ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்... எல்லாரும் எப்படி இருக்கீங்க... என்னை மறந்துருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்... இதோ புது கதையுடன் உங்களை சந்திக்க வந்துட்டேன்... "உன்மேல் காதல் தானா என்னுயிரே" - யாருக்கு யாரு மேல காதல்... வாங்க தெரிஞ்சுப்போம்...
அதிகாலை ஐந்தரை மணிக்கு அவள் வைத்த அலாரம் அதன் கடமையை சரியாக செய்ய, குளிருக்கு முகம் துவங்கி உடல் முழுவதையும் போர்வைக்குள் அடக்கி படுத்திருந்தவள், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறே துயில் கலைந்தாள்.
அவள் ரஞ்சனா… ஐந்தரை அடிக்கும் சற்று குறைவான உயரமும் சராசரி பெண்ணின் எடையும் கொண்டவள். தூக்கம் கலைந்து எழுந்திருந்தாலும், சோபையான அழகுடன் இருந்தவள், எழுந்ததும் தன் முதல் வேலையாக இரு கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். இது அவளின் அன்னை சொல்லித் தந்த பழக்கம். இன்று வரை பின்பற்றி வருகிறாள்.
அதன் பின்பு, வேகவேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள், ட்ராக் பாண்ட் – டி-ஷிர்ட்டுடன் குளிருக்கு இதமாக ஜெர்கின்னையும் அணிந்து கொண்டு, காலை நேர ஜாக்கிங்கிற்கு தயாரானாள்.
அதே அறையில் இருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தவள், இருவரில் ஒருவர் கூட இவளின் சத்தத்திற்கு விழிக்காததால், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கினாள்.
முதலில் சற்று மெதுவாக நடந்தவள், போகப் போக வேகமெடுத்து ஓடினாள். எதிரில் தென்பட்டவர்களிடம் ஒரு சினேக புன்னகை சிந்தியவாறே சென்று கொண்டிருந்தாள்.
அந்த அதிகாலை நேரம், எந்தவித இரைச்சலும் இல்லாமல், அமைதியாக இருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றாள். அப்போது, பக்கத்து தெரு அண்ணாச்சியின் மளிகைக் கடையை, அந்த கடையில் வேலை செய்பவன் திறக்க, அவனைத் திட்டிக் கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அந்த அண்ணாச்சி. அவனும் அவரைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவரிட்ட வேலையை செய்தான். அதைக் கண்டவளிற்கு எப்போதும் போல் புன்னகை விரிந்தது. சற்று தள்ளி, வீதியை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் எப்போதும் போல், வேலையில் ஒரு கண்ணை வைத்திருந்தாலும், அங்கு நடந்து செல்வோரிடமும் ஒரு கண்ணை வைத்திருந்தார். ரஞ்சனா அவரைக் கடக்கும் போது மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளிக்க, அவரும் அதை புன்னகையோடு ஏற்றார்.
இப்படி நாள்தோறும் அவள் காணும் காட்சிகளையே கண்டாலும், எப்போதும் இல்லாத வகையில் இன்று சிலர் புதிதாக அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தனர். அவர்கள் அனைவரும் கல்லூரியில் கால் வைத்திருக்கும் ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ என்பது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தெரிந்தது.
ரஞ்சனா மட்டுமில்லை, அங்கு வழக்கமாக வந்து செல்லும் பலரும் அவர்களை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல, அவர்களோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் யாருக்காகவோ காத்திருக்கின்றனர் என்பது புரிந்தது ரஞ்சனாவிற்கு.
அவர்களைக் கடக்கும் போது, அவளின் செவியைத் தீண்டிய, “ஹே நல்லா தெரியுமா டி… அவன் இந்த வழியா தான் ஜாக்கிங் போவானா…” என்ற செய்தியில், அவர்களின் காத்திருப்பு எதற்கென்று புரிந்ததால், இருபக்கமும் தலையையாட்டி மீண்டும் ஒரு புன்னகையுடன் கடந்து சென்றாள்.
அவளும் அவர்களைப் போலவே, நான்கு வருடங்களுக்கு முன்பு நின்றிருந்தவள் தானே… ஒரே ஒரு வித்தியாசம், அவளின் தோழிக்கு துணையாக வந்திருந்தாள்… இல்லை இல்லை இழுத்து வரப்பட்டிருந்தாள்.
