Shakthimagizhvathani
Member
சில்லு சில்லுனு ஆளை தூக்குற காற்று வீசும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்ல நல்லா விபூதி பட்ட போட்டுட்டு பரப்ரம்மமேன்னு விஸ்வநாதர கும்பிட்டுட்டு இருக்காரு நம்ம ஹீரோ ஷிவா. அவர பத்தி இன்ட்ரோ சொல்லனும்னா உலகத்துல இருக்குற நல்லவனெல்லாம் இவர் தான் குத்தகைக்கு எடுத்திருக்காருனு நெனப்பு, அவரோட அந்த நெனப்பு பொழப்ப கெடுக்கும்னு சொல்ல தான் நம்ம விஸ்வநாதர் ஒரு ஆள ஏற்பாடு பண்ண போறாரு.
ஷிவா வீட்டுக்கு முதல் வாரிசு அவருக்கு அப்பறம் வசந்த், ஷர்மிளா. ஷிவாவோட அப்பா வைத்தியநாதன் போஸ்ட் மாஸ்டர் ஆளே இல்லாத போஸ்ட் ஆபீஸ்ல நானும் ஆஃபீஸ்ர்னு உக்காந்துஇருப்பர் அம்மா பத்திரகாளி சாரி பரமேஸ்வரி ஆஃபீஸற் காசுல நல்ல ஜாலி யா ஊரைசுத்தீட்டு வாழ்க்கை வாழ்வதற்க்கே அப்படின்னு சொல்லறவங்க. ஷிவா எல்லாரைப்போல நானும் என்ஜினீயர் ஆகாரனு சொல்லிட்டு மின் மற்றும் மின்னணு பொறியாளர் அதாங்க EEE படிச்சிட்டு எல்லார மாதிரியும் அதுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலையில இருக்காரு.
சரி இப்போ கதைக்கு போவோம் நம்ம ஷிவா இவ்வளவு ஸ்ரத்தயா சாமிய கும்பிடறாருன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு அதுஎன்னணா நம்ம ஹீரோவுக்கு பொண்ணு பாக்குறாங்க. கடவுளே நல்ல அழகான அடக்கமான மனைவி அமையணும்னு வேண்டிக்கத்தான் ஆனா அந்த காசி விஸ்வநாதரோ மகனே உன்னை அடக்கம் பண்ண தான் ஒரு பொண்ணு ரெடியா இருக்கான்னு புன்சிரிப்போட சொல்லிட்டு இருக்காரு.
சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த நம்ம ஷிவாகிட்ட
வைத்தியநாதன் : ஷிவா இந்த வருஷத்துக்குள்ள உனக்கு கல்யாணம் முடிச்சிடனும் னு இருக்கன் அதனால இந்த மேட்ரிமோனி வெபிசிடில உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா சொல்லு, நமக்கு தோது பட்டுச்சுன்னா மேற்கொண்டு பேசலாம்
ஷிவா : சரி பா
பரமேஸ்வரி: பொண்ணு எனக்கும் புடிக்கணும் , வேலைக்கு போற பொண்ணுலாம் வேண்ணாம் நல்ல அடக்கமா வீட்டு வேலை செஞ்சிட்டு குடும்பத்தையும் நம்ம ஷிவாவையும் நல்ல கவனிச்சிக்கிட்டா போதும்
வைத்தியநாதன்: இப்படிதான் எங்க அம்மாவும் ஆசைப்பட்டு உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க ஆனா நீ வாரத்துல நாலு நாள் உன் சீனேகிதிங்க கூட தான ஊர் சுத்துற
பரமேஸ்வரி : என்ன வசவு சொல்லலான உங்களுக்கு துக்கம் வராதே , ஷிவா கண்ணு நீ சொல்லு அம்மாக்கு புடிச்ச பொண்ணு தான உனக்கும் புடிக்கும்.
ஷிவா : கண்டிப்பா உனக்கு புடிச்ச பொண்ணைதான் நான் கட்டிப்பன் மா
பரமேஸ்வரி : அப்படி சொல்லுடா ஏன் சிங்கக்குட்டி , பாத்தீங்களா நம்ம புள்ளைய அவன் எப்பவுமே ரொம்ப நல்லவன் . அம்மா பேச்ச மதிச்சுதான் நடப்பான்
வைத்தியநாதன் : அடியே நானும் அப்படிதான் இருந்தன் எப்போ உன்ன கல்யாணம் பண்ணினானோ அப்போல இருந்து உன் பேச்ச தான் கேக்குறன்
பரமேஸ்வரி : ஆமா அப்படியே கேட்டுட்டாலும்
வைத்தியநாதன் : சரி சரி சண்டைக்கு தயாராகாத எங்க நாம பெத்த மத்த ரெண்டையும் காணோம்
பரமேஸ்வரி : வசந்த் தூங்குறான் ஷர்மி காலேஜ் கு ரெடி ஆகிட்டு இருக்கா
இவங்க இப்படி பேசிட்டு இருக்குற நேரத்துல நம்ம ஷிவா சத்தம் இல்லாம மடிக்கணினிய தூக்கிகிட்டு அவன் ரூமுக்கு போய்ட்டான் பொண்ண சைட் அடிக்க சாரி பொண்ண பாக்க
ஷிவா மேட்ரிமோனி வெப்சைட் login பண்ணி பாத்த முதல பொண்ணு நல்ல அழகா அவனுக்கு புடிச்ச க்ரீன் கலர் சுடிதார்ல கூர்மையான கண்ணோட அவன பாத்துட்டு சிரிச்சிட்டு இருந்தா அந்த பொண்ணோட டீடைல்ஸ் பாக்கலாம் னு நேனைச்ச்சு உள்ள போனா அந்த பொண்ணு பேரே நம்ம ஷிவாக்கு ரொம்ப புடிச்சிடுகிச்சு என்ன பேர் பொருத்தம் னு நினைச்சிட்டு அவளை பாத்துட்டே இருந்தான் அப்போ போட்டோல இருந்த "ஷக்தி" நமக்கு வாய்ச்ச அடிமை இவன்தான் அப்படினு சிரிச்சிட்டு இருந்தா.
