அருமையான பதிவு மகி.தேனு கால் புண்ணாகிடுச்சே என சுமதி அவ காலை பார்த்து அழுதுட்டு இருக்கா,தீனா, தேனு அழறதை பார்த்ததும் என்னனு கேட்காமலேயே சுமதிய திட்டிட்டு என்ன சொல்லிப்புட்டேன்னு இப்ப அழறேன்னு கேட்கறானே.
சுமதிக்காக கதவு,ஜன்னல் போட்டது போல தேனுக்காக தரைக்கு பூசு வேலை செய்வானா.
கதவு போட காசு செலவானதுக்கே கோபமா இருக்கும் தீனாவோட ஆளுங்க வீட்டுக்காக செலவு பண்ணா எதாவது பிரச்சனை பண்ணுவாங்களோ.
சுமதி ஒரு வழியா அவள் அண்ணனிடம் நடந்ததை சொல்லிட்டா.தங்கையின் வாழ்க்கை தீனாவுடன் தான் என்றானதும்,அவன் என்ன வேலை செய்கிறான் என அண்ணனாக பொறுப்பாக கேட்க, பாவம் சுமதிக்கு தான் பதில் தெரியலை.
அண்ணனை பார்த்து விட்டு சந்தோஷமாக வருபவளுக்கு தீனா செய்யும் வேலை பற்றி தெரிய வர,
அதிர்ச்சியடையும் சுமதி,இனி தீனா வீட்டில் இருப்பாளா .தேனுவை விட்டு பிரியாமல் இருக்க தீனா மாறுவானா.