அவற்றையெல்லாம் நினைத்தவாறே அவள் எப்போதும் செல்லும் பூங்காவிற்கு வந்திருந்தாள். அவ்வளவு நேர ஓட்டத்தின் காரணமாக அவளிற்கு மூச்சு வாங்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அப்போது அவளருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவள், அங்கு அமர்ந்திருந்த ராதா ஆன்டியைக் கண்டு, “ஹாய் ராதா ஆன்ட்டி…” என்றாள்.
“ஹே ரஞ்சு… என்ன நீ மட்டும் வந்திருக்க..? எங்க உன்கூட வர அந்த தர்ஷுவைக் காணோம்…” என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்.
“அவளுக்கு உடம்புக்கு முடியல ஆன்ட்டி. அதான் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா…” என்றாள் ரஞ்சனா.
“ஓ… நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு மா… இப்போலாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்குறீங்க… நாங்களாம் அந்த காலத்துல…” என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சனாவைக் காப்பதற்கென்றே அங்கு வந்தார் அந்த ராதையின் கிருஷ்ணன்.
“ஹே ரஞ்சும்மா… ரொம்ப நாளாச்சு பார்த்து…” என்று ராதாவின் அருகே அவரை இடித்துக் கொண்டு அமர்ந்தார்.
அவரை முறைத்த ராதாவின் பார்வையிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கை உணர்ந்தவள், இது எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால் சிரித்துக் கொண்டே, “ஹாய் அங்கிள்… நீங்க தான் ரெண்டு நாள் வேலைன்னு ஊருக்கு போய்டீங்க…” என்றாள்.
“ஆமா ஆமா… ஊருக்கு போய் உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்…” என்று ரஞ்சனாவிடம் கண்ணடித்துக் கூறினார்.
இது ராதாவின் உடமையுணர்வை தூண்டி விட்டு சமரசம் செய்வதற்காக கிருஷ்ணா நடத்தும் நாடகம் என்று ரஞ்சனாவிற்கு நன்றாக தெரியும். அவளும் சிரிப்புடன் அவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பறம் என் ஸ்வீட்டி எப்படி இருக்கா..?” என்று அவர் கேட்க, அவ்வளவு நேரம் பொறுமையைப் பிடித்துக் கொண்டிருந்த ராதாவை விட்டு அவரின் பொறுமை பறந்து போனது.
“லேட்டாச்சு நான் வீட்டுக்கு போறேன், ரஞ்சு.” என்றவர் கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே நடந்தார்.
அவர் சென்றதும், “அங்கிள், இன்னைக்கு வீட்டுல உங்களுக்கு பெரிய்ய்ய சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு போல…” என்று ரஞ்சனா கிண்டலாகக் கேட்டாள்.
“ஹாஹா அந்த சர்ப்ரைஸ்ஸை வாலாண்டியரா வாங்கிகுற ஆள் நானா தான் இருக்கும்… ஹ்ம்ம் அவ திட்டிட்டே இருந்தா கூட பரவாயில்லை. ஆனா என்கூட பேசாமயிருந்தா, அன்னைக்கு நாளே நல்லா இருக்காது.” என்று உணர்ந்து கூற, அவர்களின் அன்யோனிய வாழ்வை என்றும் போல் இன்றும் ரசித்தாள் ரஞ்சனா.
“சரி ரஞ்சும்மா… நானும் கிளம்புறேன்… இல்லைன்னா உங்க ஆன்ட்டி கிட்ட இதுக்கும் எக்ஸ்ட்ராவா திட்டு வாங்க வேண்டியதிருக்கும்…” என்றவாறே அவரின் வீட்டை நோக்கி சென்றார்.
ராதா – கிருஷ்ணா தம்பதியரை ரஞ்சனாவிற்கு கடந்த நான்கு வருடங்களாக பழக்கம். இதோ இதே பூங்காவில் தான் முதல் முறை அவர்களை சந்தித்தாள். கள்ளம் கபடமில்லாத அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவர்களுடன் நட்புடன் இருக்கிறாள்.
அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் அவளை ஈர்த்தது, அவர்களின் காதல் தான். திருமணமாகி இருபது வருடங்கள் கழிந்தும், ஒருவரின் மேல் மற்றவருக்கு கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருப்பதைக் கண்டு பல சமயங்களில் வியந்திருக்கிறாள். அவர்களுக்கு குழந்தை இல்லையென்றாலும், இன்று வரை ஒருவருக்கு மற்றவர் துணை என்று வாழ்ந்து வருபவர்களைக் கண்டு அவர்களின் மேல் ரஞ்சனாவிற்கு தனி ‘கிரேஸ்’ என்று கூட சொல்லலாம்.
