Jeevitha Ram prabhu
Active Member
அகிலனுக்கு முழுக்க முழுக்க தமிழின் ஞாபகமாகவே இருந்தது. இவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அவ்வளவு பேசியும் தமிழ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது அவனுக்கு கொஞ்சம் குற்ற உணர்வாகவே இருந்தது.
அங்கே தமிழின் நிலையும் இதே மனநிலையில் இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் என்ன எதுவென்று எதுவும் கேட்காமல் இப்படி பேசி விட்டானே என்று கவலையாய் இருந்தாள். என்னதான் மனதிற்கு சமாதானம் சொன்னாலும் மனது அதை ஏற்க மறுத்தது அகிலன் அவ்வாறு பேசியது அவள் மனதை காயப்படுத்தவே செய்தது.
அங்கே அகிலன் குமாரிடம் இதை பற்றி கூறினான் அதற்கு குமார் கண்டிப்பாக அப்படி எல்லாம் இருக்காது ஏனென்றால் தமிழ் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று வாதிட்டான் தமிழை பார்த்தாலும் அப்படி செய்பவள் போல் தெரியவில்லை என்று கூறினான். அகிலனுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. அதை உறுதி செய்வதற்காகவே அடுத்த நாள் காலையில் மறுபடியும் தமிழில் ஆபீசுக்கு சென்றான்.
அங்கே வரவேற்பில் யாரும் இல்லாததால் நேரடியாகவே தமிழில் அறைக்கு சென்றான். ஆனால் தமிழ் அங்கே இருக்க வில்லை. சட்டென்று ஏதேச்சியாக திரும்பியவனுக்கு நேற்று வந்திருந்த இளைஞன் கொடுத்த பூ குப்பையில் கிடப்பது தெரிய வந்தது. அதை பார்த்ததும் மனது சந்தோஷப்பட்டது. அந்த குப்பையில் கிடந்த பூவை பார்த்ததும் அகிலன் தமிழுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டான். நேற்று அது தெரியாமல் அவளை அவ்வளவு தூரம் காயப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தினான்.
அதே நினைப்போடு கதவை திறந்தவனின் கண்களில் எதிர் பட்டாள் தமிழ். அவன் நிற்பதை சட்டை செய்யாமல் தமிழ் அவளது சீட்டில் வந்து அமர்ந்தாள். அவனும் அவளது அனுமதி இன்றி எதிர் சீட்டில் வந்து அமர்ந்தான். நேற்று அவ்வளவு தூரம் பேசினீர்களே இன்றைக்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டாள் தமிழ். தவறுதான் உன் மனம் அறியாமல் பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்டான். பேசியதெல்லாம் பேசி விட்ட பிறகு இனி மன்னிப்பு எதற்கு என்றாள் அவள். இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நீங்கள் செல்லலாம் என்று கூறினாள் தமிழ்.
சரி நான் தான் தப்பாக பேச விட்டேன் நீ தான் என்னை விரும்பவில்லையே பிறகு எதற்கு நான் அப்படி பேசியதற்கு என்னிடம் கோபப்பட வேண்டும் என்று கேட்டான் அவன். உண்மையிலேயே அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தான் அவன் மேல் வைத்திருந்த காதலினால் தான் கோபப்படுகிறோம் என்று உணர்ந்தாள் . ஆனால் அகிலனுக்கு இதுவே அவள் தன்னை காதலிக்கிறாள் என்று உறுதிப்படுத்தியது.
பிறகு அவன் சிரித்தவாறு எழுந்தான். எழுந்து தமிழில் அருகில் வந்து நான் உன்னை விரும்புகிறேன் நீயும் என்னை விரும்புகிறாய். ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். கூடிய விரைவில் அதை உன் வாயாலேயே ஒப்புக் கொள்வாய் என்று சொல்லிவிட்டு ஐ லவ் யூ தமிழ்......என்று கூறி சென்றான்.
அதன் பிறகு சில நாட்கள் சென்றது தமிழும் ஆபீசில் பிஸியாக இருந்தாள்.அதற்கு அடுத்து அகிலனும் அவளை பார்க்க வரவில்லை.
