினலா திட்டம் போட்டிருக்கான்.அன்னபூரணிய ஆளுங்கள வச்சு வீட்டை விட்டு துரத்தி விட்டு,பக்கத்து வீட்டுக்காரனை வச்சு அருள் நகை,துணியெல்லாம் எடுத்திருக்கான்.
வருணை வேற யூஸ் பண்ணிருக்கான்.வருணோட போனதா சொல்லுவாங்க,இல்லை சொந்தக்காரங்க தொறத்துனதா பேர் வரும்.எவ்வளவு குரூரமா திட்டம் போட்டிருக்கான்.மனுசனா இவன்.
சின்ன வயசுலேயே புடுங்கி சாப்பிடறது நல்லா இருக்குன்னு சொன்ன அல்பமா இவன்.
அன்னபூரணியை பார்த்ததும் அஞ்சனாக்கு வயித்துக்கும்,தொண்டைக்கும் நடுவே உருண்டை உருளுதா.பூரணி மேல இவ்வளவு பயம் இருக்கறவ எதுக்கு பாக்கற இடத்துல எல்லாம் அவனை சீண்டனும்.என் வாழ்க்கையை கெடுக்காதீங்கன்னு சொல்றவளுக்கு,ருத்ரன் வாழ்க்கைய கெடுத்தது தப்புன்னு தோனலையா.பூரணி நல்லா நாக்கை புடுங்கிக்கறதை போல கேட்டாங்கபூரணி வந்ததுக்கு ஒரு அறையாவது கொடுத்துட்டு போயிருக்கலாம்
அர்ஜூன் கடத்த வாய்ப்பு இல்லைனு சொன்னானா இல்லை அடிச்சு அவன் ஆளை சொல்ல சொன்னானா.அருளை கடத்துன இடம் தெரிஞ்சும் அவளுக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு வராம இருந்தவன்.பூரணி எந்த நேரமும் குழந்தை பிறக்கும்னு சொல்லவும் வந்துட்டானா.