இப்படியெல்லாம் தன் வாழ்விலும், காதலைக் கொட்டிக் கொடுக்க ஒருவன் வருவானா என்று அடிக்கடி அவளின் மனதில் தோன்றும். படிப்பை காரணமாக்கி, அலைபாயும் மனதை ஒரு தட்டு தட்டி, அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாள். ஆனால், அதற்கெல்லாம் அடங்காத அவளின் மனதோ, கற்பனையில் ஒருவனை உருவாக்கி அவனுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தது.
இன்றும் ராதா – கிருஷ்ணாவின் காதலைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக வாசலை நோக்க, அங்கு வந்து கொண்டிருந்தான் அவன்.
ஆறடி உயரம், ஆப்பிள் சருமம், அதைக் கரடுமுரடாகக் காட்டும் அடர்ந்த தாடி, சிரிக்கும் கண்கள், கூர் மூக்கு, தாடிக்குள் மறைந்திருக்கும் உதடு… என்று அவனை அவளறியாமலேயே அளவெடுத்துக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.
‘ஹ்ம்ம்… அந்த தாடி மட்டுமில்லைன்னா, நல்லா அமுல் பேபி மாதிரி இருந்துருப்பான்.’ என்று அவளின் மனம் கூவ, அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள், ‘ச்சே… என்னது இது… யாரோ ஒருத்தனை இப்படி பார்த்துட்டு இருக்கேன்… இதுல ‘அமுல் பேபி’ன்னு கமெண்ட் வேற…’ என்று அவளையே திட்டிக் கொண்டவள், மீண்டும் அவன் வரும் திசையை நோக்க, அங்கு அவனின் பின்னே அந்த ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ குழு வந்து கொண்டிருந்தது.
‘ஓ… இவனுக்கு தான் வெயிட் பண்ணாங்களா…’ என்று நினைத்தவளைக் கலைத்தது அலைப்பேசியின் அலார சத்தம்.
மணியைப் பார்த்தவள், நேரமாகி விட்டதை உணர்ந்து, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு ஓடினாள்.
*****
சிட்னி, ஆஸ்திரேலியா…
வானுயர கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்டு நகரின் மையப்பகுதியிலுள்ள இந்த மத்திய வர்த்தக மாவட்டம் என்னும் இடம் தான் சிட்னி நகரின் வர்த்தக நாடியாகும்.
அதில் ஒரு கட்டிடத்தில் நுழைந்தது அந்த அதிநவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார். அதிலிருந்து இறங்கினான் அவன். பிசினஸ் உலகில் எஸ்.ஜே என்று அழைக்கப்படும் சஞ்சய்… சஞ்சய் பிரசாத், ‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸின்’ தற்போதைய உரிமையாளன்.
‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் தன் தடத்தை பதித்துள்ளது. கே.பி என்னும் பெயரில் கீழ் பல தொழில்கள் உள்ளன. அவையனைத்தையும் ஒற்றை ஆளாக நிர்வகிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அந்த சாதனையைத் தன் இருபத்தியேழாவது வயதிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறான் எஸ்.ஜே.
தொழில் உலகில் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே ஆணழகன் தான். அவனின் உருவம் பார்த்தவுடன் அனைவரையும் ஈர்த்து விடும் தான். ஆனால் அவனின் கடினமான முகமோ, ஒருவரையும் அருகில் வரக்கூட அனுமதிக்காது. அந்த அளவிற்கு கற்பாறை போன்று இறுகியிருக்கும் அவனின் முகம். இறுகிப்போன அவன் இலகுவது யாரிடத்திலோ…
அதுவரை சற்று இலகுவாக இருந்த அவ்விடம், அவனின் வரவில், கண்ணசைக்கும் நேரத்தில் மந்திரம் போட்டது போல் சுறுசுறுப்பாக இயங்க, அதைக் கவனித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், கம்பீரமாக நடந்து சென்றான் எஸ்.ஜே.