ஷிவா வீட்டுக்கு முதல் வாரிசு அவருக்கு அப்பறம் வசந்த், ஷர்மிளா. ஷிவாவோட அப்பா வைத்தியநாதன் போஸ்ட் மாஸ்டர் ஆளே இல்லாத போஸ்ட் ஆபீஸ்ல நானும் ஆஃபீஸ்ர்னு உக்காந்துஇருப்பர் அம்மா பத்திரகாளி சாரி பரமேஸ்வரி ஆஃபீஸற் காசுல நல்ல ஜாலி யா ஊரைசுத்தீட்டு வாழ்க்கை வாழ்வதற்க்கே அப்படின்னு சொல்லறவங்க. ஷிவா எல்லாரைப்போல நானும் என்ஜினீயர் ஆகாரனு சொல்லிட்டு மின் மற்றும் மின்னணு பொறியாளர் அதாங்க EEE படிச்சிட்டு எல்லார மாதிரியும் அதுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வேலையில இருக்காரு.
சரி இப்போ கதைக்கு போவோம் நம்ம ஷிவா இவ்வளவு ஸ்ரத்தயா சாமிய கும்பிடறாருன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு அதுஎன்னணா நம்ம ஹீரோவுக்கு பொண்ணு பாக்குறாங்க. கடவுளே நல்ல அழகான அடக்கமான மனைவி அமையணும்னு வேண்டிக்கத்தான் ஆனா அந்த காசி விஸ்வநாதரோ மகனே உன்னை அடக்கம் பண்ண தான் ஒரு பொண்ணு ரெடியா இருக்கான்னு புன்சிரிப்போட சொல்லிட்டு இருக்காரு.
சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த நம்ம ஷிவாகிட்ட
வைத்தியநாதன் : ஷிவா இந்த வருஷத்துக்குள்ள உனக்கு கல்யாணம் முடிச்சிடனும் னு இருக்கன் அதனால இந்த மேட்ரிமோனி வெபிசிடில உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா சொல்லு, நமக்கு தோது பட்டுச்சுன்னா மேற்கொண்டு பேசலாம்
ஷிவா : சரி பா
பரமேஸ்வரி: பொண்ணு எனக்கும் புடிக்கணும் , வேலைக்கு போற பொண்ணுலாம் வேண்ணாம் நல்ல அடக்கமா வீட்டு வேலை செஞ்சிட்டு குடும்பத்தையும் நம்ம ஷிவாவையும் நல்ல கவனிச்சிக்கிட்டா போதும்
வைத்தியநாதன்: இப்படிதான் எங்க அம்மாவும் ஆசைப்பட்டு உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க ஆனா நீ வாரத்துல நாலு நாள் உன் சீனேகிதிங்க கூட தான ஊர் சுத்துற
பரமேஸ்வரி : என்ன வசவு சொல்லலான உங்களுக்கு துக்கம் வராதே , ஷிவா கண்ணு நீ சொல்லு அம்மாக்கு புடிச்ச பொண்ணு தான உனக்கும் புடிக்கும்.
ஷிவா : கண்டிப்பா உனக்கு புடிச்ச பொண்ணைதான் நான் கட்டிப்பன் மா
பரமேஸ்வரி : அப்படி சொல்லுடா ஏன் சிங்கக்குட்டி , பாத்தீங்களா நம்ம புள்ளைய அவன் எப்பவுமே ரொம்ப நல்லவன் . அம்மா பேச்ச மதிச்சுதான் நடப்பான்
வைத்தியநாதன் : அடியே நானும் அப்படிதான் இருந்தன் எப்போ உன்ன கல்யாணம் பண்ணினானோ அப்போல இருந்து உன் பேச்ச தான் கேக்குறன்
பரமேஸ்வரி : ஆமா அப்படியே கேட்டுட்டாலும்
வைத்தியநாதன் : சரி சரி சண்டைக்கு தயாராகாத எங்க நாம பெத்த மத்த ரெண்டையும் காணோம்
பரமேஸ்வரி : வசந்த் தூங்குறான் ஷர்மி காலேஜ் கு ரெடி ஆகிட்டு இருக்கா
இவங்க இப்படி பேசிட்டு இருக்குற நேரத்துல நம்ம ஷிவா சத்தம் இல்லாம மடிக்கணினிய தூக்கிகிட்டு அவன் ரூமுக்கு போய்ட்டான் பொண்ண சைட் அடிக்க சாரி பொண்ண பாக்க
ஷிவா மேட்ரிமோனி வெப்சைட் login பண்ணி பாத்த முதல பொண்ணு நல்ல அழகா அவனுக்கு புடிச்ச க்ரீன் கலர் சுடிதார்ல கூர்மையான கண்ணோட அவன பாத்துட்டு சிரிச்சிட்டு இருந்தா அந்த பொண்ணோட டீடைல்ஸ் பாக்கலாம் னு நேனைச்ச்சு உள்ள போனா அந்த பொண்ணு பேரே நம்ம ஷிவாக்கு ரொம்ப புடிச்சிடுகிச்சு என்ன பேர் பொருத்தம் னு நினைச்சிட்டு அவளை பாத்துட்டே இருந்தான் அப்போ போட்டோல இருந்த "ஷக்தி" நமக்கு வாய்ச்ச அடிமை இவன்தான் அப்படினு சிரிச்சிட்டு இருந்தா.
தொடரும்