கற்பூர முல்லை Episode 30

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 30

ரவியின் வீட்டில் அனைவரும் இவர்களின் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தனியறையில் ரவியும் திவ்யாவும் மட்டும் இருந்தனர். பால் சொம்புடன் உள்ளே வந்தவளை பார்த்ததும் ரவியோ ஒரு நிமிடம் வாய் அடைத்து நின்றான்.
திவ்யாவும் வெட்கப்பட்டு கொண்டு உள்ளே வர ரவியோ அவளை சமாதானப்படுத்தி முதலில் அமர வைத்தான்.

முன்பு பார்த்ததை விட இப்பொழுது மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறினான். அவளோ எதுவும் பேசாமல் தலைகுனிந்தவாறு அமைதியாக இருந்தாள்.

எப்படியோ நாம் நினைத்தவாறு நல்ல முறையில் நமது வீட்டில் திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர் என்று கூறினான் ரவி.

இனி அடுத்து உங்கள் வீட்டில் யாருக்கு திருமணம் என்று கேட்டால் ரவி அதற்கு திவ்யாவோ கார்த்தி அண்ணாவை விட அகிலன் அண்ணாவிற்குத்தான் திருமணம் நடக்க வேண்டும் கார்த்தி அண்ணாவிற்க்கோ இன்னும் கொஞ்சம் வருடம் இருக்கிறது ஆனால் அதில் நான் விற்கு வயது ஆகி கொண்டே போகிறது அதனால் அண்ணாவின் திருமணத்தை தான் முதலில் நடத்த வேண்டும் என்று கூறினாள்.

அதைக் கூறி விட்டு திரும்ப அவனிடம் ஏன் உங்கள் அக்கா பைரவி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் கேட்டாள்.
என் அக்காவிற்கு இப்பொழுது திருமணத்தில் நாட்டம் இல்லை மீறி நாங்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவேன் என்று கூறுகிறார் அதனால் தான் அவள் விருப்பப்படி விட்டு விட்டோம். நாங்களும் எவ்வளவோ சொல்லியும் அவள் அதை மறுத்துவிட்டார் சரி என்ன செய்வது என்று நாங்களும் அப்படியே விட்டு விட்டோம் என்று கூறினான்.

நீ சொல்வதைப் பார்த்தால் அடுத்தது உன் அண்ணாவிற்கு பெண் தேட வேண்டும் போல் என்று தெரிகிறது என்று கூறினான்.

அதற்கு அவசியமே இல்லை அண்ணா ஏற்கனவே ஒரு பெண்ணை பார்த்து விட்டார். அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர் அதனால் அவர்களின் திருமணம் நடக்க அவ்வளவு சிரமம் இருக்காது என்று கூறினாள்.

ஓ.....அப்படியா பரவாயில்லை என்று சிரித்தவாறு கூறினான்.

சரி இனி நமது விஷயத்திற்கு வருவோம் என்று கூறினான். அவன் கூற வருவதே புரிந்ததும் திவ்யா வெக்கத்தில் தலை குனிந்தாள்.

அவர்கள் திருமண வாழ்க்கையில் முதல் அத்தியாயம் அங்கு தொடங்கியது.
**************

அடுத்த நாள் மறு விட்டு விருந்துக்கு செல்வதற்காக அனைவரும் கிளம்பினர்.
அகிலன் வீட்டினர் அனைவரையும் அழைத்து இருந்ததால் அவர்கள் குடும்பமே சென்றது அது பைரவிக்கு மிகவும் வசதியாக போயிற்று.

அகிலன் வீட்டில் குமாரும் பவியும் இன்னும் ஊருக்கு செல்லவில்லை. மறு வீட்டு விருந்து முடித்துக் கொண்டு செல்லலாம் என்று அகிலன் குடும்பத்தினர் கூறியதால் அவர்கள் இருவரும் செல்லவில்லை.

மதியம் விருந்து எல்லாம் முடித்து, ரவி அகிலன் என இரு குடும்பமும் ஒன்றாக வெளியே அமர்ந்திருந்தார்கள்.
ரவியின் அம்மாதான் பேச்சை முதலில் ஆரம்பித்தார். அடுத்தது யாருக்கு திருமணம் என்று அகிலன் குடும்பத்தினரிடம் கேட்டார். அதற்கு அகிலனின் அம்மா, கண்டிப்பாக அடுத்த அகிலனுக்கு தான் திருமணம் என்று கூறினார்.

திருமணத்தைப் பற்றி அம்மா பேசியதும் அகிலன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனாலும் அவன் தீர்மானத்து இருந்தது என்னவோ கார்த்தியின் திருமணத்திற்கு தான். ஆனால் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தான்.

ஓ...அப்படியா.... என்று கேட்டவாறு ரவியின் அம்மா பேச்சை ஆரம்பித்தார்.எல்லோரும் இங்கு இருக்கிறீர்கள் அதனால் இப்போதுதான் அதை சொல்வதற்கு தகுந்த நேரம் என அதை சொல்லலானாள்.

ரவியின் அம்மா எந்த ஒலிவும் மறைவும் இல்லாமல் எங்கள் பெண் பைரவிக்கு உங்கள் மகன் அகிலனை மிகவும் பிடித்திருக்கிறது. திருமணமே வேண்டாம் என்று இருந்தவள் உங்கள் மகனை பார்த்ததும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். அதனால் மேற்கொண்டு அவர்கள் திருமண விஷயத்தைப் பற்றி பேசலாம் என்று இருக்கிறேன் என்று கூறினாள்.

அதைக் கேட்டதும் அகிலனின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகியது. அதைவிட அகிலன் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத்தான் இந்தப் பெண் தன்னையே சுற்றி சுற்றி வந்தாளா....? என்று நினைத்தான்.

ரவிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை நேற்று இரவு தான் திவ்யா அக்கினேன் காதலைப் பற்றி கூறினார். இப்பொழுது அவன் அம்மா இப்படி கூறுவாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.
நேற்று இரவே பைரவி அம்மாவிடம் பேசி இருப்பாள் போலும். அதனால்தான் இவர்கள் இப்போது இந்த பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று நினைத்தான்.

அதைக் கேட்டு அகலனின் அப்பா தியாகராஜன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். இதில் எங்கள் விருப்பம் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் அகிலனின் விருப்பம் தான் ஆனால் அவன் இப்பொழுது வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று கூறினார். அதைக் கேட்டதும் பைரவி மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்.

மலரும்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top