அவன் வந்ததை அறிந்ததும், அவ்விடத்திற்கு ஓடி வந்தான் அவனின் பி.ஏ கோகுல். கோகுலைப் பார்த்தவனின் விழிகளில் இருந்த கோபத்தைக் கண்டுகொண்டவன் போல, அவனே வாக்குமூலத்தைக் கொடுக்க தயாராக, அவனை கையசைவில் தடுத்த எஸ்.ஜே, “டோன்ட் வேஸ்ட் மை டைம் இன் யுவர் லேம் எஸ்க்யூசஸ்… இன்னொரு தடவை இப்படி லேட்டா வந்தா, யூ வில் பி ஃபயர்ட்…” என்று பற்களைக் கடித்தவாறே கூறியவன், அதிர்ச்சியாக நின்றிருந்த கோகுலை கடந்து சென்றான்.
“அரை செகண்ட் லேட்டா வந்ததுக்கே ஃபயர்ட்டா! இனி வாட்ச்சை நானோ செகண்ட்டுக்கு தான் செட் பண்ணனும் போல…” என்று எப்போதும் போல தன் தலையெழுத்தை சபித்துக் கொண்டு புலம்பியவனை, தோளில் தட்டிய ஒருத்தி, “சார் கான்ஃபெரன்ஸ் ரூம் போய் ஒரு நிமிஷம் ஆச்சு…” என்று ஆங்கிலத்தில் கூற, கோகுல் பதறிக் கொண்டு ஓடினான்.
‘டிக் டிக்’ என்ற கடிகார சத்தம் மட்டுமே அங்கு கேட்க, அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும், ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற பீதியிலேயே அமர்ந்திருந்தனர்.
அவர்களை மேலும் சற்று நேரம் பீதியில் ஆழ்த்திய பின்பே, அறையின் கதவைத் திறந்து அவர்கள் வந்தனர். ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக கட்டுமானத் துறையில் பெயர்பெற்ற ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி ஜோன்ஸுடன் அவரின் மகன் நிக்கோலஸ் ஜோன்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவர் வந்திருந்தனர்.
சிட்னியில் பிரம்மாண்டமாக கட்டவிருக்கும் ‘ஸ்கைஸ்க்ரேப்பர்’ எனப்படும் வானுயர்ந்த கட்டிடத்தை, கே.பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸுடன் இணைந்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காகத் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. என்ன தான் பாரம்பரியமான நிறுவனமாக இருந்தாலும், ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ தற்போதைய நிலை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவர்களின் நிலையை உயர்த்திக் கொள்ள இதுவொரு அரிய வாய்ப்பு என்பதால் ஜோன்ஸ் நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உள்ளே நுழைந்ததும், ஹென்றி ஜோன்ஸ் ஆர்ப்பாட்டமாக எஸ்.ஜேயுடன் கைகுலுக்கியவர், “உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு எஸ்.ஜே.” என்று ஆங்கிலத்தில் கூறினார்.
“வெல்… ஆனா எனக்கு உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க விருப்பமில்ல மிஸ்டர். ஜோன்ஸ்…” என்று முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக கூறினான் எஸ்.ஜே.
“வாட்… ஆர் யூ கிட்டிங்..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஜோன்ஸ்.
உதட்டை கேலியாக வளைத்தவன், “பிசினஸ்ல நான் எப்பவும் காமெடியோ காம்ப்ரோமைஸோ பண்றதில்ல மிஸ்டர். ஜோன்ஸ். அதான் நான் இந்த இடத்துல இருக்கேன்…” என்று எஸ்.ஜே கூறியதும், நிக்கோலஸ் கோபமாக, “மைண்ட் யுவர் வர்ட்ஸ் எஸ்.ஜே…” என்றான்.
இப்போது எஸ்.ஜேயின் கண்கள் நிக்கோலஸை நோக்க, அவன் ஏதோ சொல்ல வந்த நேரம், மகனைத் தடுத்த ஜோன்ஸ், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…” என்றவாறே அவ்வறையை விட்டு வெளியே சென்றார்.
அதையும் இதழ் வளைந்த கேலிச் சிரிப்புடன் பார்த்தவனின் உள்ளமோ உலைக்கலானாக கொதித்தது. வேகவேகமாக அந்த கட்டிடத்தின் மேல்மாடியை அடைந்தவன், தனக்கென பிரேத்யேகமாக உருவாக்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு சுவரில் மாட்டியிருந்த சட்டமிட்ட புகைப்படத்தை நோக்கியவன், “வொய் டிட் யூ லீவ் மீ அல்லோன்..?” என்று கத்தினான்.
*****
காதல் 1
அதிகாலை ஐந்தரை மணிக்கு அவள் வைத்த அலாரம் அதன் கடமையை சரியாக செய்ய, குளிருக்கு முகம் துவங்கி உடல் முழுவதையும் போர்வைக்குள் அடக்கி படுத்திருந்தவள், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறே துயில் கலைந்தாள்.