பிறகு ஒரு நாள் மாலையில் ஆபீசுக்கு வந்தான் அகிலன். அவன் வந்த போது ஆபீசில் யாரும் இருக்கவில்லை. கதவை தட்டியவாறு தமிழின் அறைக்கு சென்றான். அவள் கையில் ஏதோ பைலை பார்த்தவாறு நின்றிருந்தாள் .இவனை பார்த்ததும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதை பார்த்ததும் அகிலனுக்கு உற்சாகமாக்கி கொண்டது. அவளிடம் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
சட்டென அவளின் அருகில் சென்றான். அவள் வேண்டாம் என்று சொல்லியவாறு பின்னால் சென்றான் இவன் எதுவும் பேசாமல் அவளின் முன்னேறி சென்றான். பின்னால்
சுவர் தடுக்கவும் நகர முடியாமல் அவள் அப்படியே நின்றாள். அவனுக்கு அது வசதியாய் போனது அவளின் இருபுறமும் கையை ஊன்றியவாறு அவளை நேருக்கு நேர் பார்த்தான். அவள் அவன் பார்வையை பார்க்க முடியாமல் கீழே பார்த்தாள்.
இப்பொழுது அவன் பேசினான் உண்மையிலேயே என்னை மறுப்பதற்கு என்ன காரணம் என கேட்டான்.. அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் அவள் கூறும் காரணத்தை கண்டிப்பாக இவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று தோன்றியது. பிறகு அவனே கூறினான் ஏதோ காரணம் இருக்கிறது ஆனால் அதை நீ என்னிடம் மறைக்கிறாய் கூடிய விரைவில் அதை கண்டுபிடித்து சரி செய்வேன் என்று கூறி சென்றான்.
பின் அதற்கு அடுத்த நாட்களில் அகிலன் காயுவின் நம்பரை அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக கண்டுபிடித்து அவளுக்கு கால் செய்து இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். இதை கேட்ட காயூவிற்கு தமிழ் மறைத்த சில விஷயங்களும் தெரிய வந்தது. சரி இதை நானே வந்து சரி செய்கிறேன் என்று கூறினாள். பின்னர் நீங்கள் இங்கு வருவது நீங்கள் இங்கு வந்து சேரும் வரை தமிழுக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறினான்.அவளும் அதை ஒப்புக் கொண்டாள்
காயூ இங்க வருவதாக கூறியதும் அகிலனுக்கு நிம்மதியாக இருந்தது கண்டிப்பாக காயூ சொன்னால் இவள் கேட்பாள் என்று நினைத்தான்.
இதுக்கு இடையில் அகிலன் குடும்பத்தினர் அகிலனிடம் காதலை பற்றி கேட்டதும் அவன் எதுவும் சொல்லாமல் மழுப்பி கொண்டிருந்தான் கூடிய விரைவில் பதில் சொல்கிறேன் என்று கூறினான்.
மலரும்.....
அங்கே தமிழின் நிலையும் இதே மனநிலையில் இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் என்ன எதுவென்று எதுவும் கேட்காமல் இப்படி பேசி விட்டானே என்று கவலையாய் இருந்தாள். என்னதான் மனதிற்கு சமாதானம் சொன்னாலும் மனது அதை ஏற்க மறுத்தது அகிலன் அவ்வாறு பேசியது அவள் மனதை காயப்படுத்தவே செய்தது.
அங்கே அகிலன் குமாரிடம் இதை பற்றி கூறினான் அதற்கு குமார் கண்டிப்பாக அப்படி எல்லாம் இருக்காது ஏனென்றால் தமிழ் அப்படிப்பட்ட பெண் இல்லை என்று வாதிட்டான் தமிழை பார்த்தாலும் அப்படி செய்பவள் போல் தெரியவில்லை என்று கூறினான். அகிலனுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. அதை உறுதி செய்வதற்காகவே அடுத்த நாள் காலையில் மறுபடியும் தமிழில் ஆபீசுக்கு சென்றான்.
அங்கே வரவேற்பில் யாரும் இல்லாததால் நேரடியாகவே தமிழில் அறைக்கு சென்றான். ஆனால் தமிழ் அங்கே இருக்க வில்லை. சட்டென்று ஏதேச்சியாக திரும்பியவனுக்கு நேற்று வந்திருந்த இளைஞன் கொடுத்த பூ குப்பையில் கிடப்பது தெரிய வந்தது. அதை பார்த்ததும் மனது சந்தோஷப்பட்டது. அந்த குப்பையில் கிடந்த பூவை பார்த்ததும் அகிலன் தமிழுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டான். நேற்று அது தெரியாமல் அவளை அவ்வளவு தூரம் காயப்படுத்தி விட்டோமே என்று மனம் வருந்தினான்.
அதே நினைப்போடு கதவை திறந்தவனின் கண்களில் எதிர் பட்டாள் தமிழ். அவன் நிற்பதை சட்டை செய்யாமல் தமிழ் அவளது சீட்டில் வந்து அமர்ந்தாள். அவனும் அவளது அனுமதி இன்றி எதிர் சீட்டில் வந்து அமர்ந்தான். நேற்று அவ்வளவு தூரம் பேசினீர்களே இன்றைக்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டாள் தமிழ். தவறுதான் உன் மனம் அறியாமல் பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்டான். பேசியதெல்லாம் பேசி விட்ட பிறகு இனி மன்னிப்பு எதற்கு என்றாள் அவள். இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நீங்கள் செல்லலாம் என்று கூறினாள் தமிழ்.
