கல்யாணத்துக்கு முன்னாடி ஜெயலக்ஷ்மிகிட்ட யுவராஜ் பேசினது எல்லாமே ஜமுனாக்கு மட்டும் தான் தெரியாதா இல்லை தயாநிதிக்குமா?
அவருக்கு தெரியாதுன்னா முதலில் divorce நடக்க வேண்டியது தயாநிதி - ஜெயலஷ்மிக்கு தான்.
அவருக்கு முன்னாடியே யுவராஜ் சொன்னது தெரியும்னா சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாததுக்கு இவ்வளவு முறுக்கு யுவராஜ்க்கு இருப்பது நியாயமில்லை. அவர் கேசவனுக்கு சொல்லி இருந்தாலும் நீயும் அதுக்கு பொருந்தி தான் இருக்க. 'கையாலாகத்தனம்' என்கிற சொல்லுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கலாம். உனக்கும் உங்கப்பாக்கும் எது பொருந்துதோ அதைத்தான் நீ எடுத்துக்கணும்.
தயாநிதி ஒன்னும் ஒரு வருஷமா பார்க்கிற சம்மந்தியைப் பற்றி சொல்லலை பல வருஷமா பொறுப்பு தெரியாமல், இன்னக்கி அந்த பொறுப்பற்றத்தனத்தால அவர் பொண்ணோட படிப்பு கேள்விக்குறியா இருக்கு என்கிற ஆதங்கத்தில், அவரோட மைத்துனரைத் தான் சொல்கிறார்.
உங்க வீட்டுலதான் யாருக்கும் எடுத்துச்சொல்ல துப்பில்ல. அவராவது கேட்கட்டுமே. அப்பிடியாவது உங்கப்பாக்கு புத்தி வரட்டுமே. அதெப்படி? "நல்லவேளை புரிய வேண்டியவங்களுக்கு புரியலையா" -அருணாச்சலதுக்கு கொஞ்சமாவது மனசுல தயாநிதி பக்க நியாயம் புரிஞ்சா அவரே "மாப்பிள்ளை சொன்னது உன்னைத் தாண்டா உன் மகனை இல்லைன்னு ", கேசவனுக்கு நடு மண்டையில் உறைக்கிற மாதிரி நல்லா சொல்லி புரிய வெச்சுருக்கணும். யுவராஜுக்கும் அந்த வீட்டு மூத்த மாப்பிள்ளையை அவனோட அத்தை வீட்டுக்காரரை மதிக்க சொல்லி அவனோட attitude தப்புன்னு சுட்டிக்காட்டணும்.
எது எப்படியோ ஜமுனா படிப்பு போச்சு. இப்ப மூணு வருஷம் கழிச்சு குற்றஉணர்ச்சியே இல்லாமல் அவளை படிக்க சொல்றான் அதுவும் அதிகாரமா. பிள்ளையையும் UK கூட்டிட்டு போவேன்னு சொல்றானே.
இப்ப வரைக்கும் கணவன் -மனைவிக்கு தான் கோர்ட் divorce option வெச்சுருக்குன்னு நினைக்கிறன். பெத்தவங்களுக்கும் பிள்ளைங்களுக்கும் நடுவிலும் இப்படி ஒரு option இருந்தால் ஜமுனா அவளோட அம்மாவை முதலில் divorce பண்ணிடனும்.
Note:
இப்படியெல்லாம் update குடுக்குறப்ப தயவு செஞ்சு ஒரு warning - caution எல்லாம் முன்னாடியே குடுத்துருங்கப்பா. சுத்தமா முடியலை. கிட்டத்திட்ட உங்க ஒரு part update அளவுக்கு என்ன comment போட வெச்சு - குமுற வெச்சுடீங்க
...