அவள் ரஞ்சனா… ஐந்தரை அடிக்கும் சற்று குறைவான உயரமும் சராசரி பெண்ணின் எடையும் கொண்டவள். தூக்கம் கலைந்து எழுந்திருந்தாலும், சோபையான அழகுடன் இருந்தவள், எழுந்ததும் தன் முதல் வேலையாக இரு கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். இது அவளின் அன்னை சொல்லித் தந்த பழக்கம். இன்று வரை பின்பற்றி வருகிறாள்.
அதன் பின்பு, வேகவேகமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவள், ட்ராக் பாண்ட் – டி-ஷிர்ட்டுடன் குளிருக்கு இதமாக ஜெர்கின்னையும் அணிந்து கொண்டு, காலை நேர ஜாக்கிங்கிற்கு தயாரானாள்.
அதே அறையில் இருந்த மற்ற இருவரையும் திரும்பிப் பார்த்தவள், இருவரில் ஒருவர் கூட இவளின் சத்தத்திற்கு விழிக்காததால், அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கினாள்.
முதலில் சற்று மெதுவாக நடந்தவள், போகப் போக வேகமெடுத்து ஓடினாள். எதிரில் தென்பட்டவர்களிடம் ஒரு சினேக புன்னகை சிந்தியவாறே சென்று கொண்டிருந்தாள்.
அந்த அதிகாலை நேரம், எந்தவித இரைச்சலும் இல்லாமல், அமைதியாக இருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றாள். அப்போது, பக்கத்து தெரு அண்ணாச்சியின் மளிகைக் கடையை, அந்த கடையில் வேலை செய்பவன் திறக்க, அவனைத் திட்டிக் கொண்டே வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அந்த அண்ணாச்சி. அவனும் அவரைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவரிட்ட வேலையை செய்தான். அதைக் கண்டவளிற்கு எப்போதும் போல் புன்னகை விரிந்தது. சற்று தள்ளி, வீதியை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் எப்போதும் போல், வேலையில் ஒரு கண்ணை வைத்திருந்தாலும், அங்கு நடந்து செல்வோரிடமும் ஒரு கண்ணை வைத்திருந்தார். ரஞ்சனா அவரைக் கடக்கும் போது மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளிக்க, அவரும் அதை புன்னகையோடு ஏற்றார்.
இப்படி நாள்தோறும் அவள் காணும் காட்சிகளையே கண்டாலும், எப்போதும் இல்லாத வகையில் இன்று சிலர் புதிதாக அவளின் பார்வை வட்டத்தில் விழுந்தனர். அவர்கள் அனைவரும் கல்லூரியில் கால் வைத்திருக்கும் ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ என்பது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தெரிந்தது.
ரஞ்சனா மட்டுமில்லை, அங்கு வழக்கமாக வந்து செல்லும் பலரும் அவர்களை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல, அவர்களோ அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் யாருக்காகவோ காத்திருக்கின்றனர் என்பது புரிந்தது ரஞ்சனாவிற்கு.
அவர்களைக் கடக்கும் போது, அவளின் செவியைத் தீண்டிய, “ஹே நல்லா தெரியுமா டி… அவன் இந்த வழியா தான் ஜாக்கிங் போவானா…” என்ற செய்தியில், அவர்களின் காத்திருப்பு எதற்கென்று புரிந்ததால், இருபக்கமும் தலையையாட்டி மீண்டும் ஒரு புன்னகையுடன் கடந்து சென்றாள்.
அவளும் அவர்களைப் போலவே, நான்கு வருடங்களுக்கு முன்பு நின்றிருந்தவள் தானே… ஒரே ஒரு வித்தியாசம், அவளின் தோழிக்கு துணையாக வந்திருந்தாள்… இல்லை இல்லை இழுத்து வரப்பட்டிருந்தாள்.
அவற்றையெல்லாம் நினைத்தவாறே அவள் எப்போதும் செல்லும் பூங்காவிற்கு வந்திருந்தாள். அவ்வளவு நேர ஓட்டத்தின் காரணமாக அவளிற்கு மூச்சு வாங்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அப்போது அவளருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவள், அங்கு அமர்ந்திருந்த ராதா ஆன்டியைக் கண்டு, “ஹாய் ராதா ஆன்ட்டி…” என்றாள்.