சரி நான் தான் தப்பாக பேச விட்டேன் நீ தான் என்னை விரும்பவில்லையே பிறகு எதற்கு நான் அப்படி பேசியதற்கு என்னிடம் கோபப்பட வேண்டும் என்று கேட்டான் அவன். உண்மையிலேயே அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தான் அவன் மேல் வைத்திருந்த காதலினால் தான் கோபப்படுகிறோம் என்று உணர்ந்தாள் . ஆனால் அகிலனுக்கு இதுவே அவள் தன்னை காதலிக்கிறாள் என்று உறுதிப்படுத்தியது.
பிறகு அவன் சிரித்தவாறு எழுந்தான். எழுந்து தமிழில் அருகில் வந்து நான் உன்னை விரும்புகிறேன் நீயும் என்னை விரும்புகிறாய். ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். கூடிய விரைவில் அதை உன் வாயாலேயே ஒப்புக் கொள்வாய் என்று சொல்லிவிட்டு ஐ லவ் யூ தமிழ்......என்று கூறி சென்றான்.
அதன் பிறகு சில நாட்கள் சென்றது தமிழும் ஆபீசில் பிஸியாக இருந்தாள்.அதற்கு அடுத்து அகிலனும் அவளை பார்க்க வரவில்லை.
பிறகு ஒரு நாள் மாலையில் ஆபீசுக்கு வந்தான் அகிலன். அவன் வந்த போது ஆபீசில் யாரும் இருக்கவில்லை. கதவை தட்டியவாறு தமிழின் அறைக்கு சென்றான். அவள் கையில் ஏதோ பைலை பார்த்தவாறு நின்றிருந்தாள் .இவனை பார்த்ததும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதை பார்த்ததும் அகிலனுக்கு உற்சாகமாக்கி கொண்டது. அவளிடம் வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
சட்டென அவளின் அருகில் சென்றான். அவள் வேண்டாம் என்று சொல்லியவாறு பின்னால் சென்றான் இவன் எதுவும் பேசாமல் அவளின் முன்னேறி சென்றான். பின்னால்
சுவர் தடுக்கவும் நகர முடியாமல் அவள் அப்படியே நின்றாள். அவனுக்கு அது வசதியாய் போனது அவளின் இருபுறமும் கையை ஊன்றியவாறு அவளை நேருக்கு நேர் பார்த்தான். அவள் அவன் பார்வையை பார்க்க முடியாமல் கீழே பார்த்தாள்.
இப்பொழுது அவன் பேசினான் உண்மையிலேயே என்னை மறுப்பதற்கு என்ன காரணம் என கேட்டான்.. அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் அவள் கூறும் காரணத்தை கண்டிப்பாக இவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று தோன்றியது. பிறகு அவனே கூறினான் ஏதோ காரணம் இருக்கிறது ஆனால் அதை நீ என்னிடம் மறைக்கிறாய் கூடிய விரைவில் அதை கண்டுபிடித்து சரி செய்வேன் என்று கூறி சென்றான்.
பின் அதற்கு அடுத்த நாட்களில் அகிலன் காயுவின் நம்பரை அவனுக்கு தெரிந்தவர்கள் மூலமாக கண்டுபிடித்து அவளுக்கு கால் செய்து இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். இதை கேட்ட காயூவிற்கு தமிழ் மறைத்த சில விஷயங்களும் தெரிய வந்தது. சரி இதை நானே வந்து சரி செய்கிறேன் என்று கூறினாள். பின்னர் நீங்கள் இங்கு வருவது நீங்கள் இங்கு வந்து சேரும் வரை தமிழுக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறினான்.அவளும் அதை ஒப்புக் கொண்டாள்
காயூ இங்க வருவதாக கூறியதும் அகிலனுக்கு நிம்மதியாக இருந்தது கண்டிப்பாக காயூ சொன்னால் இவள் கேட்பாள் என்று நினைத்தான்.
இதுக்கு இடையில் அகிலன் குடும்பத்தினர் அகிலனிடம் காதலை பற்றி கேட்டதும் அவன் எதுவும் சொல்லாமல் மழுப்பி கொண்டிருந்தான் கூடிய விரைவில் பதில் சொல்கிறேன் என்று கூறினான்.
மலரும்.....