“ஹே ரஞ்சு… என்ன நீ மட்டும் வந்திருக்க..? எங்க உன்கூட வர அந்த தர்ஷுவைக் காணோம்…” என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தார்.
“அவளுக்கு உடம்புக்கு முடியல ஆன்ட்டி. அதான் ரெஸ்ட் எடுத்திட்டு இருக்கா…” என்றாள் ரஞ்சனா.
“ஓ… நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லு மா… இப்போலாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்குறீங்க… நாங்களாம் அந்த காலத்துல…” என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சனாவைக் காப்பதற்கென்றே அங்கு வந்தார் அந்த ராதையின் கிருஷ்ணன்.
“ஹே ரஞ்சும்மா… ரொம்ப நாளாச்சு பார்த்து…” என்று ராதாவின் அருகே அவரை இடித்துக் கொண்டு அமர்ந்தார்.
அவரை முறைத்த ராதாவின் பார்வையிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கை உணர்ந்தவள், இது எப்போதும் நடக்கும் நிகழ்வென்பதால் சிரித்துக் கொண்டே, “ஹாய் அங்கிள்… நீங்க தான் ரெண்டு நாள் வேலைன்னு ஊருக்கு போய்டீங்க…” என்றாள்.
“ஆமா ஆமா… ஊருக்கு போய் உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன்…” என்று ரஞ்சனாவிடம் கண்ணடித்துக் கூறினார்.
இது ராதாவின் உடமையுணர்வை தூண்டி விட்டு சமரசம் செய்வதற்காக கிருஷ்ணா நடத்தும் நாடகம் என்று ரஞ்சனாவிற்கு நன்றாக தெரியும். அவளும் சிரிப்புடன் அவர்களின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பறம் என் ஸ்வீட்டி எப்படி இருக்கா..?” என்று அவர் கேட்க, அவ்வளவு நேரம் பொறுமையைப் பிடித்துக் கொண்டிருந்த ராதாவை விட்டு அவரின் பொறுமை பறந்து போனது.
“லேட்டாச்சு நான் வீட்டுக்கு போறேன், ரஞ்சு.” என்றவர் கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே நடந்தார்.
அவர் சென்றதும், “அங்கிள், இன்னைக்கு வீட்டுல உங்களுக்கு பெரிய்ய்ய சர்ப்ரைஸ் காத்திட்டு இருக்கு போல…” என்று ரஞ்சனா கிண்டலாகக் கேட்டாள்.
“ஹாஹா அந்த சர்ப்ரைஸ்ஸை வாலாண்டியரா வாங்கிகுற ஆள் நானா தான் இருக்கும்… ஹ்ம்ம் அவ திட்டிட்டே இருந்தா கூட பரவாயில்லை. ஆனா என்கூட பேசாமயிருந்தா, அன்னைக்கு நாளே நல்லா இருக்காது.” என்று உணர்ந்து கூற, அவர்களின் அன்யோனிய வாழ்வை என்றும் போல் இன்றும் ரசித்தாள் ரஞ்சனா.
“சரி ரஞ்சும்மா… நானும் கிளம்புறேன்… இல்லைன்னா உங்க ஆன்ட்டி கிட்ட இதுக்கும் எக்ஸ்ட்ராவா திட்டு வாங்க வேண்டியதிருக்கும்…” என்றவாறே அவரின் வீட்டை நோக்கி சென்றார்.
ராதா – கிருஷ்ணா தம்பதியரை ரஞ்சனாவிற்கு கடந்த நான்கு வருடங்களாக பழக்கம். இதோ இதே பூங்காவில் தான் முதல் முறை அவர்களை சந்தித்தாள். கள்ளம் கபடமில்லாத அவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவர்களுடன் நட்புடன் இருக்கிறாள்.
அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் அவளை ஈர்த்தது, அவர்களின் காதல் தான். திருமணமாகி இருபது வருடங்கள் கழிந்தும், ஒருவரின் மேல் மற்றவருக்கு கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருப்பதைக் கண்டு பல சமயங்களில் வியந்திருக்கிறாள். அவர்களுக்கு குழந்தை இல்லையென்றாலும், இன்று வரை ஒருவருக்கு மற்றவர் துணை என்று வாழ்ந்து வருபவர்களைக் கண்டு அவர்களின் மேல் ரஞ்சனாவிற்கு தனி ‘கிரேஸ்’ என்று கூட சொல்லலாம்.
இப்படியெல்லாம் தன் வாழ்விலும், காதலைக் கொட்டிக் கொடுக்க ஒருவன் வருவானா என்று அடிக்கடி அவளின் மனதில் தோன்றும். படிப்பை காரணமாக்கி, அலைபாயும் மனதை ஒரு தட்டு தட்டி, அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாள். ஆனால், அதற்கெல்லாம் அடங்காத அவளின் மனதோ, கற்பனையில் ஒருவனை உருவாக்கி அவனுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தது.
இன்றும் ராதா – கிருஷ்ணாவின் காதலைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் எதேச்சையாக வாசலை நோக்க, அங்கு வந்து கொண்டிருந்தான் அவன்.
ஆறடி உயரம், ஆப்பிள் சருமம், அதைக் கரடுமுரடாகக் காட்டும் அடர்ந்த தாடி, சிரிக்கும் கண்கள், கூர் மூக்கு, தாடிக்குள் மறைந்திருக்கும் உதடு… என்று அவனை அவளறியாமலேயே அளவெடுத்துக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.
‘ஹ்ம்ம்… அந்த தாடி மட்டுமில்லைன்னா, நல்லா அமுல் பேபி மாதிரி இருந்துருப்பான்.’ என்று அவளின் மனம் கூவ, அப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள், ‘ச்சே… என்னது இது… யாரோ ஒருத்தனை இப்படி பார்த்துட்டு இருக்கேன்… இதுல ‘அமுல் பேபி’ன்னு கமெண்ட் வேற…’ என்று அவளையே திட்டிக் கொண்டவள், மீண்டும் அவன் வரும் திசையை நோக்க, அங்கு அவனின் பின்னே அந்த ‘டீனேஜ் கேர்ள்ஸ்’ குழு வந்து கொண்டிருந்தது.
‘ஓ… இவனுக்கு தான் வெயிட் பண்ணாங்களா…’ என்று நினைத்தவளைக் கலைத்தது அலைப்பேசியின் அலார சத்தம்.
மணியைப் பார்த்தவள், நேரமாகி விட்டதை உணர்ந்து, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு ஓடினாள்.
*****
சிட்னி, ஆஸ்திரேலியா…
வானுயர கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்டு நகரின் மையப்பகுதியிலுள்ள இந்த மத்திய வர்த்தக மாவட்டம் என்னும் இடம் தான் சிட்னி நகரின் வர்த்தக நாடியாகும்.
அதில் ஒரு கட்டிடத்தில் நுழைந்தது அந்த அதிநவீன மெர்சிடிஸ் பென்ஸ் கார். அதிலிருந்து இறங்கினான் அவன். பிசினஸ் உலகில் எஸ்.ஜே என்று அழைக்கப்படும் சஞ்சய்… சஞ்சய் பிரசாத், ‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸின்’ தற்போதைய உரிமையாளன்.
‘கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளிலும் தன் தடத்தை பதித்துள்ளது. கே.பி என்னும் பெயரில் கீழ் பல தொழில்கள் உள்ளன. அவையனைத்தையும் ஒற்றை ஆளாக நிர்வகிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் அந்த சாதனையைத் தன் இருபத்தியேழாவது வயதிலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறான் எஸ்.ஜே.
தொழில் உலகில் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே ஆணழகன் தான். அவனின் உருவம் பார்த்தவுடன் அனைவரையும் ஈர்த்து விடும் தான். ஆனால் அவனின் கடினமான முகமோ, ஒருவரையும் அருகில் வரக்கூட அனுமதிக்காது. அந்த அளவிற்கு கற்பாறை போன்று இறுகியிருக்கும் அவனின் முகம். இறுகிப்போன அவன் இலகுவது யாரிடத்திலோ…
அதுவரை சற்று இலகுவாக இருந்த அவ்விடம், அவனின் வரவில், கண்ணசைக்கும் நேரத்தில் மந்திரம் போட்டது போல் சுறுசுறுப்பாக இயங்க, அதைக் கவனித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், கம்பீரமாக நடந்து சென்றான் எஸ்.ஜே.
அவன் வந்ததை அறிந்ததும், அவ்விடத்திற்கு ஓடி வந்தான் அவனின் பி.ஏ கோகுல். கோகுலைப் பார்த்தவனின் விழிகளில் இருந்த கோபத்தைக் கண்டுகொண்டவன் போல, அவனே வாக்குமூலத்தைக் கொடுக்க தயாராக, அவனை கையசைவில் தடுத்த எஸ்.ஜே, “டோன்ட் வேஸ்ட் மை டைம் இன் யுவர் லேம் எஸ்க்யூசஸ்… இன்னொரு தடவை இப்படி லேட்டா வந்தா, யூ வில் பி ஃபயர்ட்…” என்று பற்களைக் கடித்தவாறே கூறியவன், அதிர்ச்சியாக நின்றிருந்த கோகுலை கடந்து சென்றான்.
“அரை செகண்ட் லேட்டா வந்ததுக்கே ஃபயர்ட்டா! இனி வாட்ச்சை நானோ செகண்ட்டுக்கு தான் செட் பண்ணனும் போல…” என்று எப்போதும் போல தன் தலையெழுத்தை சபித்துக் கொண்டு புலம்பியவனை, தோளில் தட்டிய ஒருத்தி, “சார் கான்ஃபெரன்ஸ் ரூம் போய் ஒரு நிமிஷம் ஆச்சு…” என்று ஆங்கிலத்தில் கூற, கோகுல் பதறிக் கொண்டு ஓடினான்.
‘டிக் டிக்’ என்ற கடிகார சத்தம் மட்டுமே அங்கு கேட்க, அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும், ‘என்ன நடக்கப் போகிறதோ’ என்ற பீதியிலேயே அமர்ந்திருந்தனர்.
அவர்களை மேலும் சற்று நேரம் பீதியில் ஆழ்த்திய பின்பே, அறையின் கதவைத் திறந்து அவர்கள் வந்தனர். ஆஸ்திரேலியாவில் பாரம்பரியமாக கட்டுமானத் துறையில் பெயர்பெற்ற ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி ஜோன்ஸுடன் அவரின் மகன் நிக்கோலஸ் ஜோன்ஸ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இருவர் வந்திருந்தனர்.
சிட்னியில் பிரம்மாண்டமாக கட்டவிருக்கும் ‘ஸ்கைஸ்க்ரேப்பர்’ எனப்படும் வானுயர்ந்த கட்டிடத்தை, கே.பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸுடன் இணைந்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காகத் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. என்ன தான் பாரம்பரியமான நிறுவனமாக இருந்தாலும், ‘ஜோன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸின்’ தற்போதைய நிலை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவர்களின் நிலையை உயர்த்திக் கொள்ள இதுவொரு அரிய வாய்ப்பு என்பதால் ஜோன்ஸ் நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ச்சியாகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உள்ளே நுழைந்ததும், ஹென்றி ஜோன்ஸ் ஆர்ப்பாட்டமாக எஸ்.ஜேயுடன் கைகுலுக்கியவர், “உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு எஸ்.ஜே.” என்று ஆங்கிலத்தில் கூறினார்.
“வெல்… ஆனா எனக்கு உங்க கூட பார்ட்னெர்ஷிப் வச்சுக்க விருப்பமில்ல மிஸ்டர். ஜோன்ஸ்…” என்று முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக கூறினான் எஸ்.ஜே.
“வாட்… ஆர் யூ கிட்டிங்..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஜோன்ஸ்.
உதட்டை கேலியாக வளைத்தவன், “பிசினஸ்ல நான் எப்பவும் காமெடியோ காம்ப்ரோமைஸோ பண்றதில்ல மிஸ்டர். ஜோன்ஸ். அதான் நான் இந்த இடத்துல இருக்கேன்…” என்று எஸ்.ஜே கூறியதும், நிக்கோலஸ் கோபமாக, “மைண்ட் யுவர் வர்ட்ஸ் எஸ்.ஜே…” என்றான்.
இப்போது எஸ்.ஜேயின் கண்கள் நிக்கோலஸை நோக்க, அவன் ஏதோ சொல்ல வந்த நேரம், மகனைத் தடுத்த ஜோன்ஸ், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப…” என்றவாறே அவ்வறையை விட்டு வெளியே சென்றார்.
அதையும் இதழ் வளைந்த கேலிச் சிரிப்புடன் பார்த்தவனின் உள்ளமோ உலைக்கலானாக கொதித்தது. வேகவேகமாக அந்த கட்டிடத்தின் மேல்மாடியை அடைந்தவன், தனக்கென பிரேத்யேகமாக உருவாக்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு சுவரில் மாட்டியிருந்த சட்டமிட்ட புகைப்படத்தை நோக்கியவன், “வொய் டிட் யூ லீவ் மீ அல்லோன்..?” என்று கத்தினான்.
*****